ஆம் வந்தது நகுலனேதான்.அவனும் கீதா இப்படி இருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை என்பது அவனது சங்கடமான பார்வையிலேயே தெரிந்து கொண்டாள்.உடனே நகுலன் எதிர் புறம் திரும்பி கொண்டு இருவரையும் உன் அறையிலேயே ஓய்வெடுக்க சொன்னார்கள்.அதனால்தான் வந்தேன் என்றவனது பதிலில் ஓரளவு சமாதானம் ஆனாள்.
இந்த அப்பாவை என்ன செய்வது காதல் திருமணம் என்று எங்களுக்கு தனிமை தர்ராராம்.இவரை என்னதான் செய்வதோ என்று நொந்து கொண்டு.சரி ஒரு நிமிடம் அப்படியே நில்லுங்கள்.நான் சேஞ்ச் பண்ணிக்கிறேன்.தவறாக நினைக்காதிர்கள் என்று சொன்னவள்.தனது கப்போர்டில் இருந்து வேறு ஆடைகளை எடுத்து மாற்ற துவங்கினாள்.
நகுலன் அப்போதுதான் கவனித்தான் அங்கிருந்த கண்ணாடியை அச்சச்சோ இப்போது எப்படி சொல்வது என்று திணறிய சமயம் அவள் தனது மேலாடையை கழட்டி இருந்தாள்.
டேய் நகுலா இது தப்புடா.அந்த பொண்ணு வேற ஒருத்தரை விரும்புது என்று எவ்வளவோ கண்களுக்கு தடை இட்டும் கேட்காமல்.கண்ணாடி வழியாக அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.அவள் சுடிதாரை மாற்றிய பிறகு இப்போது திரும்புங்கள்.
ரொம்ப தேங்ஸ் நான் சொன்னதை தப்பாக எடுத்து கொள்ளாமல் இருந்ததுக்கு என்றவளை கூர்மையாக பார்தவன்.நான்தான் தேங்ஸ் சொல்லனும் என்றான் விஷமமாக.
நீங்கள் எதுக்கு தேங்ஸ் என்று புரியாமல் பார்த்தவளை பார்த்து சமாளிக்கும் விதமாக வெளியே போக சொல்லியிருந்தால் வெளியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.அறைக்குள் போனவுடன் ஏன் வந்தாய் என்று கேள்வி கேட்டு என்னை குடைந்திருப்பார்கள்.அதிலிருந்து என்னை காப்பாற்றினீர்கள் இல்லையா அதற்கு என்று ஒருவழியாக சமாளித்தான்.
ஏசிதான் ஓடுகிறதே உங்களுக்கு ஏன் இப்படி வேர்க்கிறது. இந்தாங்க ரிமோட் அதிகமாக வைத்து கொள்ளுங்கள்.நான் சென்று உங்களுக்கு மாத்தி கொள்ள என்றவளை தடுத்தவன் பரவாயில்லை நான் இதிலேயே என்றவனை தடுத்து இப்படியே எவ்வளவு நேரம் இருப்பீர்கள்.இதனால்தான் உங்களுக்கு வேர்க்கிறதோ என்னவோ என்றுவிட்டு வெளியேறினாள்.
அடியேய் எனக்கு இந்த டிரசால் வேர்க்கவில்லை.உன்னை டிரஸ் இல்லாமல் பார்த்ததால் வந்த வேர்வை என்று வெட்கமே இல்லாமல் நினைத்து கொண்டவன்.இடுப்புக்கு கீழ மச்சம் இருந்தா அதிகம் கோவம் வரும்னு சொல்லுவாங்களே அது உண்மைதானோ.முதல் நாள் என்னமா கோபபட்டா என்று யோசித்து கொண்டு இருந்தான்.
நகுலன் இந்தாங்க அப்பாகிட்ட புது வேஷ்டி வாங்கிட்டு வந்தேன் கட்டிக்கங்க.இந்த ஜூஸ் உங்களுக்குதான் பாவம் வேர்த்து விறுவிறுத்து போய்டீங்க என்று கொடுத்தவளை இமைக்காமல் பார்த்தான்.
என்ன நகுலன் அப்படி பாக்குறீங்க அன்னைக்கு அப்படி கோபபட்டவள் இன்று சாதாரணமாக பேசுகிறாள் என்றா,அன்னைக்கு சம்மந்தமே இல்லாமல் நீங்கள் கோபபடவும் நானும் கொஞ்சம் என்றவளை முறைத்தவன் சரி..சரி.....ரொம்ப அதிகமாகவே கோபபட்டுவிட்டேன்.இனி நாம் பிரண்ட்ஸ் இல்லயா,அதான் உங்கள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்துவிட்டேன்.
எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க இனி நீங்களும் என்றவள்.ஜூஸ் குடிச்சுட்டு நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க.நான் போய் சுவாதியுடன் இருக்கிறேன் என்றவளை,கொஞ்சம் நில்லு பேபி என்றான் நகுலன்.என்னை பார்த்தால் உங்களுக்கு பேபி போல் இருக்கிறதா?நான் பேபி என்றால் என் பிரண்ட் நீங்களும் பேபியா என்னை அப்படி கூப்பிடாதீர்கள் என்று பொறிந்தாள்.
பேசி முடிச்சுட்டியா எப்பவும் நீ இப்படிதானா?இல்ல இன்னைக்கு மட்டும் இப்படியா?என்று கேட்டவனை புரியாமல் பார்த்தாள்.இன்னைக்குதான் உன் பிரண்டுக்கும் மேரேஜ் ஆகியிருக்கு அவங்க சேரனும்னுதானே நாம இந்த கல்யாணம் செய்தது நீ அங்க போனா என்ன அர்த்தம் சில சமயம் நீ பண்றத பாத்தா மட்டும் தான் பெரிய பொண்ணா தெரியது பல சமயம் நீ இன்னும் வளரவே இல்லையோனு எனக்கு தோனுது என்றான். அவனை பார்த்து அசடு வழிந்தவள் சரி நகுலன் நான் எங்கயும் போகல,வெளியே அபி இருப்பான் அவன் கூட விளையாட போறேன் என்றவள் சிட்டாக பறந்துவிட்டாள்.பின்னே நின்றால் அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி வெளியே விடமாட்டானோ என்று.
என்ன விளையாட போகிறாயா?.............
என்று அவன் கேட்ட கேள்வி அங்கிருந்த சுவர்களிடம்தான்.அவள்தான் எப்போதோ சென்றிருந்தாலே.இவள் ஒரு வளர்ந்த குழந்தை என்று நினைத்தவன் ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை என்று கணவனாக சற்று முன் அவன் கண்ணாடியில் பார்த்ததை நினைத்து தனக்குள் சிரித்து கொண்டு உடை மாற்றி படுத்தவன் எழுந்திரிக்கும் போது மணி 5 என்றது அவனின் கடிகாரம்.
ச்ச... இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமா என்று நினைத்து கொண்டே எங்க என்னோட குட்டி வால காணாம் என்று வெளியில் வந்தான்.