“ஓகே பேபி... பை..ரொம்ப போட்டு குழப்பிக்காத... நான் சீக்கிரம் வந்திடுவேன்.. “ என்று அவளின் கன்னம் தட்டி சிரித்தவாறு காரை ஷ்டார்ட் பண்ண, அவளும் சிரித்து கொண்டே கை அசைத்து வழி அனுப்பினாள்… இதை ஜன்னலின் வழியாக கண்ட பார்வதிக்கு மனம் நிறைந்து இருந்தது..
அப்பொழுது தான் கண்டார் தன் மகளின் தோற்றத்தை....இதுவரை மாப்பிள்ளை வந்த சந்தோஷத்தில் தன் மகளை கண்டுக்காதவர் அப்பொழுது தான் உற்று பார்த்தார்.. ஆதியின் மேக்கப்பில் கோயில் சிலையாட்டம் மிளிர்ந்தாள் பவித்ரா.. அதுவும் கண்ணில் மின்னும் குறும்பும் முகத்தில் ஒரு பொழிவும் அவள் மண வாழ்க்கையில் ஒன்றியிருப்பதை காட்ட தன் மகளின் புதிய தோற்றத்தை கண்டு பூரித்து போனார் பார்வதி...
அவள் இப்படியே எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் என்று வேண்டிகொண்டார்...அதே மகிழ்ச்சியில் , உள்ளே வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்.. இப்போ படாத அடிக்கு என்ன அயோடக்ஷ் தடவ வச்ச மாதிரி...” என்று சிரித்துக் கொண்டாள்...அவளுள் கோபம் இல்லை.. மாறாக அவன் செய்கையை, குறும்பை எல்லாம் நினைத்து சிரித்துக்கொண்டாள்...
பின் ஒவ்வொரு பொருளை பார்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் அவள் மனம் அவனிடமே சென்று நின்றது....அதை கண்டு அதிர்ந்தவள்