அவனது இந்த தாக்குதல்களை தாங்கிக் கொள்ளும் அளவு அவள் உடல் இப்பொழுது இல்லாததால் அவளது உடல் முழுவதுமாய் துவள அவனது மீதே அவள் சாய அவளை விட்டவன் தனது தோளில் அவளை சாய்த்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தான்..
தனது செயலைக் கண்டு மனம் நொந்தவன் அவளது நிலைப் புரிந்து அவளது கூந்தலை ஒதுக்கிவிட்டான்.
“எப்படி டி உன்னால மட்டும் என்னை இப்படி யோசிக்க முடிஞ்சது..,அன்னைக்கி அப்படி தான் மனுசு முழுக்க காதலோட உன்னோட நடந்த நம்மளோட கூடல உங்க அப்பாக்காக நான் தொட்டேனு சொன்ன..,எப்ப நீ அப்படி சொன்னியோ அப்பவே என்னையே நான் வெறுத்துட்டேன்..,இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கும்னு தான் நான் இருந்தேன்..
ஆனால் நானும் மனுஷன் தானே அன்னைக்கி உன்கிட்ட என்னோட காதலை உணர்த்துனது, அதை உணர்த்துனப்ப உன் கண்ணுல எனக்காக நிறைஞ்சி இருந்த காதலைப் பார்த்தது, இது எல்லாம் சேர்ந்து என்னை உன்னை நோக்கி முன்னேற வைக்க என்னால என்னை கட்டுப் படுத்த முடியல...”என்று அவன் தனது வேதனைகளை குரலில் தேக்கி சொல்ல அவளுக்கு புரிந்தது தன்னுடைய வார்த்தைகள் அவனை எவ்வளவு காயப் படுத்தியுள்ளது என்று...
அவளை தனது தோளில் இருந்து விலக்கியவன் அவளது முகத்தை நிமிர்த்தி அவள் கண்களோட தனது கண்களை கலக்க விட்டான்.
அவனது பார்வை அவளது இதயம் வரை செல்ல,”இப்ப சொல்லுடி நான் உன்னை காதலிக்கலைனு...”என்று அவள் கண்களில் தனது கண்களை கலக்க விட்டப்படி கேட்க
இப்பொழுது அவனது வன்மையான உதடுகள் அவளது மென்மையான உதடுகளின் சிறையில் மாட்டிக் கொண்டது.
அவனது மனைவியின் முதல் முத்தம்..,அவளாய் அவனுக்கு தரும் முதல் முத்தம் அதில் லயித்துதான் போனான் அஸ்வின்.அவளது அந்த முத்தமே அவள் தனது காதலைப் புரிந்துக் கொண்டாள் என்று அவனுக்கு உணர்த்தியது .அவனை முத்தமிட்டவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவனது நெஞ்சிலே புதைந்தாள்.
அவளை சந்தோசத்துடன் அணைத்துக் கொண்டான் அஸ்வின்.”ரொம்ப தேங்க்ஸ் மலர், ஆனாலும் உனக்கு இன்னும் என் மேல கோபம் இருக்குதான எனக்கு தெரியும்...”என்று அவன் கூற
இல்லை என்று கவியால் மறுக்க முடியவில்லை..
“உன்னை நான் கல்யாண பண்ணிக்கிட்டப்ப உன் மேல எனக்கு காதல் இல்லை,ஆனா அன்னைக்கி என்னோட ரூம்குள்ள பயத்தோட நீ வந்தல அப்பவே அது என்னை எதுவோ பண்ணுச்சு..,அது தாத்தா சொன்ன அறிவுரையால வந்ததா இல்லை எப்படி வந்ததுனு எனக்கு தெரியல,அதுக்கு அப்புறம் நான் சொன்னத மனசுல வச்சிக்கிட்டு அம்மாவும்,பாட்டியும் எதாவது சொன்னாலும் அதை பெருசுப் படுத்தாம இருந்தல அப்ப உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போயிடுச்சு..,உன்னை நான் எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சேனு எனக்கு தெரில கவி..,
நீ என்னோட மாமா பொண்ணுன்னு எனக்கு தெரிய வந்தப்ப நீ இத்தனை நாள் ஏங்கின பாசம் உனக்கு நம்ப குடும்பம் தரும்னு நான் நினைச்சேன்..
ஆனா அன்னைக்கி நீ நடந்துக் கிட்ட விதம் தான் எனக்கு புரில..,இருந்தாலும் என்னால எங்க மாமாவ விட்டுக் கொடுக்க முடியல..
அதுக்காக நான் உன்னை விட்டுக்கொடுக்கல அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி நான் உன்னை வீட்ட விட்டு போக சொன்னதுக்கு கரணம் என்னோட உயிர யாரும் இங்க கஷ்டப் படுத்தக் கூடாதுனு தான் யாராவது உன்னை எதாவது சொல்லிடுவாங்களோங்கிற பயம் அதுதான் என்னை அப்படி செய்ய வச்சுச்சு..(நாம கூட இந்த பையன தப்பா புரிஞ்சுக்கிட்டோமே...)
நீ எல்லாரோட பாசத்துக்கும் எப்படி ஏங்குறனு எனக்கு தெரியும்,அதுவும் அப்பா பாசத்துக்கு..எப்படி தெரியும்னு பாக்குறியா என்னோட அத்தையோட ஒரு குணம் உன் கிட்ட இருக்கே டைரி எழுதுறது...
நீ டைரில எழுதாம உன்னோட நோட் புக்ல எழுதி வச்சி இருந்த அதைப் படிச்சப்ப எனக்கு புரிஞ்சது நீ எப்படி எல்லாம் பாசத்துக்கு ஏங்குறனு..
அதான் உன்னை மாமாவோட சேர்த்து வைக்கணும்னு நினைச்சேன்..,இவ்வளவு நாள் மாமா உன்னை பார்க்க வராதனால தான் இப்படி நடந்துகிட்டனு நினைச்சேன் ஆனா இப்படி ஒரு கடந்த காலம் உன்னோட வெறுப்புக்கு காரணமா இருக்கும்னு நினைக்கல..”என்று அவன் சொல்லி முடிக்க தன்னவன் தன் மீது வைத்துள்ள காதல் அவளுக்கு புரிந்தது..
“ஆனா நீங்களும் என்னை நம்பல இல்ல மாமா, அப்பாக்கு நான் கிட்னி கொடுக்காத விஷயத்துல..,உங்களுக்கே தெரியும் நான் எனக்கு பிறக்கும் முதல் குழந்தை எங்க அம்மானு நினைக்கிறது..,அன்னைக்கி டாக்டர் சொன்னப்ப நான் எவ்வளவு சந்தோஷப் பட்டேன் தெரியுமா..,அத உங்க கிட்ட சொல்லவரப்ப எல்லாரும் பேசுன பேச்சு,நீங்க என்கிட்ட எதுவும் கேட்காதது எல்லாம் சேர்ந்து என்னை உங்க கிட்ட சொல்லவிடலை..”என்று அவன் மீது தன் மனதுக்குள் மீதி இருந்த குற்றத்தையும் சாட்ட