(வீட்டு வாசலில் குணசீலன் வண்டியுடன் நிற்கிறான்)
குணசீலன் : (தனக்குள் அடாடா! வண்டிக்குள் போடும் மெத்தையைப் போட்டுக் கொண்டு வர மறந்து விட்டேன்; நல்ல வேளை; சமயத்தில் நினைவிற்கு வந்தது. எருதுகள் ஓடுவதற்குத் துடிக்கின்றன. வண்டியை நிறுத்தி விட்டுப் போக முடி யாது, என்னுடைய வீட்டிற்குப் *போய் மெத்தையைப் போட்டுக் கொண்டு இதோ வந்து விடுகிறேன். (வண்டியை ஓட்டிச் செல்கிறான்)
அந்த சமயத்தில் வீரசேனனுடைய வேலைக்காரன் பத்மநாபன் வேறொரு பெட்டி வண்டியை ஒட்டிக் கொண்டு மாதவராயருடைய வீட்டு வாசலிற்கு வருகிறான்.
பத்ம : (தனக்குள்) என்ன என்னுடைய முட்டாள்தனம்! எஜமான் அவசரமாகப் பூஞ்சோலைக்கு வண்டியைக் கொண்டு வரச் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தேன். வெற்றிலை புகையிலை எல்லாம் எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டேன். வாய்க்கு ஒன்றும் இல்லாமல் பித்துப் பிடித்த மாதிரி இருக்கிறது. கொஞ்சதூரத்தில் ஒரு கடைஇருந்ததைப் பார்த்தேன். இதோ மாதவராயருடைய மாளிகை இருக்கிறது. இதன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டுக் கடைக்குப் போய் வருகிறேன்.
(வண்டியை மாதவராயர் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டுப் போகிறான். அந்த சமயத்தின் வஸந்தஸேனையும் கோமளாவும் அதற்கு அருகில் வருகிறார்கள்.)
கோம: அம்மா! இதோ வண்டி தயாராக நிற்கிறது, ஏறிக் கொள்ளுங்கள். (வண்டியின் கதவைத் திறக்கிறாள்)
வஸ: (ஏறிக் கொண்டு) சரி! நீ உள்ளே போ; நான் கதவை மூடிக் கொள்கிறேன். நகைகளைக் கொடுத்ததைப் பற்றி என் னுடைய சகோதரி கோபித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள். அடி தோழி! நீ நம்முடைய வீட்டிற்குப் போய், நான் கூடிய சீக்கிரம் வருவதாகச் சொல்.
கோம : சரி! உத்தரவுப்படி செய்கிறேன். கதவை மூடிக் கொள்ளுங்கள்.