(Reading time: 74 - 148 minutes)

மார்த்தாண்டம் வீட்டு உறவினர்கள், நிர்மலாவுக்கு சற்றே ஆறுதலான வார்த்தைகளை சொல்லி தேற்றிக்கொண்டிருந்தனர் . அமைச்சர் புண்ணியகோடியைப் பார்த்ததும் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் வைத்தனர் .

நீ ! ஒன்னும் கவலைப்படாதமா ! மார்த்தாண்டத்துக்கு ஒன்னும் ஆகாது.அவன் எங்கிருந்தாலும் அவனை கொண்டுவந்து பத்திரமா சேர்ப்பது என்னோட பொறுப்பு . உன்னோட வருத்தத்தில் எனக்கும் பங்குண்டு.இத்தனைக்கும் மேல அவன் என் நண்பன் . என்று ஆறுதல் கூறினார்.

போலீஸ் காரில், ACயை ஆன் பண்ணிட்டு, சீட்டில் சாய்ந்து கொண்டு, சிறிதே கண்ணயர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி. அந்த நேரம் பார்த்து அவர் பாக்கெட்டில் இருந்த செல்போன் கதறியது. எடுத்து பார்த்த அவர் ஹலோ என்றார். மறுமுனையில் இருந்த குரல் , சார் ! நான் சப்-இன்ஸ்பெக்டர் குமார் பேசுறேன் .

சொல்லுங்க  குமார் ! என்ன அவர trace பண்ணிடீங்களா ? .

நோ சார் ! இன்னும் இல்ல . இப்ப வரைக்கும் நாங்க மருதமலை TOபாரதியார் யுனிவர்சிட்டி ஏரியா fullah செக் பண்ணிட்டோம் . அந்த சிக்னல் இப்ப என்னாச்சு? எதுவுமே புடிபடல .

ஓ ! shit…   ஓகே குமார் .. நான் அதுக்குள்ள துடியலூர் எதிர்கட்சி தலைவர் சிங்காரத்த பார்த்துட்டு வந்துடறேன் என்று சொல்லி லைனை துண்டித்தார் ரவி.


துடியலூரின் எல்லையில் இருந்தது சஞ்சீவி பிரைவேட் ஹோஸ்பிடல் .மிகப் பிரமாண்டமாக, கிட்டத்தட்ட 25 ஏக்கர்களை வளைத்துப் போட்டபடி, இருந்தது அதனுடைய உட்கட்டமைப்பு . மருத்துவமனையின் உட்புற சுவர்களில், விருதுகளை கையில் பிடித்தபடி டாக்டர் குணசேகரனின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவரின் அறையில் இருந்து பெல் சப்தம் கேட்டது . அமர்ந்திருந்த நோயாளிகள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்ற வண்ணம் இருந்தனர் .குணசேகரன் . வயது 55இன் விளிம்பில் இருக்கும் . வட்டமான சிரித்த முகம் . ஒரு நோயாளியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை கம்ப்யூட்டர் திரையில் பார்த்துக் கொண்டிருந்த அவர் , சற்றே முகம் மாறினார் .உடனே பக்கத்தில் இருந்த டெலிபோனில் இருந்து எண்களைத் தட்டினார் .மறுமுனையில்  NURSE சகுந்தலா பேசினாள் .

சார் GOOD Evening ! . WHAT SHALL I DO FOR YOU NOW ?

டாக்டர் குணசேகரன் : போன மாசம் MARTURYக்கு போன நோயாளிகள் லிஸ்டும் , அவங்களோட மெடிக்கல் ரெகார்ட்ஸ்ம் எனக்கு வேணும் . ப்ளீஸ் GET இட் IMMEDIATELY .

NURSE சகுந்தலா : எஸ் சார் ! I ‘ll BE THERE IN 1௦ MINUTES WITH RECORDS .என்றவுடன் மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப் பட்டது .

