(Reading time: 40 - 80 minutes)

அவள் தனது தங்கை ஆசையை பெரியவர்களிடம்  கூறி மகாதேவனுக்கும்-மாலதிக்கும் திருமணம் செய்து வைத்தாலும் அது அவர்களின் வாழ்கையை கண்டிப்பா பாதிக்கும் என்று கவியரசிக்கு தோன்றியது.மகாதேவனின் காதல் பார்வையை திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து தாங்கிவயள் அல்லவா..,அவளுக்கு புரிந்தது அவன் தன்னை காதலிக்கிறான் என்று...

அதனால் பாதிக்கப் பட போவது மாலதியின் வாழ்க்கை மட்டும் அல்ல..,அவளது வாழ்கையில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது நாகராஜன் அண்ணா,நளினி அண்ணி வாழ்கையிலும் பிரதிபலிக்கும் என்று நினைத்தவள் மல்ர்கண்ணனின் காதலுக்கு சம்மதம் கூறினாள்.

மலர்கண்ணன் இருந்த நிலைக்கு அவள் சம்மதம் சொன்னால் போதும் என்ற நிலைமையில்  இருந்தார் .

அடுத்து பெரியவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிய  மலர்கண்ணன்,ஊரை விட்டு நாளை இரவு ஓடிபோகலாம் என்று தனது திட்டத்தை கூறினார் மலர்கண்ணன்.

அதைப்போல அடுத்த நாள் அவர்கள் கிளம்ப கவியரசியை பார்த்து விட்டார்  லட்சுமி தேவி.

“என்னடி பண்ற எங்க மானத்த கப்பல ஏத்த இப்படி பண்றியா..,இது தெரிஞ்ச உங்க அப்பாவோட நிலைமை என்னனு யோசிச்சு பார்த்தியா..”என்று அவர் கேட்க

அவர் கண்களை நேருக்கு நேர் பார்த்த கவியரசி..

“நீங்க தானா சித்தி சொன்னீங்க,யார்யார் பொண்ணுக்கோ கல்யாணம் பண்ணி வைக்கிறோம் உங்க சொந்த பொண்ணுக்கு பிடிச்சப் பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க முடியலன்னு அதான்..,உங்க ஆசையா இவ்வளவு நாள் நீங்க என்னை வளர்த்த பாவத்துக்கு நான் நிறைவேத்தி வைக்கிறேன்..”என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் கவியரசி.

அவளது சித்தி என்ற சொல்லிலே அவர் பாதி இறந்தார் என்றால்..,அவளது அடுத்த அடுத்த வரிகளில் தான் நிதானம் தவறி மாலதியிடம் பேசியது கவியரசியை எந்தளவு பாதித்து உள்ளது என்பதை புரிந்துக் கொண்டார்.

கவியரசியை தடுக்க மனம் வராமல் நின்றிருந்தார்.அடுத்து அடுத்து அனைத்தும் நிகழ்ந்துப் போக மாலதி நினைத்தது போல் அவள் மனம் நிறைந்தவனே மணாளனாகி போனான்.

அங்கு இருந்த அனைத்து சொந்தங்களின் வாய்க்கு அவலாகி போனவள் கவியரசி மட்டுமே..

அதை கேட்கும் போது எல்லாம் தான் சொன்ன சொல் தான் தனது மகளை இந்த முடிவு எடுக்க செய்திருக்கிறது என்று அவர் நம்பினார் லட்சுமி தேவி.

தன்னிடம் தனியே பேச வந்த மாலதியிடம் அந்த விஷயத்தை எல்லாம் கூறி அழுதார் லட்சுமிதேவி.

தனது அக்காவின் செயலை நினைத்து தானும் அழுதாள் மாலதி.ஆனால் அவள் தனது வாழ்க்கை பாதிக்குமோ என்று நினைத்து மற்றவர்களிடம் சொல்லாமல் மறைத்தாள்.

அதுவே அவரை குற்ற உணர்வில் உழ செய்தது.அது அவரை நோய் படுக்கையிலும் விழ செய்தது..

அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு,கவியின் மேல் உயிரையே வைத்து..,அனைவர் சொல்வதையும் நம்பாமல் தனது தங்கை ஏதாவது ஒரு காரணத்தால் தான் செய்திருப்பாள் என்று நினைத்த நடராஜனையும்..,தனது கணவனையும் அழைத்துக் கூறினார் லட்சுமி தேவி.

அதை கேட்ட இருவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.அதன் பிறகு லட்சுமி தேவி இறந்துவிட அனைவரும் சோகத்தில் மூழ்க அதன் பிறகு கவியரசியை பற்றி அவர்கள் நினைக்கவில்லை.

ரு பெருமூச்சுடன் அனைத்து விஷயத்தையும் கூறி முடிக்க அனைவரும் அதன் தாக்கத்தில் இருந்தனர்.

அவர் சொல்லி முடித்ததும் அவரை நேருக்கு நேர் பார்த்த கவி ,”தாத்தா அதுக்கு அப்புறம் எங்க அம்மாவ தேடுனிங்களா..இல்லையே,அன்னைக்கி நீங்க தேடிப் போயிருந்தீங்கனா..,இன்னைக்கி எங்க அப்பா,அம்மாவோட சந்தோஷமா இருந்திருப்பேன்..,

எங்க அம்மா கூடவாவது நான் இருந்திருப்பேன்..,அன்னைக்கி நீங்க எங்க அம்மாவ கூப்பிட்டு வந்திருந்தீங்கனா மாலதி சித்தி வாழ்கையில எதாவது பிரச்சனை வரும் அப்படி நினைச்சுதான நீங்க என்னோட அம்மாவ...,

 உங்க அரசிய தேடி போகலை..,உங்க மனச தொட்டு சொல்லுங்க...,நான் சொல்லுறது எல்லாம் உண்மை தான நீங்க அப்படி தான நினைச்சிங்க..”என்று  அவள் கூற அவரால் மறுக்க முடியவில்லை..

அவர் அப்பொழுது அப்படி தானே யோசித்தார்..,அரசியை மீண்டும் அழைத்து வந்தால் எதாவது பிரச்சனை வரும் என்று தானே அவளை தேட தனது பையன் எடுத்த முயற்சியையும் கை விட சொன்னார்.அதை நினைத்து பார்த்தவரால் பதில் எதுவும் கூற முடியவில்லை...

அவரது அமைதியையே சம்மதமாக கொண்டவள்..,தனது அடுத்த தாக்குதலை ஜனார்த்தனன் தாத்தாவை நோக்கி ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.