(Reading time: 22 - 43 minutes)
சிறுகதை - வந்திட்டியா ராசு! - ரெ.கார்த்திகேசு
சிறுகதை - வந்திட்டியா ராசு! - ரெ.கார்த்திகேசு

போய்விடவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழுந்து அடங்கியது.

   

காரைக் கிளப்பி வெளியேறியபோது எந்தப் பக்கமாகப் போனால் கிள்ளானுக்குப் போகும் சாலையில் போய்ச் சேரலாம் என்பது சரியாகத் தெரியவில்லை. ஜாலான் பூனுசைக் கடந்து சாட்டர்ட் பேங்கின் பக்கமாக கிள்ளான் ஆற்றின் மீது போகும் சிறிய பாலத்தில் ஏறி வந்தவுடன் அம்பாங் சாலையில் இருக்கக் கண்டான். அப்புறம்?

   

நின்று யோசிக்க முடியாது. பின்னால் கார்கள் ஓநாய்களாகத் துரத்திக் கொண்டிருந்தன. அவற்றை ஓட்டும் ஒவ்வொருவரின் முகத்திலும் உள்ள கண்கள் தீப்பிழம்புகளாகத் தெரிந்தன. காரை ஓட்டிக்கொண்டேதான் யோசிக்க வேண்டும்.

   

இந்த நகரில் சாலைகள் ஒரு ராட்சதக் கணவாயின் கால்களைப் போல எல்லாத் திசைகளிலும் ஓடுகின்றன. சுற்றுகின்றன. ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டிருக்கின்றன. மேடான் அது,லொரொங் இது, திங்காட், லெபோ. சுற்றிச் சுற்றி வந்தான். ஒரு லேனிலிருந்து இன்னொரு லேனுக்குப் போக முடியவில்லை. யாரும் இடம் தரவில்லை. முயன்றபோது ஒரு லோரியிலிருந்து ஒரு காட்டுப்பூனை சீறியது. முடியாமல் அதே லேனில் நேராகப் போனான்.

   

அரை மணி நேரத்துக்குப் பின் பெட்டாலிங் ஜயா என்ற அம்புக்குறி பார்த்து திரும்பினான். பி.ஜே. போய்விட்டால் அங்கிருந்து கிள்ளான் போய்விடலாம். எப்படியோ ஜாலான் கூச்சிங் வந்தது. போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் நின்றான். எந்த லேன் சரியான லேன் எனத் தெரியவில்லை. இரண்டு வேன்களுக்கு மத்தியில் தான் நின்றிருந்த லேனில் வேறு பக்கம் திரும்ப முடியாமல் தொடர்ந்த போது ஜாலான் பார்லிமென்டில் இருந்தான். ஜாலான் துன் பேராக் வந்த போது திரும்ப நகருக்குள் நுழைவதாகத் தெரிந்தது.

   

இது எப்படி? மீண்டும் ஜாலான் அம்பாங்கை நோக்கியா? புடுவை நோக்கியா? இப்படியே போய்..? தயங்கிய போது பின்னால் ஒரு சிங்கம் - சிங்கமாகத்தான் இருக்க வேண்டும் - "ப்ரோங்" என்று கர்ஜித்தது. ஒடுங்கிப் போனான்.

   

போ, போ, போய்க்கொண்டே இரு. நிற்காதே... எதாகிலும் ஒரு திக்கில்... திக்கு முக்கியம் அல்ல. ஊர்தல் நகருதல் முக்கியம். நகர்ந்து கொண்டே இரு.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.