“ஹ்ம்ம்ம் எல்லாம் என் மறுமகள் வந்த நேரம்... “ என்றார் தன்னை மறந்து
“மறுமகளா??? யாரது?? “என்றான் சந்தேகமாக...அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவர்
“பாரதி தான்டா... அண்ணா பொண்ண மறுமகள்னு தான் சொல்லுவாங்க.. அந்த உரிமையில தான் சொன்னது.. “என்று சமாளித்தார்...
“ஹ்ம்ம் எப்படி இருக்கார் என் மாமா??... “ என்றான் நக்கலாக
“ஹ்ம்ம்ம் நல்லா இருக்கார்... உன்னை அடிக்கடி கேட்பாங்க.. பாரதியை தான் அவங்க எல்லாம் மிஷ் பண்றாங்க... “ என்று பெருமூச்சு விட்டார்..
“எதுக்கும் கொஞ்சம் பார்த்து உஷாரா இருங்க.. யாரையும் சீக்கிரம் நம்பிடாதிங்க.. “ என்றான் கண்கள் இடுங்க
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா... “ என்று அவனை முறைத்தார்...
அவனும் எழுந்து சிரித்துகொண்டே அலுவகம் கிளம்பி சென்றான்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ென
அந்த பாடலின் பொருள் உண்மை அந்த பாடலை கேட்கும்பொழுது புரியவில்லை.. அதையே தான் அனுபவிக்கும் பொழுது எவ்வளவு சத்தியமானது அந்த வரிகள் என்று மெச்சிக்கொண்டாள்....
அவளை ஏமாற்றாமல் சீக்கிரமே ஆதி வந்து அழைப்பு மணியை அழுத்தவும் முதல் அழைப்பிலயே ஓடிப்போய் கதவை திறந்தாள்..