சத்தத்திலும் தானே விழித்துக் கொண்டான். சிகிரெட் இல்லை. விஸ்கி இல்லை. வாய் காய்ந்திருந்தது. பணம் இல்லை. வாழ்க்கை இல்லை. சாக வேண்டும். என்ன வழி?
"யாரு?" என்ற குரல் கேட்டது. இருளில் ஒரு நிழல். "யாரு?"
"நாந்தான்!" என்றான் பாஸ்கரன்.
"அடப் பாருடா! இந்த எடத்துக்கும் பங்குக்கு வந்திட்டானுங்க!" என்றது குரல்.
"இது உன் இடமா?"
"ஆமா! இங்க வேற யாரும் வரமாட்டங்கள! நீ எப்படி வந்த?"
"நீ யாரு?"
"நீ யாரு?"
யோசித்தான். போதையில் புத்திசாலித் தனமாக வேறு பெயர்கள் மறைத்துச் சொல்ல முடியவில்லை. "நான் பாஸ்கரன். மேனேஜிங் டைரக்டர் பாஸ்கரன் என்ட் துரை இன்டஸ்ட்ரீஸ்"
"கிளேட் டு மீட் யு" என்றது குரல்.
"உக்காரு. நின்னா நிமிந்து பாக்க முடியில...!" என்றான் பாஸ்கரன்.
நிழல் உட்கார்ந்தது. தாடையில் கொஞ்சமாகத் தாடி படர்ந்த நடுத்தர மனிதனாக இருந்தான். கையில் காகிதத்தில் சுற்றி ஒரு பொட்டலம் வைத்திருந்தான்.
"இது என்னா, கையில?" பாஸ்கரன் கேட்டான்.