(Reading time: 17 - 33 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

முத்தமிடுகிறாள்) ஆகா! தன் பிதாவைப் போலவே இருக்கிறானே! குழந்தை எங்கே ஒரு முத்தங் கொடு.

   

குழ : (கோபத்தோடு) மாட்டேன் போ.

   

கோம : அவனுக்கு இப்பொழுது கோபவேளை; அடுத்த வீட்டு வாஸுதேவன் வைத்திருக்கும் பொன்வண்டியைப் போலத் தனக்கும் வேண்டுமாம். அதற்காக அழுகிறான். நான் செய்து கொடுத்த அந்த மண் வண்டி வேண்டாமாம்.

   

வஸ :பெற்றோரின் ஏழ்மையை குழந்தை எப்படி அறியப் போகிறது! கண்ணே! அழாதே; உனக்குப் பொன் வண்டி தானே வேண்டும்? நான் வாங்கித் தருகிறேன். எங்கே ஒரு முத்தங் கொடு.

   

குழ : அம்மா! இந்தம்மாள் யார்?

   

வஸ : நான் உன் பிதாவின் மேன்மைக் குணமான ஐசுவரியத்தினால் விலைக்கு வாங்கப்பட்ட பணிப்பெண்.

   

கோம : குழந்தை! இவர்களும் உன்னுடைய அம்மாள்தான்.

   

குழ : நீ பொய் சொல்லுகிறாய். என்னுடைய அம்மாளாய் இருந்தால், அழகான இத்தனை ஆடையாபரணம் இருக்காதே!

   

வஸ : ஆகா! நம்முடைய எஜமானர் செல்வாக்கில் இருந்ததை இவன் கண்டதில்லை அல்லவா! ஏழ்மை நிலைமையிலேயே பிறந்து வளர்ந்தவன். (தன்ஆபரணங்களை எல்லாம் கழற்றி விடுகிறாள்) இப்பொழுது பார்த்தாயா என்னை? இப்பொழுது உனக்கு நான் அம்மாளைப் போல இருக்கிறேனா? இந்த ஆபரணங்களை நீ எடுத்துக் கொண்டு போய் பொன் வண்டி வாங்கிக் கொள். (அவனை மார்பில் அனைத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் விடுகிறாள்)

   

குழ: நீதான் நகைகளைக் கொடுக்கிறதற்காக அழுகிறாயே! எனக்கு வேண்டாம் போ!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.