அவன் முகம் கடுகடு வென்று ஆகவும்
“ஆஹா அந்த சிடுமூஞ்சி அந்நியன் மறுபடியும் வந்திட்டானே...இனிமேல் நான் எது சொன்னாலும் கேட்கமாட்டான்.. “என்று திட்டிகொண்டே வேகமாக எழுந்தவள் அவனை முறைத்தவாறு காருக்குள் சென்று அமர்ந்து கொண்டு மறுபக்கம் திரும்பி கொண்டாள்..
அவள் கோபமாக எழுந்து செல்லவும் கொஞ்சம் இறங்கியவ்ன் தன் அலைபேசியை எடுத்து சுசிலாவை அழைத்தான்... அவர் அழைப்பை ஏற்றதும்
“மா... ஒரு சந்தேகம்... பேபி வயிற்றில இருக்கும் பொழுது ஏதாவது கேட்டு அது செய்யலைனா பேபி காதுல சீல் வருமா?? “ என்றான் சந்தேகமாக...
அதை கேட்ட சுசிலா சிரித்தார்...
“யார் சொன்னா கண்ணா?? “
“நீங்க சொல்லுங்க.. வருமா?? .. “
“அதெல்லாம் சும்மா கண்ணா.. அப்படியாவது அந்த தாய் ஆசைப்படறதை எல்லாம் மத்தவங்க நிறைவேற்றி
...
This story is now available on Chillzee KiMo.
...
. ஐஷ்கிரீம் வேற கரைந்து கொண்டிருக்க இதுக்கு மேல பிகு பண்ண வேண்டாம் .. “ என்று யோசித்து வேகமாக அவனிடம் இருந்து பிடுங்கி சுவைக்க ஆரம்பித்தாள்..
அந்த ஐஷ்கிரீம் அவள் தொண்டையில் இறங்கவும் அவள் உதட்டில் படிந்த அந்த கிரீம் அவனை சுண்டி இழுத்தது.. அவள் உதட்டின் மேலெயே படிந்தது அவன் பார்வை...