(Reading time: 35 - 70 minutes)

அதற்குள் அவர்கள் உணவு வரவும் பாரதி அதை ஆர்வமாக சுவைத்து சாப்பிட்டாள்.. ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவி வந்து அமர்ந்தாள்...

அவளின் பார்வை எதேச்சையாக அருகில் இருந்த ஒரு குழந்தை கையில் வைத்து சாப்பிட்டு கொண்டிருந்த ஐஷ்கிரிமில் சென்று நின்றது...

உடனே அவளுக்கு திருச்சி ஞாபகம் வந்தது.. அவள் மருத்துவமனையில் வேலை செய்யும் பொழுது வேலை முடிந்ததும் வார வாரம் சனிக்கிழமை திருச்சி மலைக்கோட்டைக்கு சென்று விடுவர் அடுத்த நாள் விடுமுறை என்பதால்... 

அங்கு வேலை செய்யும் மற்ற நண்பிகளுடன்  ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டே அந்த மலைக்கோட்டையில் ஏறி  உச்சிபிள்ளையாரை தரிசித்து விட்டு அந்த மலையில் காலை நீட்டி அமர்ந்து கொண்டு அங்கு வீசும் காற்றை இழுத்து சுவாசிப்பாள்.. பின் அரை மணி நேரம் எல்லா கதையும் பேசி

...
This story is now available on Chillzee KiMo.
...

து.. “ என்றாள்  கை தட்டி சிரித்தவாறு

“பட்டிகாடா இருந்தாலும் பாயிண்ட் ஐ புடிச்சிட்டாளே.. இப்ப எப்படி சமாளிக்கிறது?? “என்று மனதுக்குள் புலம்பியவன்

“ஏய்.. நீ என்னதான் சொன்னாலும் உனக்கு ஐஷ்கிரீம் கிடையாது.. “என்றான் முகத்தை கடுமையாக வைத்துகொண்டு.. அப்பவாது அவள் அடங்குவாள் என்று...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.