(Reading time: 35 - 69 minutes)

"மா, அதனாலதான் சொன்னேன் நம்ம அப்பாதான் நமக்கு முக்கியம்....அதனாலதான் அவர் எதிரே எதுவும் காண்பிச்சுக்கல.... ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு ஆர்த்தி. நம்ம பெத்த அம்மா அப்பாவை நினைச்சா ஐயோ அவங்கள பார்க்கக்கூட முடியல நம்மால, “

“ஆமா அர்விந்த்!, ஆனா அப்பா பாரேன், நம்ம பெத்த அப்பா மேல எவ்ளோ அஃபக்ஷனா இருந்திருக்காரு? எவ்ளோ அழுதாரு பார்த்தியா? நமக்கு கூட அவ்வளவு இல்ல”

“ அப்படி நம்க்கு இல்லேன்னா அதுக்கு காரணம் அப்பா, அந்த மாதிரி நம்மள கவனிச்சுண்டிருக்கர் அதான் காரணம், நமக்கு அவர் சொல்ற வர, அவர் நம்ம அப்பா இல்லேன்ற ஃபீலிங்கே இல்லையே அதனாலத்தான் அவர் நம்ம அப்பா இல்லேன்ற ஃபீலிங்கே இல்ல "

ர்த்தியும், அர்விந்தும் நன்றாக படித்து, இருவரும் டாக்டர் ஆனார்கள், அவர்கள் துணையை தாங்களே தேடிக் கொள்ளலாம் என்று முதலிலேயே சொல்லிவிட்டான் வேந்தன்.

அவர்கள் கல்யாணமமும் சிறப்பாக நடத்தினான் வேந்தன்.

கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்த வேந்தன் ஆர்த்தியையும், அர்விந்தயையும் முகில் சந்திரிகாவின் போட்டோவை எடுத்து வைத்திருந்தான் அதற்கு மாலை போட்டு அவர்களை ஆசீர்வாதம் வாங்க சொன்னான் வேந்தன். அவர்களிடம் கூறியவுடன் குலுங்கி குலுங்கி கேவினான்..."முகிலா, உன் குழந்தைகளை என்னிடம் நம்பி விட்டுட்டு போனடா, அவங்கள நல்லபடி வளர்த்திருக்கேன்.....இதோ பார் குழந்தைகள் கல்யாண கோலத்துல பாருடா  உன் குழந்தைகளை பாருடா. என் நண்பா நீ இல்லையடா இந்த அழகு குழந்தைகளை கல்யாண கோலத்துல பார்க்க நீ இல்லையடா என் நண்பா முகிலா....."

"அப்பா, நாங்க வெறும் உங்க நண்பனோட குழந்தைகள் மட்டும்தானா உங்க பசங்க இல்லையா?எங்கள, எங்க அப்பா அம்மா இருந்தாக்கூட இவ்வளவு அழகா வளர்த்திருப்பாங்களான்னு தெரியலப்பா? இந்த மாதிரி எந்த நட்பும் இருக்குமா? தெரியலப்பா? நான் கேள்விப்படவே இல்லப்பா.....உங்கள மாதிரி ஒரு நண்பனும் யாருக்கும் கிடைப்பங்களான்னும் தெரியலப்பா? நீங்களும், உங்களுடைய நட்பும் அபூர்வம்ப்பா!!

உங்களுக்கு தெரியாதுடா நான் என்னோட முகில் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தேன்னு, என் முகிலன் போன அன்னிக்கே நான் ஒடைஞ்சுட்டேண்டா.... உங்களுக்காகத்தான் என்னை சுதாரித்துக் கொண்டு என்ன மாத்திண்டிருந்தேன்... இப்போ என் முகிலனை தொலைச்சுட்டு இருக்கேனே... அன்னிக்கு அவன் போகவே மாட்டேனான், நான்தான் பாவம் உங்க அம்மா வீட்டலியே இருக்கா அவளை கூட்டிண்டு போன்னு சொல்லி அனுப்பிச்சேன், என் முகிலன், நான் சொல்றத எப்பவுமே தட்ட மாட்டான்.  அவன தொலைச்சுட்டு நான் மட்டும் இருக்கேனே?"

"அப்பா ப்ளீஸ், நீங்க வருந்தாதீங்கப்பா ப்ளீஸ்... உங்கள நண்பனா கிடைச்ச, உங்க நண்பன் முகிலன், எங்கள பெத்த அப்பா எவ்வளவு கொடுத்து வச்சவர்பா? எங்களையும், நீங்க ஃப்ரெண்டலியாவே பேசி, பழகி வளர்த்திருக்கீங்க... நீங்க நட்புக்கு கொடுக்கற முக்கியத்துவம்..... அதனால நாங்களும் உங்க நண்பராகளாவே இருக்கலாம்னு இருக்குப்பா"

பாரதியும், "ஆமாம் அர்விந்த், உங்கப்பா நட்புக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துக்காகத்தான் நானும் உங்க அப்பாவை கல்யாணம் செய்துக் கொண்டு இவரோடு என்றும் ஒரு பிரெண்டாவே இருக்கலாம்னுதான் .... அதை இன்னிக்கு வரை அவர் காப்பாத்திண்டிருக்கார் "

"முகிலுக்கு மட்டுமில்லை, வேந்தன் எனக்கும் நல்ல நண்பன்"

குறள் 788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

 

This is entry #70 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - VJG

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.