“சே!! என்ன இது??... இப்படி நொடிக்கொரு தரம் அவன நினைச்சி கிட்டிருக்கேன்... ம்ஹும்.. இது சரி இல்லை பவித்ரா... நீ உன் ரூட்ல இருந்து மாறாத... உன்ன தன் வழிக்கு கொண்டு வரத்தான் ஏதோ செய்யறான் அந்த நெட்டை.. நீ உஷாரா இரு..உன் சவாலில் இருந்து பின் வாங்கிடாத... ” என்று அவளின் மனசாட்ஷி எச்சரிக்கை மணியை அடிக்க, அதை புரிந்துகொண்டவள் தன்னைத் தானே திட்டி கொண்டு தன் அறையை விட்டு வெளியில் வந்து சமையல் அறைக்கு சென்றாள்..
அங்கு பார்வதி சமைத்துக் கொண்டிருக்க பின்னால் இருந்து அவரை கட்டிகொண்டு அவர் கழுத்தில் முத்தமிட்டாள்...
தன் மகளின் மகிழ்ச்சியான அந்த அணைப்பிலயே அவளின் மனநிலை புரிந்தது அந்த தாய்க்கு... அவரும் சிரித்துகொண்டே
“என்னடி?? அதுக்குள்ள மாப்பிள்ளை ஞாபகமா?? மாப்பிள்ளைக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் எனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 18pt;">பவித்ராவுக்கு எப்பவும் ஷ்கூட்டியில் போவது ரொம்ப பிடிக்கும்.. அதுவும் சில்லென்று காற்று முகத்தில் மோதி, தன் முன்னால் இருக்கும் முடியை ஆசையாக கோதுவதை போல ஒரு சுகம் பரவும்... அதன் சுவாசத்தை உள்ளிழுத்து ரசித்துகொண்டே செல்வது மிகவும் பிடிக்கும்...