‘நோ ப்ராப்ளம் பெரியப்பா. நீங்க வந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்..’ மகிழ்ச்சியாய் துள்ளினாள் இவள். இதோ அவளுடன் இங்கே அமர்ந்திருக்கிறார் அவர்!!!
அறுபத்தி ஐந்து ஓட்டங்களை எடுத்திருந்தான் ஹரிஷ். இன்னும் இரண்டு விக்கெட்டுகள் சரிந்திருக்க எதிர் முனைக்கு வந்து நின்றிருந்த இன்னொரு பேட்ஸ்மேனின் பார்வை இவனை ஏனோ மோதி மோதி திரும்பிக்கொண்டிருந்தது.
கிட்டதட்ட இருபத்தி ஐந்து ஓவர்கள் முடிந்திருந்த நிலையில் இந்தியாவின் ஸ்கோர் நூற்றி முப்பதை தொட்டிருக்க அப்போது நிகழந்தது அது.
எதிர் முனையில் இருந்த அவன் இப்போது பந்தை எதிர்கொள்ள, ஷார்ட் மிட் விக்கெட்டை நோக்கி பந்தை திருப்பி விட்டு ஓடத்துவங்கினான்..
‘ஹரிஷ் கம்..’ அழைத்தான் அவன் ஓடுவது சரியில்லை என இவனது உள் மனது உரைக்க
அதற்குள் ‘கம்’ அவனது இன்னொரு அழைப்பு. இவனைவிட அனுபவத்தில் மூத்தவன் அவன். இதற்கு மேல் அவனது அழைப்பை தட்ட முடியாமல் இவன் நகர பந்து அதே நேரத்தில் ஃபீல்டரின் கைக்கு வர, அங்கே அதற்குள் கிரீஸை அடைந்திருந்தான் எதிராளி.
இவன் இங்கே தன்னிடம் நோக்கி பாய்வதற்குள் பந்து ஸ்டம்பை நோக்கி பாய
ஹரிஷ் அவுட்!!!! அரங்கம் முழுவதும் சட்டென அடங்கியது.
அதிர்ந்து சிலையாகி இருந்தனர் அனுராதாவும், அவனது அப்பாவும். தலையை இடம் வலமாக அசைத்தபடியே உள் நோக்கி நடந்தான் ஹரிஷ். கிளம்பும் முன் ஒரு முறை எதிர்பக்க ஆட்டக்காரனை பார்த்துக்கொண்டான் ஹரிஷ். அவன் முகத்தில் ஒரு கள்ளப்புன்னகை இருந்ததோ??? இந்த ரன் அவுட் வேண்டுமென்றே நடந்ததோ???
தொடரும்......
{kunena_discuss:1147}