"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்.." கைத்தொலை பேசி அலறியது.
கார் ஓட்டும்போது பேசலாமா? போலிஸ்காரன் இருந்தால் பிடித்துக் கொள்வானே. காலையில் வாங்கிய ஒரு சம்மன் போதாதா?
"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்.."விடாமல் அலறியது. மானேஜர் கூப்பிடுகிறானா? கூப்பிட்டு மீண்டும் மயிர் மட்டை என்று திட்டப்போகிறானா?
"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்.." அம்மா கூப்பிடுகிறாரோ? எதாகிலும் அவசரமாக இருக்குமா?
எடுத்துக் காதில் வைத்து "ஹலோ" என்றான்.
"ஹலோ, அங்க யாரு சுந்தரராசா பேசிறது?"
யாரோ புதிய குரல். "ஆமாங்க. யாரு பேசிறிங்க?"
ஸ்டியரிங் ஆடியது. வேகத்தைக் குறைத்தான். பின்னால் சில கழுதைகள் அலறின. ஓர் ஒரமாக நிறுத்தினான்.
"இங்க மணியம் வீட்டில இருந்து பேசிறோம்"
"மணியமா? எந்த மணியம்"
"அதான் வாத்தியாரு. ஒங்க நண்பர்"
"ஆமா, மணியம்!"
"அவரு நேத்து ஒரு ஆக்சிடன்டில தவறிட்டாருங்க!"