(Reading time: 36 - 72 minutes)

இரவு வந்த அர்ஜூன் சுதியிடம் எதுவும் பேசாமல் போய் படுத்துவிட்டான்.ஆனால் அவன் மனதில் மகன் தனக்காக ஏங்கி இருக்கான் என்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

அர்ஜூனின் அமைதியை பார்த்த சுதி தானே அவனிடம் பேச முடிவெடுத்தாள்.

அஜூ எதுக்கு இப்ப முகத்த இப்புடி வச்சிருக்கீங்க.

ஒண்ணும் இல்ல.

அஜூ.

உங்க முகத்த பாத்தாலே தெரியுது.என்னாச்சு சொல்லுங்க.

ஒண்ணும் இல்லை.நீ போய் தூங்கு என்றுவிட்டு கண்களை மூடி கொண்டான்.

சுதியின் வீம்பு கொண்ட மனது போடா ரொம்பதான் பண்ற என்று நினைத்தாலும் காதல் மனது கேட்காமல் போக இப்ப நீங்க சொல்ல போறீங்களா?இல்லையா?

சுதியின் பிடிவாதத்தில் கோபம் கொண்ட அர்ஜூன் வேகமாக அவளை பார்த்து திரும்பி.என்னடி என்ன சொல்லனும் என் மகன் எனக்காக ஏங்கி இருக்கிறான்.அப்பா பாசத்திற்காகவும்,அவரின் அரவணைப்புக்காகவும்,அவருடன் ஊர் சுற்ற வேண்டும் என்ற எண்ணத்துக்காகவும் ஏங்கி இருக்கிறான் இதற்கு யார் காரணம் நீ.நீ மட்டும் தான் நீயும் உன்னுடைய வரட்டு பிடிவாதமும்தான் காரணம்.

என் மகன் என் இரத்தத்தில் உருவானவன்.அவனுடைய வளர்ச்சியையும் அவனின் முதல் மழலை பேச்சையும் கேட்க முடியாத பாவி ஆகிவிட்டேன்.நான் எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை.என் குழந்தையை அதன் வளர்ச்சியை அந்த கடவுள் நான் அறியாமலே செய்துவிட்டார் என்று ஆதங்கத்தில் ஆரம்பித்து அழுகையில் முடித்தான்.

அர்ஜூனின் புலம்பலை கேட்டவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்றாள்.அவள் செல்வதையே பார்த்த அர்ஜூன் என்னிடம் ஏதாவது சொல்லு வது? என்று கேட்டான்.

சுதி அர்ஜூனை இன்னதென்று புரியாத ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்னுடைய கப்போர்டை திறந்து ஏதோ தேட ஆரம்பித்தாள்.

ஹம்ம்...... இங்க ஒருத்தன் பீல்பண்ணிக்கிட்டு இருக்கானே ஏதாவது சொல்லுவோம்னு தோணுதா?நான் பாட்டுக்கு பேசாம படுத்திருந்தாகூட தூங்கி இருப்பேன்.சும்மா படுத்திருந்தவன்கிட்ட வந்து என்னாச்சு,என்னாச்சுனு கேட்டுட்டு பேசிகிட்டு இருக்கும் போதே எந்திருச்சு போயிட்டா.இவள என்னத்தான் பண்றதோ? என்று தனக்குள் புலம்பியவன் மீண்டும் படுத்து போர்வையை தலைவரை இழுத்து மூடி கொண்டு படுத்துவிட்டான்.

யாரோ போர்வையை இழுப்பதை உணர்ந்து யார் என்று எழுந்து பார்த்த அர்ஜூனிடம் சுதி ஒரு பென்டிரைவ்வை நீட்டினாள்.

இத போட்டு பாருங்க. சுதி.

என்ன இது? அர்ஜூன்.

போட்டு பார்த்தாள் தெரிய போகிறது. சுதி.

அவள் சொல்வதை கேட்டவன்.இப்போதைக்கு பார்க்கும் எண்ணம் இல்லை என்றாலும் மனைவிக்காக பார்க்க எண்ணி தன்னுடைய லேப்டாப்பை எடுத்து கொண்டு அமர்ந்தான்.சுதி கொடுத்த பென் டிரைவை சொருகி பார்க்க ஆரம்பித்தான்.

அஜூவிடம் பென்டிரைவை கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்பது போல் படுத்து கொண்டாள் சுதி.வெகு நேரம் கடந்து நீர் அருந்த எழுந்த சுதி கண்டது கண்ணில் நீருடன் தன்னுடைய லேப்டாப்பை பார்த்து கொண்டு இருந்த அஜூவைதான்.

இவன் இன்னும் தூங்காமல் இதைதான் பார்த்து கொண்டு இருக்கிறானா?ஆனால் எதற்கு இந்த கண்ணீர் என்று ஆராய்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தவள்.மணியை பார்த்தாள் அது இரவு இரண்டு என்று காட்டவும் அதிர்ந்து போனவள் மீண்டும் அர்ஜூனை பார்த்தாள்.அர்ஜூன் லேப்பையே பார்த்து கொண்டு இருக்கவும் எழுந்து வந்து அவனது தோள்களை தொட்டாள்.

அஜூ தூங்கலையா?மணி என்னனு பாருங்க. சுதி.

வதுமா தேங்ஸ்டா என்றான் நெகிழ்ச்சியோடு.அப்போதும் அவனது கண்கள் லேப்பைதான் பார்த்து கொண்டு இருந்தது.

எனக்கு எதற்கு தேங்ஸ் இதை செய்தது கீதாதான்.அபியின் ஒவ்வொரு அசைவும் நமக்கு நியாபகமாக இருக்க வேண்டும் என்று சொல்லி அவன் அசைவது முட்டி போட்டது,நடந்தது அனைத்தையும் வீடியோ எடுத்து பென்டிரைவில் ஏத்தி வைத்தாள். நீங்கள் நன்றி சொல்வதாக இருந்தாள் அவளுக்குதான் சொல்ல வேண்டும் என்று அமைதியாக கூறியவள்.இப்போது வந்து படுங்கள் நேரமாகி விட்டது என்று கூறி படுத்துவிட்டாள்.

சுதியின் பேச்சில் முகம் வாடி போனாலும்.தன் மேலுள்ள அக்கறையில்தான் சொல்கிறாள் என்று மனதை தேற்றி கொண்டவன் லேப்பில் இருந்த தன்னுடைய இரண்டு வயது மகனுக்கு முத்ததை கொடுத்துவிட்டே எழுந்தான்.

சுதி சென்று படுத்தாலும் அர்ஜூனின் நடவடிக்கையை ஓரகண்ணால் பார்த்து கொண்டு இருந்தவள்.அவனின் செய்கையில் மனம் நெகிழ்ந்து போனதுடன் மகன் மீதான அவனது பாசத்தை கண்டு வாயடைத்து போனாள்.அர்ஜூன் தன் மன குமுரலை கூறும் போது அவனது கண்களில் தெரிந்த வலி மறைந்து இப்போது அவனது மகிழ்ச்சியை பிரதி பலித்தது. அப்போது தான் வேண்டாம் என்றாலும் பிடிவாதமாக அபியின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்து பென்டிரைவாக ரெடி செய்த தோழிக்கு மனதார நன்றி தெரிவித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.