"என்னா வீடு! இன்னொருத்தர் வீட்டில ரூம் புடிச்சி இருக்கோம். லேட்டா போனா ஊட்டுக்காரன் தொறக்க மாட்டான்!"
"பொண்டாட்டி தொறக்க மாட்டாளா?"
"அவ இல்ல!"
"செத்துப் போய்ட்டாளா?"
"இல்ல! அவ தகப்பங்காரன் அவ மனசக் கலச்சி அவன் ஊட்டுக்குக் கூட்டிப் போயிட்டான்!"
"ஏன்?"
"எல்லாம் இதான்! ரொம்பக் குடிக்கிறனாம். குடிக்காம எப்படிங்க? வேல எத்தன கஷ்டம்? எவ்வளவு ஒடம்பு வலி! புரியிதா இந்தப் பொம்பிளைக்கு?"
"புரியாது நாகராஜ். பொம்பிளங்கள நம்பாதே! என் பொண்டாட்டி இன்னொரு ஊடு வாங்கிக் குடுங்கிறா. கார மாத்துங்கிறா. மெர்சடிஸ் வேணுமாம்! ஒவ்வொரு மாசமும் பார்ட்டி குடுக்கணுங்கிறா. அவளாலியே பேங்கில கடன் வாங்கி நான் கெட்டேன். இப்ப கம்பெனியும் போச்சி. வீட்டுக்குப் போனா என்ன நாய் மாதிரி நடத்துவா நாகராஜ். பொம்பிளங்க ரொம்ப மோசம் நாகராஜ். பேராசைப் பேய்ங்க. புருஷன உயிரோட பிச்சிப் பிச்சித் திங்கிற பிசாசுங்க! என்ன சொல்ற?"
"ஆமாங்க!" என்றான் நாகராஜ். "ஆனா என் பொண்டாட்டி அப்பிடி இல்லங்க. அவ நல்லவ. அவ குடும்பந்தான் அவ மனசக் கலைக்கிறாங்க. அவ அப்பன், அம்மா, அண்ணன் எல்லாரும் மனசக் கலைச்சிட்டாங்க. என்னமோ மருந்து வச்சிட்டாங்க! பிரிச்சிட்டாங்க"
"போய் கூப்பிட்டியா?"
"கூப்பிட்டேன்! ஒரு நாளு நானும் குப்புசாமியும் நல்லா தண்ணி போட்டுட்டு அவ அப்பன்