(Reading time: 36 - 71 minutes)

நகுலன் சொல்வதை கேட்ட கீதாவிற்கு ஏமாற்ற உணர்வு வந்தது போல் இருந்தது.எதற்காக என்று யோசித்து கொண்டே திரும்பி படுத்திருந்த நகுலனின் முதுகை வெரித்து கொண்டு இருந்தவள் அப்படியே வெகு நேரம் கழித்து தூங்கியும் போனாள்.

அடுத்த நாள் காலையில் கண் விழித்த அர்ஜூன் முதலில் பார்தது குளித்து முடித்து மங்களகரமாக வெளியே செல்ல தயாராகி கொண்டு இருந்த சுவாதியைதான்.அவளின் அழகில் சொக்கி போய் பார்த்து கொண்டு இருந்தவன் மகனின் கதவு தட்டும் சத்தத்தில் மீண்டான்.

அப்பா...........அபி

டேய் அபி கண்ணா அதுக்குள்ள எழுந்திட்டீங்களா? அர்ஜூன்

போங்க அப்பா நீங்கதான் பேட் பாய்.நான் காலையில் எழுந்து குளித்துவிட்டு வந்துவிட்டேன்.நீங்கள் இன்னும் தூங்குறீங்க என்று மூக்கை சுருக்கி மகன் மழலையில் பேசும் அழகை கண்டு வியந்தவன்.அது ஒன்னும் இல்லடா கண்ணா நான் சீக்கிரம் எழுந்திருப்பேன் உன் அம்மாவால்தான் லேட் என்று சுவாதியை ஓர கண்ணால் பார்த்து கொண்டே சொன்னான்.

நான் உங்களை என்ன செய்தேன்.நீங்கள்தானே லேட்டாக எழுந்தீர்கள். சுவாதி.

உன்னால்தான் நான் லேட்டாக தூங்கினேன்.அதனால் லேட்டாக எழுந்திருத்தேன்.

என்ன?... சுவாதி

உங்களுடன் என்னால் பேச முடியாது.வா ராஜா நாம் போகலாம்.உன் அப்பாவுக்கு எப்போது கீழே போக வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது வரட்டும்.

இருவரும் கீழே செல்வதை பார்த்த அர்ஜூன் மனம் வாடியது.விளையாட்டாக கூட என்னிடம் அதிகமாக ஒரு வார்த்தை பேச மாட்டாயா?நான் பேசினாலும் பட்டு கத்தரித்தார் போல் பேசி முடித்துவிடுகிறாய் என்று பெருமூச்சு விட்டு எழுந்து குளிக்க சென்றான்.

நகுலனின் அறையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்த நகுலனுக்கு தன் மார்பில் பஞ்சு பொதியாய் தலை வைத்து குழந்தையாய் தூங்கி கொண்டு இருந்த மனைவியின் முகம்தான் முதலில் தெரிந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

காலை வேளையில் இவ்வளவு நெருக்கத்தில் தன்னவளை பார்த்தவன் கனவோ என்றுதான் முதலில் நினைத்தான்.பிறகு நடந்தவை நினைவில் வர சிரித்து கொண்டே அவள் முகத்தை பார்த்து கொண்டு இருந்தவன்.தன்னை கட்டுபடுத்த முடியாமல் அவள் இதழில் மென்மையாக இதழ் பதித்தான்.

லேசாக அவள் அசையவும் மீண்டும் கண்களை மூடி படுத்து கொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தான்.

விடாமல் கதவு தட்டும் சத்தத்தில் கண் விழித்தவள்.ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் விழித்தவள்.தன் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யத்தை பார்த்து நடந்ததை உணர்ந்து,பக்கத்தில் பார்க்க நகுலன் தூங்கி கொண்டு இருந்தான்.

தன் தலையில் தட்டி கொண்டவள்.ஏன்டி கீதா இப்படி பண்ற உன் அறையில் பொம்மையை கட்டி பிடித்து தூங்குவது போல் இவனை பிடித்து தூங்கி கொண்டு இருக்கிறாயே உனக்கு ஏதாவது இருக்கிறதா?நல்ல வேலை இவன் எழுவதற்குள் எழுந்து விட்டோம் இல்லை என்றால் உன்னைபற்றி என்ன நினைத்திருப்பான் என்று தன்னையே வாய்விட்டு மெதுவாக திட்டி கொண்டாள்.

கதவு தட்டும் சத்தம் விடாமல் கேட்க இதோ வருகிறேன் என்று குரல் கொடுத்துவிட்டு கட்டிலில் இருந்து இறங்கினாள்.பழக்கம் இல்லாத புடவை காலை தட்டிவிட என்ன செய்யலாம் என்று யோசித்தவள்.நகுலனை பார்க்க அவன் தூங்குகிறான் என்று நினைத்து கொண்டு புடவையை கழட்டி போர்வை போல் போர்த்தி கொண்டு சென்று கதவை திறந்தாள்.

வெளியே சுவாதி டீ கப்புடன் நின்று கொண்டு இருந்தாள்.நீ தானா நான் யாரோ என்று பயந்துவிட்டேன்.வா சுதி உள்ளே வா இந்த சாரி கட்டிவிடு எனக்குதான் சேரி கட்ட தெரியாதுனு உனக்கு தெரியும்ல,சீக்கிரம் கட்டிவிடு நான் அபி குட்டி என்ன செய்கிறான் என்று பார்க்க போக வேண்டும்.

நைட் தூங்க நேரமாகிடுச்சு அதான் இப்ப தூங்கிட்டேன். அபி எங்கே?என்னை கேட்டானா?

அடுக்கடுக்கான அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் சுவதி அவளை கிண்டலாக பார்த்து சிரித்து கொண்டே இருக்கவும் கடுப்பானவள்.

என்னடி எதுக்கு இப்படி சிரிக்கற?

கீதா.

அவள் நின்ற கோலத்தை கண்ட சுவாதி. நிலமையை புரிந்து கொண்டு அறைக்கு வெளியிலேயே நின்று கொண்டு அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

என்ன மேடம் என்னை சேரி கட்ட சொல்றீங்க?இனி உங்களுக்கு புடவை கட்டிவிடதானே ஒருவரை அப்பாயிண்ட் செய்திருக்கிறது. அவரிடமே கட்டிகோ என்று தோழியாக கிண்டல் செய்துவிட்டு.

முதலில் சென்று தலைக்கு குளித்துவிட்டு வேறு சேரியை கட்டு அதன் பிறகு தான் கீழே வர வேண்டும்.

அபி கீழே விளையாடி கொண்டு இருக்கிறான் என்று தாயாக கண்டித்துவிட்டு டீ கப்புகளை கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.இவள் ஏன் இப்படி சொல்கிறாள் என்று புரியாமல்.டீ ட்ரேயை வாங்கியவள்.உள்ளே இருக்கும் ஸ்டாண்டில் வைத்துவிட்டு திரும்பி நகுலனை பார்த்தாள்.அவன் இன்னும் தூங்குவதை பார்த்துவிட்டு இவன் எழுவதற்குள் வேறு ஆடைகளை எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொள்ள வேண்டும் என்று வேகமாக பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.       

தொடரும்...

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1236}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.