அவன் கேள்வி எல்லாம் தெரிந்துதானே வந்தாய் என்ற தொனி இருப்பதை உணர்ந்தவள்.நான் நினைத்தது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று முழித்தவள் தன்னை சமாளித்து கொண்டு இப்ப மட்டும் இவ்வளவு மரியாதையாக பேசும் நீங்கள் அங்கு ஏன் ஒருமையில் பேசினீர்கள்.ஆபிஸில் அனைவரின் முன்பும் எந்த தைரியத்தில் என் கையை பிடித்து இழுத்து வந்தீர்கள்.அதே போல் எல்லோரும் பார்க்க ரோட்டில் கையை பிடித்து காருக்கு இழுத்து வந்தீர்கள் என்ன உரிமையில் இதை எல்லாம் செய்தீர்கள் என்று இவ்வளவு நேரம் மனதில் உள்ளதை கொட்டினாள்.
எந்த உரிமையும் இல்லை.நான் உங்களுடன் பேச வேண்டும் அதனால் அப்படி நடந்து கொண்டேன் அதற்காக இப்போது சாரி கேட்டு கொள்கிறேன் போதுமா இனிமேலாவது அமைதியாக வருவீர்களா என்றான் குரலில் பவ்யமாகவும் கண்களில் குறும்புடனும்.இவன்நம்மை கிண்டல் செய்கிறானா சமாதானபடுத்துகிறானா என்று புரியாமல் கீதா குழம்பி அமைதியாகிவிட கார் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் முன் நின்றது.
கேள்வியாக பார்த்தவளிடம் முதலிலேயே சொன்னேனே என்ற பார்வையை நகுல் பார்க்க அமைதியாக இறங்கி நடந்தாள்.ஹோட்டலில் ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்தார்கள்.
என்னிடம் என்ன டா பேசனும் சீக்கிரம் சொல்லி தொலையேன் நான் நினைத்த விசயமாக இருக்க வேண்டும். விநாயகா நான் உனக்கு விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு மோதகம் அதிகமாக வைக்கிறேன் என்ற வேண்டுதலை வைத்து கொண்டிருந்தாள் மனதிற்குள்.
பேரர் வரவும் என்ன சாப்பிடுகிறாய் என்பது போல் நகுல் பார்க்க எனக்கு எதுவும் வேண்டாம் என்பது போல் தலையாட்டவும் இருவருக்கும் காபி சொல்லி அனுப்பினான்.
சொல்லுங்க சார் உங்களுக்கும் அபிக்கும் என்ன சம்பந்தம் என்றாள்.
அவளை ஆச்சரியமாக பார்த்தவன்.என் பெயர் நகுல் என்றவனை நக்கலாக பார்த்து அதுதான் சொல்லிட்டிங்களே என்றவளை கூர்மையாக பார்த்தவன்.என் அண்ணன் பெயர் அர்ஜூன் என்றான்.கீதாவின் முகம் மலர்வதை கவனித்தவன்.நான் எதற்கு உங்களை பார்க்க வந்தேன் என்று புரிகிறதா என்றான்.
கீதா வேகமாக தலையை ஆட்டி அர்ஜூன் சார் எப்படி இருக்கிறார்.அவரும் வந்திருக்கிறாரா.அவருக்கும் சுவாதிக்கும் என்ன பிரச்சனை எதனால் அவள் இங்கு வந்து தனியாக கஷ்டபடுகிறாள் என்று படபடவென பொறிய நகுல் ஆச்சரியமாக கீதாவை பார்த்து உங்களுக்கு ஒன்றும் தெரியாதா அண்ணி ஒன்றும் சொல்லவில்லையா என்றான்.
