வந்திருக்கிறாள்.
மாத : அப்படியானால் அவள் வந்தது நியாயந்தானே! அதைக் கொடுப்பது நம்முடைய கடமை அல்லவோ வரட்டும்; அவள் இச்சையைப் பூர்த்தி செய்து அனுப்புகிறேன்.
(வஸந்தஸேனை ஒரு தோழியுடன் வருகிறாள்)
வஸ : ஸோமேசரே! எங்கே நம்முடைய ஜூதர்?
ஸோமே ; (தனக்குள்) ஆம் ஜூதர்தான்! நல்ல கெளரதையான பட்டப் பெயர் பெற்றார் (உரக்க) அம்மா! அவர் அதோ சோலைக்குள்ளிருக்கிறார்.
வஸ : அடி ஸகி! நான் அவரிடத்தில் எப்படிப் பேசுகிறது? எனக்கு மிகவும் வெட்கமாய் இருக்கிறதே!
தோழி : வெட்கமென்ன! ஜூதரே! நமஸ்காரம் என்று சொல்லுங்களேன்!
வஸ : அவ்விதம் சொல்ல எனக்குத் துணிவு எப்படி உண்டாகும்?
தோழி : சந்தர்ப்பத்தில் தைரியம் தானாக ஏற்படும்.
(வஸந்தஸேனை நாணத்துடன் மாதவராயரிடம் நெருங்கிப் புஷ்பங்களை அவர் பேரில் விசிறி) ஸ்வாமி! நமஸ்காரம்!
மாத : ஆகா! வஸந்தஸேனா! வரவேண்டும்! வரவேண்டும்! இந்த தினம் ஸுதினம் ஒரு நாளும் கிடைக்காத கெளரவம் இன்று கிடைத்ததல்லவா!
வஸ : இந்த உபசார வார்த்தைகள் என் வாயில் இருந்தல்லவோ வர வேண்டியவை!
ஸோமே : (மாதவராயரிடம் தனிமையில்) நண்பரே வந்த காரணமென்ன என்பதை விசாரிக்கட்டுமா!