(Reading time: 36 - 72 minutes)

அபி வந்து வள்ளி பாட்டியை பார்க்க போகலாம் என்று எழுப்பும் வரை தூங்கி கொண்டு இருந்தாள்.அபியின் சத்ததில் எழுந்தவள் அவனை அணைத்து கொண்டு நீயும் என் மகன்தான் . என் வாழ்விற்கு நீ போதும் என்று தணக்குள் பேசி கொண்டவள் வேகவேகமாக அம்மா வீட்டிற்கு கிளம்பினாள்.

ஒரு சிறிய பேப்பரில் அம்மா வீட்டிற்கு செல்வதாக எழுதி வைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

நகுலனிடம் சொல்லிவிட்டாயா என்ற தோழியிடம் பொய்யாக தலையை ஆட்டிவிட்டு கிளம்பிவிட்டாள்.

வீட்டில் அவளை இறக்கிவிட்ட நகுலனுக்கு ஆபிஸில் வேலையே ஓடவில்லை.கீதாவின் நினைப்பே அதிகமாக இருந்தது.திருமண மண்டபத்தில் அவனின் கைகள் அறிந்த அவளின் மென்மையும்,அவன் பேசும் போது அவள் கண்களில் ஏற்பட்ட மயக்கமும்,காரில் வரும் போது ஏதோ ஒரு கோபத்தில் சொன்ன வார்த்தைக்காக அவனை அடிபட்ட பார்வை பார்த்தது என்று அவளது முகமே மாறி மாறி அவனை இம்சித்தது.முடியும் மட்டும் பார்த்தவன் இது வேலைக்கு ஆகாது என்று மேனேஜரை அழைத்து வேலைகளை கூறிவிட்டு முக்கியமான விஷயம் தவிர வேறு எதற்கும் அழைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு காரை எடுத்து கொண்டு பீச்சிற்கு சென்றான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இரவு வெகு நேரம் அங்கு அமர்ந்து அலைகளை ரசித்து கொண்டு இருந்தவன் மனம் கீதாவிடம் பல கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தது.ஏன் லட்டு இப்படி பண்ற நான் காரில் சொன்ன வார்த்தை கேட்டு அடிபட்ட பார்வை பார்த்தாயே அது என்னை ரொம்ப வதைக்கிறது.

நீதான் அந்த நளன் என்று வாயை திறந்து சொல்லமாட்டாயா?எப்போது நீ சொல்வாய்?நீ என்று உன் காதலை சொல்கிறாயோ அப்போதுதான் நானும் வாயை திறப்பேன்.அதுவரை உன்னை சொல்ல வைக்க என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று தனக்குள் கூறி கொண்டான் நளன்.

அவள் கடைசி வரை வாயை திறக்க போவதில்லை. இவன்தான் அவள் பின்னால் ஓட போகிறான் என்று தெரியாமல் அவனுக்குள்ளே சவால் விட்டு கொண்டான்.  

அம்மா வீட்டிற்கு சென்ற கீதா அம்மா,அப்பாவிடம் செல்லம் கொஞ்சி கொண்டும் அபியுடன் வம்பிழுத்து கொண்டும் பொழுதை கழித்தாள்.அதற்கு காரணம் இனி நகுலன் வாழ்வில் தான் இல்லை.லட்டுவிற்கு மட்டுமே இடம் என்று தனக்கு தானே கூறி சுவாதியின் வாழ்வை சரி செய்வதற்கான வழியை யோசித்தாள்.

வீட்டிற்கு சென்ற நகுலன்.கீதாவை பார்க்க வேகமாக தனது அறைக்கு சென்றவனை யாரும் அற்ற அமைதியே வரவேற்றது.இந்த நேரத்தில் இவள் எங்கு போனாள்.அபி அறைக்கு சென்றிருப்பாளோ என்று அங்கு சென்று பார்க்க அபியும் அறையில் இல்லை என்பதை அறிந்தவன்.இந்த நேரத்தில் இவர்கள் எங்கு போனார்கள் என்று யோசித்து கொண்டே படியேறியவன் அர்ஜூன் மீது மோதி நின்றான்.

என்னடா இப்போது தான் வந்தாயா வந்த உடனே அபியை பார்க்க சென்று விட்டாய்.அவன்தான் வள்ளி அத்தையை பார்க்க போயிருக்கிறானே.கீதா சொல்லவில்லை என்று ஆராய்ச்சியாக நகுலனை பார்த்து கேட்டான்.

அர்ஜூன் சொன்னதை கேட்ட நகுலண் என்ன அத்தை வீட்டுக்கு போய்விட்டாளா என்ன திடீரென்று என்று யோசித்து கொண்டு இருக்க அர்ஜூன் கேள்வியில் தன்னை மீட்டு கொண்டவன் அபியும் போவதாக என்னிடம் சொல்லவில்லை.அவள் மட்டும் போவாள் என்று நினாத்தேன் என்று சமாளித்தான்.

உங்கள் இருவருக்கும் அபி என்றால் அதிக விருப்பம் போல,நீங்களும் சீக்கிரம் பெற்று கொள்ளுங்கள் என்று நகுலனை பார்த்து கண்ணடித்து சிரித்துவிட்டு சென்றான் அர்ஜூன்.

தன் அறைக்கு வந்த நகுலனுக்கு கீதா இல்லாத அறை வெறுமையாக இருப்பது போல் இருந்தது.

அங்கு மற்றொரு அறையில் படுத்திருந்த அர்ஜூனுக்கும் மனைவியும் மகனும் இல்லாமல் அறையே வெறுமையாக இருந்தது.

வதுமா எப்படா என்னையும்,என் காதலையும் புரிஞ்சுக்க போற? உன்னுடைய காதல் எனக்கு நீ பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு வேலையிலும் தெரிகிறது.உன்னையும் மீறி சில சமயம் உன் கண்களில் நீ மறைக்க நினைக்கும் உன்னுடைய காதல் வெளிபட்டுவிடும்.நீ என்னை விரும்புகிறாய்.ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அதை என்னிடம் மறைக்க நினைக்கிறாய்.அது என்ன காரணம் என்றுதான் எனக்கு புரியவில்லை.காரணம் எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும் நான் உனக்காக காத்திருப்பேன்.ஒரு முறை உன்னை பிரிந்து நான்பட்ட அவஸ்தையே எனக்கு போதும் மீண்டும் ஒரு முறை என்னால் அந்த பைத்தியம் பிடித்த வாழவிற்கு செல்ல முடியாது.என் அருகிலேயே நீ இருப்பதே எனக்கு சந்தோஷம். அர்ஜூன்.      

தொடரும்...

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1236}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.