‘எனக்கு தெரியாம அது யார் உனக்கு ஃப்ரெண்ட்???
‘ப்ளீஸ்.. அந்த டிக்கெட் என்கிட்டே குடு முதல்லே...’ கெஞ்சலில் இறங்கினாள் இவள்
‘நீ... போகப்போறியா???’ கேள்வி பிறந்தது அங்கே.
‘தெரியலை. அதை குடு முதல்லே..’
அப்போ அனுப்பினது யாரு??? அதை சொல்லு என்கிட்டே..’
‘ஹரிஷ் சுவாமிநாதன்!!!’
‘எ...ன்... ன..து??? ஹ..ரி...ஷா??? அவ.. அ...வ...னை உனக்கு எப்படி தெ.....ரியும்..’ அந்த உற்சாக தொனி இறங்கி கொஞ்சம் தடுமாற்றம் வந்திருந்தது அந்த குரலில்.
இறுதி போட்டிக்கான நாள் வந்திருந்தது. மும்பையில் அந்த விளையாட்டு அரங்கத்தில் இருந்தான் ஹரிஷ்!!!
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் ஜெயித்திருக்க முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்திருந்தனர். இந்திய அணி டாஸ் வென்றதே ரசிகர்கள் மத்தியில் பெரியதொரு எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது.
இவன் நான்காவது ஆட்டக்காரனாக களம் இறங்க வேண்டும். நேற்றைய இவனது ஆட்டத்தினாலேயே இவனை சற்று முன்னதாக களம் இறக்க திட்டமிட்டிருந்தனர். மைதானத்தில் நின்றிருந்தான் அவன்.
‘அப்பா நான் எந்த தப்பும் செய்யலைப்பா..’ பழைய நிகழ்வுகள் மறுபடியும் ஒரு முறை நினைவுக்கு வந்து போனது. ஆட்டத்திற்கு அப்பாவை கூட அழைக்கவில்லை இவன். ஜெயித்துவிட்டே அவரிடம் பேச வேண்டுமென ஒரு வைராக்கியம்!!!
எல்லா வீரர்களும் அணிவகுத்து நிற்க தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிந்தது.
‘எதிரணி வீரர்களுடன் இவர்கள் கைக்குலுக்கிவிட்டு விலக அவனது பார்வை அரங்கத்தையே அலசிக்கொண்டிருந்தது. இன்னமும் வந்திருக்கவில்லை அனுராதா!!! அவனுக்கென சொந்தங்கள், நண்பர்கள் என யாரும் வந்திருக்கவில்லைதான்.
‘நீ வர மாட்டியா அனும்மா???
தொடரும்......
{kunena_discuss:1147}