முதலில் நகுலின் பார்வையில் தடுமாறி நின்றவள்.அடுத்து அவன் சொன்ன வார்த்தையில் முகம் சிறுத்து போக வெளியில் வந்தாள்.நான் என்ன பண்ணுனேன் இப்படி சொல்றாரு. ரொம்பதான் லட்டு லட்டுனு உருகறாரு அந்த லட்டு என் கையில் ஒரு நாள் மாட்டட்டும் பூந்தி ஆக்காம விடமாட்டேன் என்று நினைத்தவள். ஏனோ அந்த லட்டு மேல் காரணம் இல்லாமல் கோபம் வருவது எதனால் என்று யோசிக்க மறந்தாள்.
வெளியில் வந்தவள் வேறு உடை மாற்றி கொண்டு அபியை தேடி சென்றாள்.அபி கண்ணத்தில் கை வைத்து கொண்டு தன் தாத்தாவுடன் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்தவள் வேகமாக அவனிடம் சென்றாள்.
அபி என்னாச்சு?ஏன் கண்ணத்தில் கை வைத்து கொண்டு உட்கார்ந்து இருக்கிறாய்?
நீயே கேளுமா நாங்க எல்லாரும் கேட்டு பாத்தாச்சு வாயே திறக்க மாட்டிக்கிறான் என்று அங்கு வந்தார் சுந்தரி.
நீ பால் குடித்துவிட்டு கவலை படு என்று கையில் கொண்டு வந்த பாலை கொடுத்தாள் சுதி.
அப்போதுதான் உள்ளே நுழைந்த அர்ஜூனும் தன் மகனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே வந்து என்னாச்சு ராஜா என்று கேட்டான்.யாருக்கும் பதில் அழிக்காமல் உட்கார்ந்து இருந்தான் அபி.
நகுலும் அவனை பார்த்து கொண்டே படிகளில் இறங்கி கீதாவின் பக்கத்தில் அமர்ந்தான்.
கீதா மீண்டும் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.வாயை திறந்து சொன்னாள்தானே கண்ணா தெரியும் இப்புடி உம்முன்னு இருந்தா எப்படி தெரியும் என்று கேட்டு தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டாள்.ஆம் அபி அவளிடம் கேட்ட கேள்வியில் இவள்தான் திரு திருவென முழிக்க வேண்டியதாக போய்விட்டது.
கீதாவை திரும்பி பார்த்த அபி நீ முதலில் வேறு சுடிதார்தானே போட்டு இருந்த இப்ப வேற சுடிதார் போட்டு இருக்க.என்னோட விளையாடம என்ன ஏமாத்திட்டு குளிச்சியா?நான் ஜெயிச்சா என்ன இந்த வாரம் வெளிய பிக்னிக் கூட்டிட்டு போறேன்னு சொன்னல.அதனாலதான் உன்ன தேடி காண்டு பிடிக்க முடியலனு கவலையா உட்கார்ந்து இருக்கேன்.
நீ என்னடானா ஜாலியா குளிச்சு வேற டிரஸ் போட்டுகிட்டு வந்து கேட்கற உன்ன.... என்று பெரிய மனிதன் போல் சலித்து கொண்டவன் ஆனா எப்ப குளிச்ச நான் எல்லா இடத்திலும் உன்னை தேடி காணாமல் உன்னோட ரூமுக்கும் வந்தேன் அப்ப சித்தப்பாதான் பாத்ரூமிற்கு போனார்.நீ எங்க இருந்த எங்க குளிச்ச என்று படபடவென பொரிந்தான் சின்னவன்.
சின்னவனின் பேச்சில் பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரித்தனர்.சுதி கீதாவை பார்த்தும் அர்ஜூன் நகுலனை பார்த்தும் கிண்டலாக சிரித்தனர்.நகுல் அவர்களை பார்த்து அசடு வழிந்தவன் எனக்கு ஒரு இம்பார்டன்ட் போன் பண்ணனும் பேசிட்டு வர்றேன் என்று எழுந்து தனது அறைக்கு புகுந்து கொண்டவன் அட பாவி அபி இப்புடியா எங்க மானத்த வாங்குவ என்று மகனை செல்லமாக திட்டி கொண்டான்.
கீதாவோ இப்ப என்ன செய்வது இந்த வாண்டு எல்லாத்து முன்னாடியும் இப்புடி மானத்த வாங்குதே என்று கைகளை பிசைந்து கொண்டு இருந்தவள்.ஆபில் விஷயமாக ஒரு ஈ மெயில் செக் பண்ணனும் நான் பாத்துட்டு வர்றேன் என்று வேகமாக ஒடிவிட்டாள்.
ஹே கீது நா கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ என்று அபியும் அவள் பின்னாடியே ஓடினான்.அவன் கவலை அவனுக்கு இல்லை என்றால் பிக்னிக் போக முடியாதே.
கீதாவோ எல்லார் முன்னாடியும் அசிங்கமா போச்சே என்று நொந்து கொண்டு இருக்க அவள் எதிரே வந்து நின்ற அபி கண்களை சுருக்கி கொண்டு கொஞ்சும் குரலில் பிக்னிக் என்று சொல்ல போலாம் என்ற அவளின் சம்மதத்தை வாங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
கீதாவோ பாவி இவன்பாட்டுக்கு எந்திருச்சு போய்ட்டான் ஏதாவது சொல்லி சமாளிச்சு இருக்க மாட்டான்.இந்த சுதி சும்மாவே கிண்டல் பண்ணுவா இனிமே சொல்லவே வேண்டாம் என்ன வச்சி செய்ய போறா.கடவுளே இவக்கிட்ட இருந்து என்ன காப்பாத்து என்று வேண்டி கொண்டாள்.இருந்தாலும் அவளுள் ஏதோ உறுத்தி கொண்டே இருந்தது.என்ன அது என்று யோசித்து கொண்டு இருந்தவளுக்கு அப்போதுதான் உறைத்தது.நகுல் எழுந்து செல்லும் போது அவளை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டே சென்றது.
அட பாவி ஒண்ணும் தெரியாதவன் மாதிரி இருந்துகிட்டு நா முழிக்கறத பாத்து சிரிச்சுட்டா போற உனக்கு இருக்கு என்று மனதினுள் கருவி கொண்டாலும் அவளையும் அறியாமல் அவனது செய்கையை அவள் மனம் ரசிக்கதான் செய்தது.அவனை பழி வாங்க என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்தவள் உனக்கு இருக்குடா என்று தனக்குள் கூறி கொண்டாள்.
கீதாவின் பிளான்படி எல்லாம் செய்தவள் அன்று விரைவாக கிளம்பி ஆபிஸ்கு சென்று விட்டாள்.பின்னே அவள் பண்ணிய வேலைக்கு இங்கு இருந்தாள் நகுல் அவளை என்ன செய்வானோ யாருக்கு தெரியும்.