ஹாலில் அண்ணனும்,மாமாவும் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.மற்ற சடங்குகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்றும் முதலில் வள்ளியின் ஆப்ரேஷனை கவனிப்போம் என்று ஒன்றாக சகோதரர்கள் இருவரும் சொன்னதை கேட்டு வள்ளி முனகி கொண்டே சம்மதித்தாள்.
இரயில் பயணம் போல் காலம் செல்ல.இதோ வள்ளியின் ஆப்ரேஷன் முடிந்து அனைவரும் இனி சென்னையில்தான் இருக்க வேண்டும் என்று சொன்னதால் சுதி அபியை பார்த்து கொள்ள என்று வேலையை ரிசைன் செய்தாள்.கீதா அவர்கள் ஆபிஸின் சென்னை கிளைக்கு மாற்றல் வாங்கி கொண்டாள்.அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.
வள்ளியும்,ராகவும் கூட சென்னை வந்துவிட்டனர். கோவிந்தன் தான் டிரஸ்டை கவனிக்க வேண்டும் என்றும் மாதம் இரு முறை வந்து செல்வதாக கூறி நாகபட்டினம் கிளம்பினார்.
அன்று இரவே இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்தனர்.இனி எப்படி சமாளிக்க போகிறோம்?என்று இரு பெண்களும் அமைதியாக இருந்தனர்.இதில் கீதாவின் நிலைதான் மோசமாக இருந்தது.காதலித்தவனையே மணந்திருக்கிறாய் என்று அனைவரும் அவளை கிண்டல் செய்தனர்.
அறைக்கு செல்வதற்கு முன் அபியுடன் விளையாட சீக்கிரம் குட்டி நகுலனையாவது இல்லை குட்டி கீதாவையாவது சீக்கிரம் ரெடி பண்ணுங்க என்று உறவுமுறையில் நாத்தனார் முறையில் இருக்கும் பெண் கூற இவள் என்ன சொல்கிறாள் என்பதை போல் பார்த்து சிரித்து மழுப்பினாள்.
இருவரும் அவரவர் அறைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.முதலிரவு ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத பல அனுபவங்களை தரும் இரவு.
சுவாதிக்கு தான் என்ன நினைக்கிறோம் என்பது புரியவில்லை.ஒரு பக்கம் தன்னுடைய முதல் காதல்.தன்னுடைய வாழ்வில் அவனை மீண்டும் சந்திப்போமா?என்று ஏங்கியவளுக்கு விருந்தாக அவனுடனான திருமணம்.அவளின் காதல் மனம் துள்ளி குதித்தது என்றால் தங்கையாக மற்றொரு மனம் அக்காவின் காதலன் என்று அவனை தள்ளி வைத்தது.
அவனின் மேல் கோபபட வேண்டும் காதல் கொள்ள கூடாது என்று அவள் ஆழ் மனதில் அர்ஜூன் மாலதியின் காதலன் என்று பதிய வைத்த எண்ணம் இவர்களின் வாழ்வில் சூறாவளி வீச தயாராகி கொண்டு இருந்தது.இவ்வாறு காதல் மனதுடனும் தங்கையாகவும் போராடி கொண்டு இருந்தவள்.இறுதியாக நான் முதலில் தேர்வு செய்ததுதான் இதற்கு சரியான வழி.என் காதலை நான் எப்போதும் உங்களுக்கு தெரியபடுத்தமாட்டேன்.என்னுடைய காதல் என்னிடம் இல்லை.
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள்.நான் என் அக்காவிற்கு துரோகம் செய்யமாட்டேன் என்று தெளிவாக தவறான முடிவெடுத்தாள்.
அதே மனநிலையில் தெளிவான முகத்துடன் அவனது அறைக்குள் சென்றாள்.
அர்ஜூன் அவளை பார்த்து சிநேகமாக சிரித்து.
வா வது........... என்னுடைய இந்த சந்நியாசி அறையை சம்சார அறையாக மாற்ற வந்திருக்கும் என் அழகான பொண்டாட்டியை அன்போடு வரவேற்கிறேன் என்று பொண்டாட்டி என்ற வார்த்தையை அழுத்தி கூறி வரவேற்றான்.
என்ன நினைத்ததை
முடித்துவிட்டோம் என்ற கர்வமா.... சுதி.
இல்லை நிச்சயமாக அப்படி இல்லை வது நம் காதல் கைகூடிவிட்டது என்ற சந்தோஷம்....
அர்ஜூன்.
நக்கலாக சிரித்தவள் காதலா நமக்கு இடையிலா,நான் எப்போது உங்களை விரும்புவதாக சொன்னேன் எனக்கு நினைவில்லையே.
உனக்கு பொய் சொல்ல வராது வது அதனால்தான் நீ என்னை பார்த்து கூட பேசமாட்டிக்கிறாய்.என்னை பார்த்து சொல்லு உனக்கு என்னை பிடிக்கவில்லை என்று,......
என்ன தைரியம் சொல்லமாட்டேன் என்ற எண்ணமா?சரி உங்களை பார்த்தே சொல்கிறேன் என்று திரும்பியவள் அதிர்ந்து போனாள்.அவனது பார்வை கணவனாக அவள் உடலில் உரிமையாக மேய்ந்து கொண்டு இருந்தது.
அவனின் பார்வையில் தடுமாறி எ...என்ன........ எதற்கு இப்படி பார்க்கிறாய்.
நான் என்ன செய்தேன்.நீ தான் ஏதோ என்னை பார்த்து சொல்லுவதாக சொன்னாய்.அதான் பார்த்து கொண்டு இருக்கிறேன்.சீக்கிரம் சொல் எனக்கு நிறைய வேலை இருக்கிறது.
இந்த நேரத்தில் என்ன வேலை.என்னவோ செய்துவிட்டு போ.நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்.எனக்கு என்று சொல்ல வந்தவளை நெருங்கினான் அர்ஜூன்.
ஏய் எதற்கு பக்கத்தில் வருகிறாய்?........
அது ஒண்ணும் இல்ல வது குட்டி பொய் சொல்றவங்கள எப்படி கண்டுபுடிக்கறதுனு ஸ்ரீ புருஷானந்த சுவாமி சொல்லியிருக்கார். அதை செய்து நீ உண்மைதான் சொல்கிறாயா என்று செக் செய்ய வந்தேன்.
நான் உண்மையைதான் சொல்லுகிறேன் எனக்கு..... உன்னை.......உன்னை..........
என்ன ஆச்சு வதுமா என்னை எதற்கு இப்படி இழுக்கிறாய்?
நீ முதலில் கையை எடு.....