அவைகள் கட்டாயம் அவர்களுக்கு கிடைக்க வழி செய்கிறது, அதில் தவறே வராது, ஆனால் அதைப் புரிந்துகொள்கிற சக்தி மனிதனுக்கு கிடையாது, புரிந்துகொள்கிற சக்தியை பெற்றிருந்த ஞானிகள் சொல்லியிருப்பதை நான் நம்புகிறேன். எப்போதும் சந்தோஷமாயிருக்கிறேன். என்னைப்பற்றி கவலைப்படாதீங்க! பூஜாவுக்கு நீங்க கொஞ்சம் தைரியமும் மனப்பக்குவமும் சொல்லிக்கொடுங்க!
எனக்கு பூஜாதான் குழந்தை! அந்தக் குழந்தை சிரிக்கிறதையும் அழறதையும் பார்க்கிறதே ஒரு தனி இன்பம்! அவள் தவறாக, எனக்கு பிள்ளை பெறாத குறை இருக்குமோன்னு, எப்படியாவது அந்தக் குறையை தீர்த்துவைக்க முயற்சிக்கிறாள். ஏங்குகிறாள். அவளை மனைவியாக அடைய புண்ணியம் செய்திருக்கிறேன்.............."
அவன் பேசியதை உள்ளிருந்தே கேட்டுக்கொண்டிருந்த பூஜா, ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள்.
" ராஜா! இனிமேல் நான் எந்தக் குறையுமில்லாமல் வாழ்வேன். இது சத்தியம்!"