(Reading time: 22 - 43 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

வீர : ஏ கிழ முண்டமே! என்ன உளறுகிறாய்? நிஜத்தைச் சொல்.

   

தாய் : புரட்டனே! போ அப்பால்!

   

வீர : அடி! ஜாக்கிரதையாகப் பேசு. இவைகள் உன் மகளுடையவைகளா இல்லையா?

   

தாய் : நியாயாதிபதிகளே! தட்டான் தன்னுடைய ஸாமர்த்தியத்தினால் ஒன்றைப் போல மற்றொன்றைச் செய்யக் கூடும் அல்லவா! அவை என் மகளுடைய நகைகள் என்று நிச்சயமாக எப்படிச் சொல்லுவேன்?

   

நியா : ஆம். நிஜந்தான் அப்படியும் இருக்கலாம். மாதவராயரே இவ்வாபரணங்கள் உம்முடையவைகளா?

   

மாத : இல்லை.

   

நியா : அப்படியானால் யாருடைய ஆபரணங்கள்?

   

மாத : வஸந்தஸேனையினுடைய ஆபரணங்களே.

   

நியா : சொந்தக்காரியிடம் இருந்து உம்மிடம் இவை எப்படி வந்தன!

   

மாத : அவளே கொடுத்தாள்.

   

நியா : மாதவராயரே! நீர் உண்மையைப் பேச வேண்டும் என்பதை நான் திரும்பவும் சொல்ல வேண்டுவதில்லை. பொய் சொல்ல வேண்டாம்.

   

மாத : நான் சொல்வதைப் பொய்யென்று நினைப்பானேன்?

   

வீர : அவளைக் கொன்ற பிறகு அவ்வாபரணங்களை அவள் தேகம் கொடுத்தது? இவர் சொல்வதும் உண்மைதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.