அர்ஜூனோ தன்னுடைய கவலை அவளை பாதித்ததால்தான் இந்த பென்டிரைவை இப்போது கொடுத்திருக்கிறாள்.என் கவலை உன்னை பாதிக்கிறது என்றால் என்னை எந்த அளவுக்கு நீ விரும்பி இருக்க வேண்டும்.பிறகு ஏன்டி என்னை விலக்கி வைக்கிறாய் என்று மனதோடு புலம்பி கொண்டு இருந்தவன் சீக்கிரம் நீ என்னை புரிந்து கொள்வாய் வது.என் காதல் உன்னை என்னிடம் விரைவில் சேர்க்கும் என்று எண்ணி கொண்டே படுத்தான்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருந்த போதும் அவர்களது மகிழ்ச்சியான வாழ்விற்க்கு ஏதோ ஒரு தடை. அதை சரி செய்ய வேண்டும் என்று இருவருக்கும் எண்ணம் இருந்தாலும் எப்படி என்று தெரியாமல் தவித்தனர்.
நகுலன் கீதாவை சீண்டி கொண்டே அவளுக்கு பல விஷயங்களில் தொல்லை செய்து கொண்டு இருந்தான்.இவனை என்ன செய்வது என்று புரியாமல் கீதா திணறும் அழகை ரசிப்பான்.கீதாவும் வெளியே அவன் மேல் கோபம் போல் காட்டி கொண்டாலும் அவனின் சேட்டைகளை ரசிக்கவே செய்தாள்.
அப்படிதான் ஒரு நாள் அபியும் கீதுவும் ஹைட் அண்ட் சிக் விளையாண்டு கொண்டு இருந்தனர்.அப்போது அபி கண்ணை மூடி கொண்டு எண்ணி கொண்டு இருக்க தங்களுடைய அறைக்கு வந்த கீதா நேரக பாத்ரூமில் சென்று ஒழிந்து கொண்டாள்.அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு வந்த நகுல் தன் அறைக்கு வந்து வெளியில் அழைந்தது கசகசவென்று இருப்பதால் குளிக்க பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
அபி அவனது அறைக்குள் நுழைவதற்கும் இவன் பாத்ரூமில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
பாத்ரூம் கதவு தாழ் போடும் சத்தத்தில் மறைவில் இருந்து வெளியில் வந்த கீதா தனது உடைகளை கலைந்து கொண்டு இருந்த நகுலை பார்த்து அதிர்ந்து போனாள்.அவள் பேச வாய் திறந்த நேரம் கீது எங்க இருக்க என்ற அபியின் சத்தத்தில் வாயை மூடி கொண்டவள் வேகமாக அவன் அருகில் வந்தாள்.
தீடிரென்று தன் முன் நின்றவளை பார்த்தவன் பேச வாய் திறந்த நேரம் அவனது வாயில் கையை வைத்து மூடியவள் சைகையில் அபி வெளியில் இருப்பதை சுட்டி காட்டி அமைதியாக இருக்கும்படி கூறினாள்.
கீது நீ எங்க இருக்க நா உன்னை கண்டுபிடிக்க போறேன்.
அபியின் பேச்சில் அவர்களது விளையாட்டை கண்டு கொண்ட நகுல் தன் விளையாட்டை கீதாவிடம் ஆரம்பித்தான்.
அபி தன் அறையில் இருந்து வெளியில் சென்று விட்டான் என்பதை உறுதி செய்து கொண்ட நகுல்.இப்போது கீதாவை பார்த்தான் விளையாட்டு ஆர்வத்தில் தன்னை ஒட்டி நின்ற மனையாளை பார்த்தவன் அவளது கவனம் முழுதும் வெளியில் அபியிடம் இருப்பதை உணர்ந்து ஷவரை திறந்து விட்டான்.
திடீரென தன் மேல் தண்ணீர் விழவும் திடுக்கிட்டு போனவள் அப்போதுதான் நகுலை கவனித்தாள்.இடுப்பில் டவலுடன் நின்று தன்னையே பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்தவள்.தன்னுடைய செயலால் வெட்கம் கொண்டு சாரி என்று விலகியவள் தன்னுடைய ஆடை முழுவதும் நனைந்து இருப்பதை பார்த்து அவனை முறைத்தாள்.
என்ன பேபி எதுக்கு முறைக்கிற?நீ பண்ணிய வேலைக்கு நான்தான் முறைக்கனும்.நானும் உன்கிட்ட சொல்லலாம்னு வாய திறந்தா என்னோட வாயையும் மூடிட்ட.நீயும் கையை எடுத்த பாடு இல்லை அதான் ஷவரை திறந்து விட்டேன்.நீ பாட்டுக்கு பொறுப்பு இல்லாம இப்புடி வந்து ஒட்டிகிட்டு நிக்கறது மட்டும் என்னோட லட்டுக்கு தெரிஞ்சுது என்னை உண்டு இல்லைனு ஆக்கிருவா.நீ முதல்ல வெளிய போ.
ரொம்பதான் பண்ணாதீங்க.நான் ஒண்ணும் வேணும்னு உங்க வாய மூடல.அபி கண்டு பிடிச்சுறுவானேனுதான் அப்படி நின்னேன்.சாரி போதுமா.அதுக்காக நீங்க என்னோட டிரசை நனைக்கலாமா?
நான்தான் சொன்னனே நீ என்னை பேசவிடலை அதனால் அப்படி செய்தேன் என்று கண்ணில் விஷமத்துடன் கூறியவன் கண்கள் ரசனையாக மனைவியை பார்க்க ஆரம்பித்தது.
வீட்டில் தானே இருக்கிறோம் என்று சாதாரண காட்டன் சுடிதாரில் ஷால் போடாமல் விளையாண்டு கொண்டு இருந்திருப்பாள் போல நீரில் நனைந்ததில் காட்டன் சுடிதார் அவள் உடலோடு ஒட்டி அவளது அப்பட்டமான அழகை அவனுக்கு விருந்தாக்கியது.அதில் அவனது நினைவு திருமண நாள் அன்று தான் பார்த்த காட்சியை நினைவு படுத்தியது.அவளையே மோன நிலையில் பார்த்து கொண்டு இருந்தான்.
அபி போய்ட்டானு நினைக்கிறேன் என்று கூறியவாறு திரும்பிய கீதா அவன் பார்வையில் வாயடைத்து போனாள்.என்ன பார்வை இது என்று.அவளது பேச்சில் தன் நினைவு திரும்பியவன் முதலில் வெளியில் போ என்று கரகரத்த குரலில் கூறி தன்னுடைய தடுமாற்றத்தை மறைத்தான்.