(Reading time: 40 - 80 minutes)

“நான் எங்கயும் போல பெரியம்மா..,திரும்ப கண்டிப்பா வருவேன்..,என்னோடோ குழந்தையை நீங்க எல்லாரும் தான் வளர்க்க போறீங்க..,எனக்கு நம்பிக்கை இருக்கு என்னோட குழந்தையை நீங்க எல்லாரும் நல்லா வளர்ப்பீங்கனு..,என்ன நான் இப்படி சொல்லுறேனு எல்லாரும் பாக்குறிங்களா கண்டிப்பா என்னோட குழந்தைய நான் உங்கக் கிட்ட இருந்து பிரிக்க மாட்டேன்..,எல்லா உறவும் என்னோட குழந்தைக்கு வேணும்..,

சித்தி,சித்தப்பா,தாத்தா,பாட்டி,மாமா,அத்தை எல்லாரும் வேணும்,எனக்கும் எங்க அம்மாக்கும் கிடைக்காத அனைத்து சொந்தமும் என்னோட குழந்தைக்கு கிடைக்கணும்...

என் குழந்தைய அவங்களோட அப்பா நல்லா பார்த்துப்பாங்க..,எல்லாரோட அன்பும் அவங்களுக்கு கிடைக்கும்...”என்று அவள் சொல்ல

அவள் அருகில் வந்த மஞ்சு “எல்லா உறவோடவும் அம்மாங்குற உறவும்

அந்த குழந்தைக்கு வேணும்...”என்றுக் கூற

கவிஸ்ரீயை நோக்கி சென்றவள் “ஸ்ரீ நீ சொல்லு என்னோட குழந்தைக்கு ஒரு நல்ல அம்மாவா  இருக்க மாட்டா..,உன்னோட அஸ்வின் மாமாக்கு நல்ல ம..மனைவியா...”என்று  அவள் முடிப்பதற்குள்  அவளை இழுத்த அஸ்வின் அவளது கன்னத்தை பிடித்து தன்புறம் திருப்பி அவளது கண்களை கூர்மையாக பார்த்தான்.

அடுத்த நொடி பூப்போல அவளை கைகளில் தூக்கியவன் தங்களதுஅறையை நோக்கி சென்றான்.அனைவருக்கும் புரிந்தது அவன் அவர்களிடையே இருக்கும் பிரச்சனையை தனிமையில் தீர்த்துக்கொள்ள நினைக்கிறான் என்று..

அனைவரும் ஒரு நல்ல முடிவுடன் அவர்கள் வரவேண்டும்  என்று நினைத்து தங்களது இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டனர்.

தங்களது அறைக்கு தூக்கி சென்றவன் அவளை இறக்கிவிட்டு விட்டு அறையின் கதவை சாத்தினான். அடுத்த நொடி அவளை தனது இறுகிய அணைப்புக்குள்  கொண்டு வந்தான்.                                

aeom

அவனது இந்த அணைப்பு அவளுக்கும் தேவைப் பட்டதால் அவன் நெஞ்சுக்கூடு சூட்டின் இதத்தைத் தேடி அவனுள் நன்கு புதைந்தாள்.

அவள் தன்னுள் புதையவும் அவளை தனக்குள் இன்னும் புதைத்துக் கொள்ளும் எண்ணத்துடன் அவளை இன்னும் தனக்குள் புதைத்தான்.

அவனது அணைப்பு இறுக இறுக மூச்சுவிட முடியாமல் தவிக்க அவனது அணைப்பு ஏற்படுத்திய வலியில் அவள் முனக...

அவளை தான் எந்தளவு சுருட்டிக் கொண்டு இருக்கிறோம் என்று அப்பொழுது தான் புரிந்துக் கொண்டான். அவளை விலக்கி கட்டிலில் அமரவைத்தவன்,அறையை விட்டு வெளியில் சென்று விட்டான்.

அவனுக்கு என்ன ஆனது என்று புரியாமல் கவி தான் தவித்துப்போனாள்.சில நிமிடம் முன் அவன் காட்டிய நெருக்கத்திற்கும்..,இப்பொழுது அவன் காட்டிய ஒதுக்கத்திற்கும் சேர்த்து...

போன வேகத்தில் வெளியில் அவன் வர கீழே இருந்த அனைவரும் என்ன நடந்ததோ என்ற பயத்தோடு அவனைப் பார்க்க..அவனோ அவர்களை கண்டுக் கொள்ளாமல் நேராக சமையல் அறைக்கு சென்றான். சென்றவன் கையில் ஜூஸ் உடன் திரும்பி வந்தான்.

 அதைப்பார்த்த அனைவரது முகத்திலும் சந்தோஷம் பிரகாசமாக தோன்றியது.

அமர் அவனைப் பார்த்து சிரிக்க அவர்களது கேலிப் புரிந்தாலும் அதை கண்டுக் கொள்ளாமல் தங்களது அறையை நோக்கி சென்றான் அஸ்வின்.

குழப்பத்தில் இருந்த கவி தனது அருகில் வந்து நின்ற அவனை நிமிர்ந்துப் பார்க்க அவனது கைகளில் ஜூஸ் இருந்தது.

“இதைக் குடி..”என்று அவளது கைகளில் அதனை திணித்தான்.அவளுக்கு களைப்பாக தான் இருந்தது.அதனால் அதை வாங்கி குடித்தாள்.பாதி குடித்தப் பிறகு தான் அவள் மூளை முழித்துக் கொள்ள இந்த அக்கறை அவன் குழந்தைக்காக தான் என்று நினைவு வந்து தொலைக்க ,அதற்கு மேல் அந்த பழச்சாறு அவளது தொண்டையில் இறங்காமல் மக்கர் பண்ணியது.

கிளாஸில் வாய் வைத்தப் படியே கவி அஸ்வினை பார்க்க அவளது எண்ண ஓட்டத்தை புரிந்துக் கொண்ட அவனோ,”மலர் எதுவும் உன்னை விட எனக்கு அதிக முக்கியம் இல்லை அது நம்ம குழந்தையா இருந்தாலும் சரி..”என்று சொல்லி அவளை குடிக்க சொல்ல

அவன் சொன்னதை நம்ப முடியவில்லை என்றாலும் அது அவளுக்குள் சாரல் மழையை அடிக்க செய்ய கட கடவென குடித்து முடித்தாள் கவி.

அவள் கிளாசை வைத்த அடுத்த நொடி அவளது வாயில் இருந்த பழச்சாறு அவனது வாயிற்குள் இடமாறி இருந்தது.

அந்த முத்தம் தனக்கு எதையோ உணர்த்த அவன் செய்யும் செயலாக மட்டும் தான்  அவளுக்கு தெரிந்தது...

அவள் மூச்சுக்கு தவிக்க அவளது இதழ்களை விட்டவன் ,அவளது கன்னதினை பிடித்துக் கொண்டே ,”என்னடி சொன்ன நான் உன்னை காதலிக்கலையா..”என்று கூறிவிட்டு அவளது இதழ்களை மீண்டும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.

சிறிது நேரத்தில் அதை விட்டவன்,”என்னோட காதல் உனக்கு புரியலையா..,ஸ்ரீய போய் என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லுற என்னைப் பத்தி என்னடி நினைச்ச...”என்று கூறிக் கொண்டே அவளது இதழ்களை இந்த முறை வன்மையாக  சிறை செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.