புரியவில்லை. "தவறிட்டாருன்னா...?"
"செத்திட்டாருங்க. தலை நசுங்கிடிச்சி!"
"எப்படி? என்ன சொல்றிங்க..."
"இன்னைக்கு மூணு மணிக்கு அடக்கம் பண்றாங்க!"
ஒன்றும் பேசத் தெரியவில்லை. தொலைபேசியைப் பிடித்திருந்த கை நடுங்கியது.
"ஹலோ... கேக்குதுங்குளா? ஹலோ! ஹலோ!... இந்தச் சனியன் ஹென்ட் ஃபோன் எப்பவும்
இப்பிடித்தான். ஹலோ!"
"கேக்குது. நேத்தே ஏன் சொல்லல?"
"அது எனக்குத் தெரியாதுங்க! சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லியாச்சி. இப்பத்தான் அவுங்க அம்மா உங்க நம்பர் குடுத்து பேசச் சொன்னாங்க. சரியா மூணு மணிக்கு! "
"நீங்க யாரு? மணியம் அம்மா எங்க?"
"சொந்தக்காரங்க! அவங்க உடைஞ்சு போய்க் கிடக்கிறாங்க. மூணு மணிக்கு. வச்சிட்றன்!"
"மூணு மணி" மட்டும் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தது. இப்போ மணி என்ன? பதினொன்றரை. மூன்று மணிக்குப் பினாங்கு போய்ச் சேர முடியுமா?
போக வேண்டும். போகதான் வேண்டும். போகாமல் எப்படி? என்ன சொன்னார்கள்?
"செத்திட்டாருங்க. தலை நசுங்கிடிச்சி!"