சிறிது நேரம் தேய்த்தவள் கை வலிக்க,
“இவ்வளவு இடத்துல தேய்க்க சொல்றானே.. அவ்வளவு பெரிய அடியா??... ஆனால் எங்கயும் வீங்க காணோமே!! “ என்று சந்தேகமாக அவனை பார்த்தாள்...
அவனோ மயக்கத்தில் இருந்து கண் விழித்தவன்
“வாவ்.. சூப்பர் பேபி... உன் பட்டு விரல் பட்டு என் வலி போயே போச்சு.. இப்படி நீ தொடுவனு தெரிஞ்சிருந்தால் உண்மையிலயே பெரிய அடி வாங்கி இருக்கலாம் போல.. “என்று கண் சிமிட்டி சிரித்தான்...
அவன் சொன்னதின் அர்த்தம் புரிய சில விநாடிகள் ஆனது அவளுக்கு...
“அப்படீனா.. அவனுக்கு அடி படவே இல்லையா.. அடப்பாவி.. என்னவோ அடி பட்ட மாதிரியே அப்படி நடித்தானே... எல்லாம் சீட்டிங்க்.. ப்ராடு.. “என்று அவனை முறைத்து அவன் தலையில் ஓங்கி கொட்டுவதற்காக கை ஓங்கவும் பார்வதி சமையல் அறையில் இருந்து வெளியில் வரவும
...
This story is now available on Chillzee KiMo.
...
் அந்த பாவமான முகத்தை கண்டவன்
“”ஹே..டோன்ட் வொர்ரி பேபி.. நான் நிஜமாகவே ஒரு வேலையாதான் போறேன்.. சீக்கிரம் வந்திடறேன்.. மாமியார் சமையலை ஒரு பிடி பிடிக்காமல் எப்படி போவதாம்... “ என்று சிரித்தான்.. அவளுக்கு என்னவோ அவன் வில்லங்கமாக சிரித்ததை போல இருந்தது....அவளின் குழப்பமான முகத்தை கண்டு