Page 13 of 13
பிரதா : என்பூர்வ புண்ணியத்தின் பலனே நீ இன்று எனக்கு உதவி செய்தாய். அந்த ஜோசியன் சொன்னது உண்மையானால் நீ எனக்கு உயிர் கொடுத்ததற்குத் தகுந்த கைம்மாறு அப்பொழுது செய்து விடுகிறேன்.
சந்தா : உமக்கு ஈசுவரன் உதவி செய்து உம்முடைய இடர்களை நீக்குவான். நேரமாகிறது நான் போகிறேன்.
(வண்டியை மூடிவிட்டு வண்டிக்காரனுக்குச் சைகை செய்ய, அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு போய் விடுகிறான்.)
சந்தா : (தனக்குள் வீரகன் இப்பொழுது இராஜனிடம் போகிறான். அவனுக்கு முன்னால் நான் போய் அவன் பேரில் குற்றம் சாட்டுகிறேன். (போய் விடுகிறான்)
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...