(Reading time: 40 - 80 minutes)

அவனது கோபத்தை பார்த்த சுதாகர் அவனுக்கு அருகில் வந்து அவனது தோளைத் தொட்டு நிதானப்படுத்தினான்.அவனுக்கும் தான் கோபம் இருக்கிறது,அவர்களுக்கு தெரிந்த கவிக்கு இவ்வளவு மனகாயங்கள் இருந்துள்ளது என்று நினைக்கும் பொழுது அவனுக்குள்ளும்  கோபம் ஏறிக்கொண்டு தான் இருந்தது,இருக்கும் இடமும் நடக்கும் பிரச்சனையும் அவனை அமைதிக் கொள்ள செய்தது.

அவர்களின் அமைதிக்கு காரணம்  இன்றுடன் தங்களது தோழியின் பிரச்சனைகள்  ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்தனர்.

அமரிடமிருந்து விலகியவள்..,நேராக அஸ்வினிடம் சென்றவள்,”அஸ்வின் உனக்கு எப்போதுமே நான் தேவையில்லாத  ஒரு சுமையா தான இருந்துருக்கேன்..,உனக்கு என்னை புடிக்கும்னு நான் தப்பா நினைச்சுக்கிட்டேன்..,எனக்கு தாலி கட்டுனப்பையும் நீ வேற வழியில்லாம கட்டின, உங்களை விட்டு போனப் போதும் உன்ன நிம்மதியா இருக்க விடாம உன்னோட மாமாவோட  பொண்ண போய்டேன்..,இனி நீ.......நிம்மதியா...உனக்கு....பிடிச்ச...பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ....” என்று தனது ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் தனது நெஞ்சை அடைத்த துக்கத்தை அடக்கமுடியாமல் அழுதுக் கொண்டே சொன்னாள் கவிமலர்.

கண்களில் கண்ணீருடன் அவனை நிமிர்ந்துப் பார்த்த அவளது கண்களில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நின்றுக்  கொண்டிருந்த அஸ்வினே தென்பட்டான்.

தனது எந்த கேள்விக்கும் சலனமே இல்லாமல் நிற்கும் அவனை பார்க்க பார்க்க அவளுக்கு துக்கம் தான் அதிகரித்துக் கொண்டிருந்ததே தவிர அவனது மேல் அவளுக்கு இருந்த காதல் குறையவில்லை....இப்பொழுதுக் கூட அவளது கண்களுக்கு நிச்சய நிகழ்ச்சியில் கண் நிறைந்த காதலுடன் நின்று அவளை பார்த்த அஸ்வின் மட்டுமே  தெரிந்தான்.

“அஸ்வின் நான் ஒன்னே ஒன்னு மட்டும் கேக்குறேன்..,அன்னைக்கி நர்ஸ் உங்க கிட்ட என்ன சொன்னாங்க நான் கொடுக்க  முடியாதுன்னு சொன்னதா சொன்னாங்களா...”என்று அவனை கேட்க அனைவரும் அன்று நர்ஸ் என்ன சொன்னார் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

அன்று நர்ஸ் கவி தரமுடியாது என்று வார்த்தையை முடிப்பதற்குள் பர்வதம்மாள் ஒப்பாரி வைக்க அனைவருக்கும் அவள் தரமாட்டாள் என்று தாங்கள் நினைத்ததே நடந்ததாக நினைத்தனர்

.இப்பொழுது அவளது பார்வை அனைவரையும் நோக்கி திரும்பியது.

“என்ன யாரும் பதில் சொல்ல மாட்டங்குறிங்க..,அவங்க சொன்னத யாருமே காதுக் கொடுத்துக் கேட்கல அப்படி தான..,உங்க மனசுல நீங்க உருவகப் படுத்தி வச்சிக்கிட்டிங்க நான் கொடுக்க மாட்டேனு...,அதான் அவங்க சொல்ல வந்ததை முழுசாக் கேட்காம நீங்களே முடிவு எடுத்துட்டீங்க..”என்று அவள் கேட்க

“அப்படி இல்லைடா..”என்று கூறினார் ஞானசம்பந்தம்.

“பெரியப்பா ஒரு வேலை அந்த டெஸ்ட்ல எனக்கு எதாவது நோய் இருக்குனு ரிசல்ட் வந்து அதனால தர முடியாதுனு நான் சொல்லியிருந்தா..”என்று அவள் கூற கவி,மலர் என்று அவளை  அழைத்த பல குரல்கள் அவளை நெருங்கி வந்திருந்தனர்.

அவளது அருகில் வந்த ஆனந்தி,”உண்மைய சொல்லுடா உனக்கு எதாவது...”என்று அவர் கேட்க

ஒரு விரக்தி புன்னகையை தனது இதழில் பரவவிட்டவள், “இதை அன்னைக்கி உங்களுல ஒருத்தர் கேட்டுருந்தாக் கூட எனக்கு சந்தோசமா இருந்திருக்கும் அத்தை..,இப்ப எனக்கு இங்க வலிக்குது...”என்று அவள் கதறி அழ அவளை அனைத்துக் கொண்டு அழுதனர் மற்றவர்கள்..

அவளுக்கு எதாவது நோய் இருக்குமோ என்றது அனைவரது மனதிலும் இப்பொழுது ஒரு வித பயம்...அதை பார்த்தவளுக்கு அவர்களது எண்ணம் புரிந்தது..

“நீங்க நினைக்குற மாதிரி எனக்கு எதுவும் இல்லை...”என்றுக் கூறியவள் அவர்களை விடுத்து அஸ்வினிடம் சென்றாள்.

இறுகி போய் மடக்கி இருந்த அவனது கைகளை எடுத்து தனது வயிற்றில் வைத்து அவனைப் பார்க்க அவள் கூறிய செய்தி அவனுக்குப் புரிந்தது.அதுவரை இறுகிபோயிருந்த அவனது கைகள் அழுத்தமாய் அவளது வயிற்றில் பதிந்தது.

அவள் சொன்ன அந்த செய்தியில் அவனது கண்களில் தெரிந்த சந்தோசத்தை அவள் கண்டுக் கொண்டாள்.

ஆனால் அடுத்த நொடி அவனது சந்தோசம் இருந்த இடம் தெரியாதது போல் அவனது முகம் கல்லாக இறுகிபோய் இருந்தது.. அதைப் பார்த்தவளுக்கு தப்பாக தான் யோசிக்க தோன்றியது.

அவள் கூறிய செய்தி பெரியவர்களுக்கு புரிந்துப் போக பர்வதம்மாள் அவளை அனைத்து அவளது உச்சியில் இதழ் பதித்து,”இந்த பாட்டிய மனிச்சிடுடா...இப்படி இருக்குற புள்ளைய நாங்க ரொம்ப படுத்திட்டோம்..”என்று அழுதுக் கொண்டே கூற

தன்னவனின் முகத்தில் எந்த ஒரு வித்தியாசத்தையும் காணதவள்,தான் எடுத்த முடிவு சரியானது தான் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அர்னவை பார்த்தவள் போலாம் என்று தலையசைக்க அவனுக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.

அனைவரிடமும் விடைபெறும் விதமாக அவள் தலை அசைக்க அனைவரும் ஒரு நிமிடம் விக்கித்து நின்றனர்.

அவள் சொன்ன செய்தியின் சந்தோசத்தை அனுபவித்துக் கொண்டிருந்த அனைவரது முகமும் இப்பொழுது கலவரத்தை அள்ளி பூசிக்கொண்டது.

“கவி எங்கம்மா போகப்போற வேணாம்மா..”என்று ஜானகி கூற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.