குணசேகரன் கம்ப்யூட்டர் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் . 1௦ நிமிடத்தில் NURSE சகுந்தலா மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் உடன் டாக்டர் குணசேகரனின் அறையில் பிரவேசித்தாள் .ரிப்போர்ட்டை

கையில் வாங்கியவுடன் , பட படப்புடன் அதைப் புரட்டினார் . ஒவ்வொரு இறந்த நோயாளியின் ரிப்போர்டையும் , கவனமாகப் பார்த்த அவர் , சகுந்தலாவின் பக்கம் திரும்பி , சகுந்தலா ! நேத்து முத்துச்சாமிங்கற ஒரு PATIENT இறந்திருக்காரு . அதப் பத்தி என்ன நெனக்கிறீங்க ? அவுங்க WIFE கூட உங்ககிட்ட பேசிட்டு இருந்தாங்களே . என்ன பிரச்சனை ?

சகுந்தலா : ஓ ! அதுவா சார் ! . பாவம் சார் அந்த அம்மா ! . அந்த மனுஷன் சரியான தண்ணி பார்ட்டி . நேத்து எதோ வீட்டு பிரச்சனைல , கொஞ்சம் ஓவரா குடிச்சிருப்பான் போல இருக்கு . போதை தலைக்கேறி , மூச்சு பேச்சில்லாம போய் நேத்து நைட் ஹோஸ்பிடல்லயே இறந்துட்டான் சார் .

டாக்டர் குணசேகரன் : இஸ் இட் . ஹ்ம்ம் . ஓகே . இந்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் யார் HANDLE பண்றாங்க ? .

சகுந்தலா : சார் ! நான் தான் HANDLE பண்றேன் . என்கூட பிரியா , ஸ்ரீநிதி, மலர்விழின்னு மூணு புது NURSEங்க இருக்காங்க . அவங்க JOIN பண்ணி ஒரு மாசம் தான் ஆச்சு . இப்பத்தான் அவங்க TRANING அட்டென்ட் பண்ணிட்டு இருக்காங்க .

டாக்டர் குணசேகரன் : சற்று யோசித்த அவர் , “ஓகே . YOU CARRY ON .” என்றார் .

சகுந்தலா : எஸ் சார் ! என்று கதவை திறந்து விட்டு வெளியேறினாள் .

சகுந்தலா வெளியேறியதும் , குணசேகரனின் முகம் சற்றே சிவந்தது . 

 


நேரம் மதியம் 2 மணியை கடந்திருந்தது . டிவியை பார்த்துக்கொண்டே கம்மங்கூழை மிளகாயுடன் சேர்த்து, குடித்துக்கொண்டிருந்தார் சமூக ஆர்வலர் சற்குணம் .

வயது 60ஐ தொட்டிருக்கும் . பணி ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். கதர் வேட்டி கதர் சட்டையுடன் ஒரு மூக்குக் கண்ணாடி. கபாலத்தின் பல பகுதிகளை இயற்கை அன்னை தன் வசம் எடுத்துக்கொண்டிருந்தாள் போலும் ! ஆங்காங்கே நரைத்த முடிகள் தென்பட்டன. சமுதாயத்தின் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர் .  சற்குணம் தாத்தாவைப் பற்றி தெரியாதவர் யாரும் இல்லை என்கிற அளவுக்கு அந்த ஏரியாவில் பிரபலமாயிருந்தார் . நேரத்தை பார்த்துவிட்டு,  சேனல்களை ஒன்றன் பின் ஒன்றாக மாற்றிக்கொண்டிருந்த அவர், தலைப்புச்செய்திகள் என்று தன் கண்ணில் பட்டவுடன் டிவியின் சத்தத்தை அதிகப்படுத்தினார் . டிவி திரையில் தென்பட்ட, அந்த செய்தி வாசிக்கும் பெண், தன் வால்யுமை அதிகரித்தாள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.