அவர் பேசுவதை கேட்ட இருவருமே அதிர்ந்துதான் போனர்.இதற்குமேல் இவரை பேச விட்டால் இவளை சமாளிப்பது கஷ்டம் என்று உணர்ந்தவன் உடனே எழுந்து நன்றி சார்.இன்று ஒரு நாள் லீவ் இவளுக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறியவன் கை பிடித்து அவர் அறையில் இருந்து இழுத்து வந்தான்.
எம்.டி பேசுவதை கேட்டு கீதாவிற்கு கோபம் ஏறிகொண்டே போக அவனோ அவளின் கை பிடித்து அனைவரின் முன்பும் இழுத்து சென்றது ஒரு மாதிரி இருந்தாலும்,இவன் எதற்கு இப்படி ஒரு பொய்யை சொன்னான் என்ற கேள்வி பூதாகரமாக எழுந்தது.
எம்.டி சார் சொல்வதை வைத்து பார்த்தால் இவன் பெரிய பணக்காரன் என்று தெரிகிறது.என்னிடம் பேச இவனுக்கு என்ன இருக்கிறது.போன வாரம் பார்த்ததுக்குள் என்று யோசித்தவளின் மனதில் பொறி தட்டியது.இவன் போன வாரம் பார்க்கில் அபியை வைத்த கண் எடுக்காமல் பார்த்தானே அபி விஷயமாக இருக்குமோ என்று யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டவள்,இவன் தன்னிடம் ஏதோ பேசதானே கூப்பிடுகிறான் என்ன சொல்கிறான் என்பதை கேட்போமே பார்க்க ஒன்றும் மோசமாக நடந்து கொள்பவன் போல் தெரியவில்லை.அப்படியே முயற்சி செய்தாலும் நான் கற்ற கராத்தே எனக்கு துணை இருக்கிறது.ஒரு வேளை நான் நினைத்த விஷயம் என்றால் மகிழ்ச்சி என்று யோசித்து அவன் சொன்ன பொய்யை தடுக்காமல் அமைதியாக இருந்தாள்.
இருவரும் கை பிடித்து நடந்து வருவதை பார்த்த அனைவரும் கீதாவை ஆச்சரியமாக பார்க்க அதை உணர்ந்து சங்கடமாக அவனையும் அவன் கையில் இருந்த தன் விரல்களையும் பார்த்து தன் விரல்களை உருவ முயன்றாள்,அவனின் பிடி மேலும் இறுகியதே தவிர அவளை விடவில்லை.வேறு வழி இன்றி கீதாவே கையை விடுங்கள் நானே வருகிறேன்,அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள் என்றாள்.அவனும் புரிந்து கொண்டு சாரி நான் வேண்டும் என்று பிடிக்கவில்லை,உங்கள் எம்.டி பேசிகொண்டே இருந்தார் அவரிடம் இருந்து தப்பிக்க தான் என்றான்.அவன் கூறிய சமாதானத்தை ஏற்றுகொண்டாலும் அவனை கூர்மையாக பார்த்து யார் நீங்கள் என்றாள்.
காரில் உட்காருங்கள் ஏதாவது சாப்பிட்டு கொண்டே பேசலாம் உங்களுடன் பேசவேண்டும் என்ற டென்சனில் நான் காலையில் சாப்பிடவில்லை ரொம்ப பசிக்கிறது என்று பாவம் போல் கூறவும் கீதா சிரித்து விட்டால்.
என்ன சார் நீங்க எவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேன் என்னிடம் பேச எதற்கு பயப்படவேண்டும் என்றாள் கிண்டலாக.அவளை கூர்மையாக பார்த்தவன் என்னைபற்றி உனக்கு எப்படி தெரியும் என்றான்.
அவனின் ஒருமை அழைப்பு மனதை பாதிக்க இங்க பாருங்க சார் முதன் முதலில் பார்க்கும் பெண்ணிடம் இப்படிதான் பேசுவீர்களா மரியாதை கொடுத்து பேசுங்கள் என்றாள். அவளுக்கு பின்னால் எட்டி பார்த்தவன்,அவன் கண்களில் தான் எதிர்பார்த்தது நடந்துவிட்ட மகிழ்வுடன் திரும்பி கீதாவை பார்த்து சிரித்துகொண்டே அப்படிங்களா மேடம் ஓகே மேடம் என்று பணிவு போல் கூறி அவளின் கைபற்றி கூட்டி{இழுத்து} சென்று காரில் அமர வைத்தான்.
கீதாவோ என்ன சார் இது விடுங்கள் என் கையை என்றாள் கோபமாக.அவளுக்கோ என்ன மனிதன் இவன் எந்த கேள்வி கேட்டாலும் பதில் இல்லை.இவன்பாட்டிற்கு வந்து இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டது என்கிறான்.கையை பிடித்து அனைவரின் முன்பும் இழுத்துவருகிறான்.போன வாரம்தான் பார்த்த ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது.
நாம் நினைத்த விசயமாக இருக்கும் என்று அமைதியாக இருந்தாள் இவன் பண வசதி தெரிந்ததால் இவனுடன வருகிறேன் என்று நினைப்பான் போல என்ற கோபத்தில் மனதுக்குள் குமுறி கொண்டு இருந்தாள்.அவன் அவளை இழுத்து சென்றான்.ஆம் சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு அன்பாக அழைத்து சென்றது போல் தெரியும் ஆனால் அவன் பிடித்த இடம் உடும்பின் பிடிபோல் இருந்ததால் அவன் இழுப்பிறக்கு சென்றாள்.
காரில் அமர்ந்தவன் எதிர் பார்த்த ஆள் இவர்களின் காரை நோக்கி வருவதை உணர்ந்து காரை வேகமாக கிளப்பினான்.நினைத்தது நடந்த சந்தோசத்தில் அவன் இருக்க கீதாவோ அவனை திட்டிக்கொண்டே வந்தாள்.பொறுத்து பொறுத்து பார்த்தவன் கீதாவின் வாய் மூடமல் பேசி கொண்டே இல்லை இல்லை அவனை திட்டி கொண்டே இருக்கவும்.இவளை எப்படிதான் இவர்கள் வீட்டில் சமாளிக்கிறார்களோ வாய் மூடாமல் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்று நினைத்து அவனை பற்றி கூற ஆரம்பித்தான்
என் பெயர் நகுலன் என்றான்.இருந்துவிட்டு போ அதனால் எனக்கென்ன என்பது போல் பார்த்த அவள் பார்வையில் புரிந்து கொண்டவன்.நான் உங்களிடம் முக்கியமான விசயம் பேச வேண்டும் அதனால் தான் அப்படி உங்கள் எம்.டியிடம் சொன்னேன்.நீங்களும் புரிந்து கொண்டுதான் என்னுடன் கார் வரை வந்தீர்கள் இப்போது எதற்காக திட்டுகிறீர்கள் என்றான்.