(Reading time: 40 - 79 minutes)

முன்னாடி யார் வருகிறார்கள் என்று பார்க்காமல் வேகமாக வந்த தன்னுடைய முட்டாள் தனத்தை நொந்து கொண்டு சாரி சார் நான் குழந்தையை பார்த்துக்கொண்டு வந்ததால் உங்களை கவனிக்கவில்லை ஐயம் எக்ஸ்ட்ரிம்லி சாரி சார் என்று பட படவென்று கூறியவள்.என்ன ஒன்னும் பேசவில்லை என்று நிமிர்ந்து பார்த்தவள் ஆச்சரியபட்டு போனாள்.

ஆறடி உயரத்துடனும் கோதுமை நிறத்துடனும் கூர் நாசியுடன் தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவனின் பார்வை தன்னுள் அதிர்வை ஏற்படுத்துவதை உணர்ந்தவள்.அதை பற்றி யோசிக்காமல் ஒதுக்கினாள்.அந்த நேரத்திலும் பனை மரத்தில் பாதி இருப்பான் போல என்று கிண்டலாக நினைத்துக்கொண்டாள்.

அபி உளுக்கவும் தன்னிலை அடைந்தவள் அந்த இடத்தை விட்டு எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சென்றுவிட்டாள்.அவனோ அவள் வருவதை பார்த்து அவளிடம் பேசலாம் என்று வந்தவன்.அவள் கண்கள் காட்டும் ஜாடையை ஒவ்வொன்றாக ரசித்தான்.

முதலில் யாரோ மீது மோதிவிட்டோமே என்ற கலக்கம் பிறகு சரியாக கவனிக்காமல் வந்த தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி தன்னை தானே மனதில் மானசீகமாக கொட்டிகொள்வது கடைசியில் அவனை மேலும் கீழும் பார்த்து கண்களால் சிரித்து அவனின் உயரத்தை கிண்டல் செய்வது போல் சிரித்தது அனைத்தையும் ரசித்துக்கொண்டிருந்துவிட்டு எப்படி ஒருவரால் கண்களாலேயே தன் உணர்வுகளை காட்டமுடிகிறது என்று ஆச்சரியபட்டு போனான்.

அப்படியே நின்றவன் தன்னிலை அடையும் போது வெகு நேரம் ஆகி இருந்தது.ச்ச்ச.......... பேச வந்த விஷயத்தைவிட்டு விட்டு அவள் கண்களை பார்த்து என்ன பேச வந்தோம் என்பதையே மறம்துவிட்டேனே,வெரி டேஞ்சரஸ் ஐஸ் என்று தலையை குழுக்கி கொண்டவன்.இவளிடம் இனி பேசும் போது கண்ணை பார்க்கவே கூடாது என்று தன்னால் கடைபிடிக்க முடியாத முடிவுக்கு வந்தான்.

ஒருவாரம் கடந்த நிலையில் அன்று ஆபிஸ்க்கு சென்ற கீதாவிற்க்கு அதிர்ச்சியே காத்திருந்தது.ஆபிஸ் போனவள் வேலையில் மூழ்கிபோனாள். பியூன் வந்து தன்னை அழைக்கும் வரை.

மேடம் என்று சத்தமாக அழைத்த பிறகே பியூன் தன்னை அழைப்பதை உணர்ந்தவள்.நிமிர்ந்து என்ன அண்ணா எதற்கு இப்படி கத்துகிறீர்கள் எனக்கு நன்றாக காது கேட்கும் என்றாள் கிண்டலாக.அதற்கு அந்த வயது முதிர்ந்த பியூனோ அவளை பார்த்து மென்மையாக சிரித்து.உங்களை மூன்று முறை கூப்பிட்டேன் மேடம் நீங்கள் கவனிக்கவில்லை என்றவர் எம்.டி சார் உங்களை வர சொன்னார் என்று சொல்லிவிட்டு தன் பணி முடிந்தது என்னும் வகையில் அங்கிருந்து கிளம்பினார்.

என்ன கீதா உனக்கு வந்த சோதனை இவர் எதுக்கு உன்னை கூப்பிடுகிறார் என்று நினைத்தவள்.சரி விடு எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா என்று தனக்குள் கூறியவாறு எம்.டி அறையை நோக்கி சென்றாள்.

கதவை தட்டி அனுமதி கிடைத்தவுடன் உள்ளே சென்றவள் அதிர்ந்து தான் போனாள்.ஏன் என்றால் எம்.டி சீட்டிற்கு எதிர் புறம் அமர்ந்திருந்தவன் போன வாரம் பார்க்கில் மோதியவன்.இவன் எதற்கு இங்கு வந்தான் என்று யோசிக்கும் போதே அதற்கான விடையை சொல்வது போல் அவளின் எம்.டி வரதராஜன் பேச ஆரம்பித்தார்.

வா மா கீதா உனக்கு என்கேஜ்மண்ட் முடிந்த விஷயத்தை என்னிடம் நீ சொல்லவே இல்லை சார் தான் சொன்னார்.சாரை எனக்கு நன்றாக தெரியும் போர்டு மீட்டிங்கில் நிறைய முறை சந்தித்து பேசி இருக்கிறோம் என்றார்.இவரிடம் தான் நம்முடைய பல டீலிங் முடிந்திருக்கிறது என்று பேசிக்கொண்டே போக கீதாவோ பேச்சின் ஆரம்பத்திலேயே அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்து சிலையானாள்.

இவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தாள் இப்படி எல்லாம் சொல்லி இருப்பான் என்று மனதுக்குள் குமைந்து கொண்டு இருந்தவள் தன் எம்.டி இன்னும் பேசி கொண்டிருப்பதை உணர்ந்தவள்,சார் என்ற வார்த்தையை மட்டும் தான் சொன்னாள்.

அதற்குள் அந்த பனை மரத்தில் பாதி வளர்ந்தவன் அவள் என்ன சொல்ல போகிறாள் என்பதை ஊகித்தவன் போன்று அவனே பேச ஆரம்பித்தான்.சார் நேற்று இருவரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம் திடீரென முக்கியமான மீட்டிங் அரேஞ்பண்ணிவிட்டர்கள் என்னால் அவளை சந்திக்க போக முடியவில்லை,அதனால் மேடம் என்மேல் கோபத்தில் இருக்கிறார்கள்.அதை சரி செய்யதான் வெளியில் அழைத்து செல்ல உங்கள் அனுமதி கேட்கிறேன் என்று சரமாரியாக பொய்யை அவிழ்த்துவிட்டான்.

 அவன் பொய்யால் கோபத்தின் உச்சிக்கு சென்றதால் அவள் முகம் சிவக்க அதற்கு எம்.டியோ என்னமா நீ வேலையில் இருக்கும் உனக்கே தெரியும் திடிர் என்று சில சமயம் கிளையண்ட் மீட்டிங் அரேஞ் பண்ணுவார்கள் என்று இதற்காக கோபப்படலாமா என்று சில பல அட்வைஸ்களை வழங்க கீதாவிற்க்கு பிபி எகிறி கொண்டிருந்தது.

போ மா போய் அவருடன் சமாதானமாகு உனக்காகவும் வருங்காலத்தில் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்காகவும் தான் அவர் சம்பாதிக்கிறார்.அது புரியாமல் இவருடன் சண்டை போடாமல் சமாதானமாக பேசு மா என்று சொன்னவுடன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.