(Reading time: 40 - 79 minutes)

அசடு வழிந்த கீதா கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில், சரி சரி கிண்டல் பண்ணாமல் கேட்டதற்கு பதில் சொல் என்றாள் கெத்தாக.

பேசும் சத்தம் கேட்டு மகள் இன்று யாருடன் வம்பை ஆரம்பித்து இருக்கிறாள் என்று பார்க்க வந்த ராகவ் வாசலில் நிற்கும் சுவாதியை பார்த்து மகிழ்ந்து போனார். ராகவ்கு எப்போதுமே சுவாதி என்றாள் பிடிக்கும் அதற்கு காரணம் அவள் எப்போதும் தைரியமாக இருப்பதுதான். தப்பு என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் முகத்திற்கு நேராக கேட்டு விடுவாள். அதுபோல் பல முறை அவளின் தந்தை திட்டும் போது எதிர்த்து பேசி அடி வாங்கிக்கொண்டு வருபவளை ராகவ்வே பல முறை சமாதானம் பண்ணி வைத்துள்ளார். அப்பாவின் பாசம் என்ன என்பதை ராகவ்தான் சுவாதிக்கு காட்டினார். அதனால் சுவாதி ராகவ்வை அப்பா என்றே கூப்பிடுவாள்.

சுதி செல்லம் என்று ராகவ்வின் குரலில் தோழிகள் இருவரும் திரும்பி பார்த்தனர்.

ராகவ் இருவருக்கும் அருகில் வந்தவர் என்றும் இல்லாத திருநாளாய் மகள் ஆறு மணிக்கு எழுந்து தன்னுடன் பேப்பர் படிக்கிறேன் என்று வம்பிழுத்து கொண்டிருக்கும் போதே நினைத்தேன் என்ன டா இது இன்றைக்கு சூரியன் மேற்கே உதிக்க போகிறாரா என்று, நல்ல வேளை அப்படி எல்லாம் இல்லை என்ற ரீதியில் நீ வந்திருக்கிறாய் நீ வருவதாக முதலிலேயே தெரிந்ததால்தான் சீக்கரம் எழுந்திருக்கிறாள் என்று மகளை கிண்டல் செய்தவர்

என்ன கீது இப்படி வாசலிலேயே பேசி அனுப்பிவிட முடிவு செய்திருக்கிறாயா என்றார். அவளே இவ்வளவு நேரம் பயணம் செய்த கலைப்பில் இருப்பாள் இருவரும் வெளியில் நிற்க வைத்து பேசி கொண்டிருகிறீர்கள் என்று கூறியவாறு வந்தார் வள்ளி.

வா மா சுவாதி என்று வீட்டினுள் மூவரும் நுழைந்தனர். வள்ளி அனைவருக்கும் காபி கொண்டு வந்தார். மூவரும் ஆளுக்கு ஒரு டம்ளர் எடுக்க கீதா பயங்கர யோசனையில் இருந்தாள். கீதாவின் தாய் காபி குடிக்கும் போது என்ன யோசனை என்றார்.

சுவாதி வருவதை நான் உங்களிடம் சொல்லவே இல்லை ஆனால் நீங்கள் அப்பாவை போல் ஆச்சரியபடவில்லையே என்று கேள்வியாக தாயை பார்க்க அவரோ சிரித்துக் கொண்டே

சுவாதி வருவதை என்னிடம் சொல்லவில்லை அது போல் வீட்டு அட்ரஸை நீ சுவாதியிடம் சொல்லவில்லை நேற்று நீ கோவிலுக்கு போகும் போது உன்னுடைய போனை வீட்டிலேயே வைத்து விட்டு போய் விட்டாய் அப்போதுதான் சுவாதி அட்ரஸ் கேட்க போன் செய்தால் நீ இல்லாததால் நான் போன் எடுத்து பேசினேன். என்னிடம் அட்ரஸ் கேட்டு குறித்துக் கொண்டாள். அது மட்டும் இல்லை எத்தனை மணிக்கு என்றாலும் பஸ் ஏறும் போது போன் பண்ண சொன்னேன் போதுமா விளக்கம் என்றார் வள்ளி.

கீதாவோ தாயை பார்த்து வரவர வாய் அதிகமாயிடுச்சி வள்ளி உனக்கு ஒரு கேள்வி கேட்டாள், ஒரு பக்கமாகவா பதில் சொல்வாய் என்றாள். ராகவ்வோ சுவாதி வருவதாக என்னிடம் இருவருமே சொல்லவில்லை முதலிலேயே சொல்லியிருக்கலாம் இல்லயா, நாமே சென்று அழைத்துவந்திருக்கலாம்.

நான் சொன்னேங்க சுதிதான் எதுக்குமா அப்பாக்கு வீண் அலைச்சல் நான் மொழி தெரியாமல் முழிக்கவா போகிறேன் என்று கேட்டுவிட்டு திடீர் என்று வந்தாள் அப்பாக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாதிரி இருக்கும்னு சொல்லிட்டா என்றவர் கோபமாக கீதாவின் பக்கம் திரும்பினார்.

வீட்டிற்கு சுவாதியை வர சொல்லி விட்டு அட்ரஸ் கூட சொல்லவில்லை கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்லை என்று திட்ட ஆரம்பிக்க வெயிட் வள்ளி என்றவள் வேகமாக அவளது அறைக்கு ஓடினால்.

இவள் எங்கு ஓடுகிறாள் என்று புரியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கா, இருக்க இருக்க நீ சின்ன புள்ளைய பெரிய புள்ளைய என்ற வள்ளியின் குரல் கேட்டு வள்ளி என்ன இது என்பது போல் மகளை முறைக்க, கீதா குறும்பாக சிரித்துக் கொண்டே போன முறை என்னை திட்டும் போது என்ன சொன்னீங்க என்றாள் வள்ளியை பார்த்து.

வள்ளி என்ன சொன்னேன், என்பது போல் பார்க்க வயசாகிடுச்சுல அதனால மறந்திருப்பீங்க நானே சொல்றேன். என்னை திட்டி திட்டி ப்ரசர் வர போகுதுனு சொன்னீங்க இல்ல அதனால போன டைம் நீங்க திட்டும் போதே ரெக்கார்டு பண்ணிட்டேன் என்ற மகளை வள்ளி கொலை வெறியோடு பார்க்க ராகவ் மகளை மெச்சுதலாக பார்க்க இதை பார்த்த சுவாதி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கவில்லை என்றாலும் மெல்லிய புன்னகையை தவழ விட்டாள்.

வள்ளி சுவாதியை கவனித்து யோசனையில் ஆழ்ந்தார். சாதாரணமாய் கீதா வள்ளியை கிண்டல் செய்தாள் கீதாவை கிண்டலடித்து கீதா அம்மா தாயே தெரியாமல் சொல்லிவிட்டேன் ஆளைவிடு என்று கூறும் வரை விட மாட்டாள். ஆனால் இன்று ஏதோ யோசனையிலும் மெல்லிய புன்னகையோடும் அமர்ந்திருந்த சுவாதி புதிதாக தெரிந்தாள். ராகவ்வையும் கீதாவையும் பார்த்தார் அவர்களும் சுவாதியை ஆராச்சியாக பார்க்க இதை பற்றி பிறகு பேசலாம் என்று இருவருக்கும் விழியால் கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.