(Reading time: 32 - 63 minutes)

களின் திருமணம் பற்றி நினைத்த உடனே ராஜன்பாபுவின் சொந்தம் கொண்டாடிய பார்வை நினைவில் ஆடியது. அப்படி ஒன்று நடந்தால் அவருக்கு ஆனந்தமே. அவன் திறமையானவன். அதைவிட மேலாக நேர்மையானவன்.

கதவு தட்டும் ஒலி கேட்டு அவசரமாய் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

அவருக்குத் தெரியும். பிள்ளைகள் இருவரும் தாயின் நினைவில் வருவர் என்று. அதுதான் கதவைத் தாழிடாமல் வைத்திருந்தார்.

“கதவு திறந்துதான்டா இருக்கு. உள்ளே வாங்க.”

இருவரும் “அப்பா!” என்ற கேவலுடன் ஓடிவந்து ஆளுக்கொரு பக்கமாய் அவர் தோளில் சாய்ந்துகொண்டனர்.

“என்னடா?”

“அம்மா!” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார்கள்.

அவர் கட்டிலுக்கு நேர் எதிர் இருந்த சுவரைப் பார்த்தார்.

அங்கே மாயாவின் புகைப்படம் மாட்டியிருந்தது.

அவளது புகைப்படம் மட்டுமாக இருந்தால் பிள்ளைகள் வருத்தப்படுவர் என்று குடும்பப்படத்தை மட்டும் வரவேற்பரையில் மாட்டியிருந்தார் ராகவன்.

“அம்மா எங்கேடா போயிட்டா? அவ நம்ம கூடதான் இருக்கா. அவ என்னில் பாதி. நான்தான் உங்களுக்கு அம்மாவும், அப்பாவும். இனி இப்படி அழக்கூடாது சரியா? நாம அழுதா அம்மா மனசு தாங்குமா?”

“இனி அழலைப்பா.”

கண்களைத் துடைத்துக்கொண்டனர்.

அவர்களை அணைத்துகொண்டார்.

புகைப்படத்தில் இருந்த மாயா அவர்களைப் பார்த்து சந்தோசமாய் சிரித்துக்கொண்டிருந்தாள்.

This is entry #142 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - மனைவி ஒரு மந்திரி

எழுத்தாளர் - ராசு

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.