"அவ்வளவா? நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ரூமா மூரா வாங்க முப்பதாயிரம் கேட்டேன். பேங்கில! முடியாதுன்னுட்டாங்க! ஒனக்கு நிரந்தரமான வேலையில்ல, அதினால குடுக்க முடியாதின்னுட்டாங்க!"
"எல்லாம் பாஸ்டர்ட்ஸ்!"
"ஆமாங்க, பாஸ்டர்ட்ஸ்!"
"எல்லாம் மோசடிக்காரனுங்க!"
"ஆமா, கெட்ட நாமர்தாப் பசங்க!"
ஆசுவாசப் படுத்திக் கொள்ள இன்னும் கொஞ்சம் குடித்தார்கள்.
"இது நல்லா இருக்கு! எங்க வாங்கின?"
"இதோ இந்தக் கடைங்க ஓரத்தில மூலையில போனா ஒரு சீனன் வங்சா கடை இருக்கு. அவன் விக்கிறான். நீங்க அங்க போனதில்லையா?"
பாஸ்கரன் அவனை மேலும் கீழும் பார்த்தான். "ஒம் பேரென்ன?" என்று கேட்டான்.
"நாகராஜ்!"
"நாகராஜ். ஏன் இந்த நாத்தம் புடிச்ச எடத்த ஒன் எடங்கிற?"
"சுத்தமான எடமாப் பாத்துப் போனா நிம்மதியா படுக்க முடியாது. குடிக்க உடமாட்டாங்க. "பீக்கிலா கிளிங், மாபோ" அப்படின்னு விரட்டுவாங்கலா"
"வீட்டுக்குப் போவக் கூடாதா, நாகராஜ்!"