உடனே அவள் அழுத்துக்கொண்டே அட போங்க சார்.அதை பற்றி பேசி என்னை கஷ்ட்டபடுத்தாதீங்கனு சொல்லிட்டா.ஊருக்கு போய் என்ன நடந்ததுனு விசாரிக்கலாம் என்று அவள் வளைகாப்பு முடிந்தவுடனே வீட்டில் அனைவரிடமும் சென்னையில் புராஜெக்ட் ஒர்க் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
என்னை தனியாக கூப்பிட்டு எந்த ஊர் என்று விசாரித்தாள் நான் சொன்னவுடன்,என் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து குழந்தை மீது சத்தியம் வேலை விசயமாக எங்கு வேண்டுமானாலும் போ என்னைபற்றியோ அவரைபற்றியோ விசாரிக்க கூடாது என்று சொல்லிவிட்டாள் என்றவளை பார்த்தவன்.பிறகு என்ன செய்தீர்கள் என்ற கேள்வியில் வேற என்ன செய்வது அம்மா சாப்பாடு இல்லாமல் நாகபட்டினம் போய் ஹோட்டல் சாப்பாடு பத்து நாள் காஞ்சுபோய் வந்தேன் என்றாள்.
அபியின் பிறந்த சான்றிதழ் பார்த்துதான் அவருடைய பெயரே எங்களுக்கு தெரிந்தது என்றாள் சோகமாக.
அபியின் பிறந்த நாள் அன்று அம்மா மீண்டும் அபியின் அப்பா என்று ஆரம்பித்தார்கள்.அம்மாவை கை நீட்டி தடுத்தவள் அவரை பற்றி எதாவது விசாரித்தாள் உங்களிடம் கூட சொல்லாமல் எங்காவது சென்று விடுவேன் என்று சொல்லிவிட்டாள்.அதன் பிறகு அந்த பேச்சை யாரும் எடுப்பதில்லை.
முதலில் எப்படி எண்ணெயில் போட்ட கடுகாக பொறிந்தாள் அண்ணன் பெயர் சொன்னவுடன் அமைதியைகிவிட்டாள்.அவர்கள் வாழ்வை இணைக்க இவள் கண்டிபாக உதவுவாள் என்று தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தவன் பேச ஆரம்பித்தான்.அவர்களுள் என்ன பிரச்சனை என்று எனக்கும் தெரியாது.ஆனால் எனக்கு ஓரளவு கெஸ் இருக்கிறது.
அண்ணன் முதன்முதலில் பார்த்து காதலித்தது சுவாதி அண்ணியின் அக்கா மாலதியைதான் என்று சொன்னவுடன்.வாட் என்று கத்திவிட்டாள் பிறகு சுற்றுபுறத்தை அறிந்து அனைவரிடமும் ஒரு மன்னிப்பை வேண்டி அமர்ந்தவள். ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துவிட்டாள்.
தோழியின் குணத்தைபற்றி அறிந்ததால்.இனி சுவாதியின் வாழ்வை சரிசெய்யவே இயலாதா என்று சோர்ந்து போனால்.அவளின் அதிர்ச்சியையும் அடுத்து அவள் முகம் யோசனைக்கு சென்று சோர்ந்து போனதை பார்த்து கொண்டிருந்தவன்.
அட செல்ல குட்டி டக்கு டக்குனு ரியாக்க்ஷன் மாத்துரியே.நீ கண்ணுலயே அபிநயம் பிடிக்கிறத பார்த்தா மாமா கண்ட்ரோல் மிஸ் ஆகுது செல்லம் என்று மயங்கினான்.தீவிரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் காரணம் கேட்க.
கீதா சுவாதியின் குணத்தைபற்றி சொன்னாள்.மற்றவர்கள் பொருளை தொடவே மாட்டாள் சார்.மாலதி கூட இவள் டிரஸ் மாத்தி காலேஜ்கு போட்டு போவாள் ஆனால் பிறகு அவளையே அந்த டிரஸை வைத்துக்கொள்ள சொல்லிவிடுவாள்.என்னுடையது எனக்கு மட்டும் தான் என்று எண்ணுபவள்.ஆனால் அவள் மீது அதிக பாசம் வைத்திருந்தாள்.அவள் பயந்த சுபாவம் அதனால் எங்கு சென்றாலும் சுதி அவளுடன் காவலுக்கு செல்வாள்.