(Reading time: 36 - 71 minutes)

கீதாவின் நிலைமைதான் பரிதாபமாக ஆம் கையில்லாத நைட் டிரெஸ் அவளின் முழங்கால் வரைதான் இருக்கும்.மேல் சட்டை முழுதாக இடையை மறைக்காமல் அரை அங்குலம் இடுப்பை காட்டும்.இதை வாங்கி வந்த அன்று வள்ளி கீதாவை பிலு பிலுவென்று பிடித்துவிட்டார்.அதனால் அறைக்குள்ளேயே போட்டு கழட்டி வைத்துவிடுவாள் கீதா.இன்று நகுலனின் முன்பு எப்படி போடுவது என்று திணறி போனாள்.அவள் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் கடைசியில் அபியின் பிடிவாதம் தான் ஜெயித்தது.அவள் சரி என்று ஒப்பு கொண்டு ஆடை மாற்ற சென்றாள்.இவள் எந்த டிரெஸ்க்கு இப்படி பில்டப் கொடுக்கிறாள் என்ற ஆர்வத்தில் அமர்ந்திருந்த நகுலன் அவள் வெளிவருவதை பார்க்க மூச்ச விடவும் மறந்தவனாக அப்படியே அமர்ந்திருந்தான்.

ஹேய்..லட்டு இப்படியெல்லாம் நீ டிரெஸ் பண்ணுவியா? செம்மயா இருக்கடி.உன்ன நார்மலா நைட் டிரெஸ்ல பாத்தாலே எனக்கு கொடுமையா இருக்கும்.நீ இப்படி இருக்கறத பார்த்த இன்னைய நைட்ட எப்படி ஓட்ட போறேன் தெரியலையே.

என்னடா நகுலா உன் கற்புக்கு வந்த சோதனை என்று தணக்குள் புலம்பி கொண்டவன் அபியின் சினுங்கலில் நினைவுலகத்துக்கு வந்தான்.

எதுக்குடா சிணுங்குற அது தான் நீ சொன்ன மாதிரி அம்மா உனக்கு மேட்சா டிரெஸ் போட்டுட்டு வந்துட்டன்ல. கீதா.

நான் அந்த பக்கம் படுக்கனும் நீங்க நடுவுல படுங்க.. அபி இவர்களின் பேச்சை காதில் வாங்கிய நகுலனுக்கு கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?என்ற கேள்வியே மனதில் ஓடி கொண்டு இருந்தது.

நோ......நான் பிக் பாய் கீழே விழமாட்டேன்.நான் இந்த ஓரத்தில்தான் படுப்பேன்...அபி.

அவனின் பேச்சிலேயே கீதா இந்த பக்கம் படுக்க வேண்டாம் என்றும் அதற்கு அவள் சொன்ன காரணத்தையும் ஊகித்தவன். இன்னைக்கு உனக்கு இருக்குடி.முதல் நாளே என்ன படுத்தின,இன்னைக்கு எனக்கு தூக்கம் வரல,நீ சட்னிதான் இன்னைக்கு நடக்கும் எதற்கும் நான் பொறுப்பல்ல,என்ற முடிவுக்கு வந்தவன் படுக்க சென்றான்.

அவன் நல்ல பிள்ளை போல் படுத்து கொண்டு படு கீதா என்ன பயம்.அதான் அவன் கீழ விழ மாட்டேனு சொல்றானுள்ள என்று அபிக்கு சப்போர்ட் செய்வது போல் பேச அபியும் அவனுடன் சேர்ந்து தலையை ஆட்டினான்.வேறு வழி இல்லாமல் நடுவில் படுத்தவள் கதை சொல்ல ஆரம்பித்தாள்.

அபி கதையில் மூழ்கி போக நகுலன் அவள் அழகில் மூழ்கி கொண்டு இருந்தான்.ஒரு வழியாக கதை முடிந்து அபி தூங்க தொடங்கியதும் இவளும்படுத்து கொண்டாள்.

பாதி இரவில் இடையில் ஏதோ ஊர்வது போல் இருக்க விறுக்கென எழ முயற்சிக்க முடியாமல் படுத்திருந்தாள்.நகுலன் தான் அவளின் செயல் அறிந்தவன் போல் அவளை இறுக்கி பிடித்திருந்தானே.

ந...ந..நகுலன் எ..எ..என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?முதலில் என்னை விடுங்கள் உ...உ...உங்கள் கையை எடுங்கள் என்றாள் குளறலாக.அவளும்தான் என்ன செய்வாள்.நகுலன் தன்னுடைய சீண்டலால் அவளை பெண்ணாக மாற்றியது மட்டும் இல்லாமல் அவளை காதலிக்கவும் வைத்துவிட்டானே. அவனின் மனைவி ஆக முடியாதா என்ற ஏக்கத்தில் இருந்தவள். இவன் இப்படி நடந்து கொள்ளவும் தடுக்கவும் முடியாமல் அனுமதிக்கவும் முடியாமல் திணறினாள்.

ம்ம்ம்ம்...... என்று அவள் சொல்வதற்கு எல்லாம் ம் கொட்டியவன்.அவன் மூச்சு காற்று அவள் முதுகில்படுமாறு மேலும் நெருங்கி படுத்து அவளை இறுக்கினான்.

ஹே பேபி பேசாமல் கொஞ்ச நேரம் இருடி என்று ஈண சுரத்தில் குளறினான்.அவளின் பெண்மையின் மென்மையில் மயங்கி கொண்டே.

பேபி என்ற அவனின் சொல் அவளை உசிப்பி விட முதலில் கையை எடுங்கள்.நான் ஒண்ணும் பேபி இல்ல என்று கோபமாக சொல்ல முயன்று தோற்றாள்.

ம்.....ம்.....கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேன் என்றவன். இன்னைக்கு கன்பார்ம் பண்ணிட்டனா,இனிமே சொல்ல மாட்டேன். இடையில் இருந்த அவன் கை அவள் பேபி இல்லை என்பதை உறுதி செய்ய மேல் நோக்கி நகர்ந்தன.

ஏ...ஏ..ஏய்.... என்ன செய்கிறாய் என்று கத்தியவளின் இதழை தன் இதழ் கொண்டு அடைத்து ஒரு கையால் அவளின் இரு கைகளையும் பிடித்து கொண்டு தன் ஆராய்ச்சியை முழுமையாக முடித்த பிறகே இவளின் கையை விட்டான்.அவள் கண்களில் இருந்து கண்ணீர் அவனின் கண்ணங்களை நனைத்த பிறகே தன்னிலை உணர்ந்தவன் அவளிடம் இருந்து தன் இதழ்களை பிரித்து கொண்டு எழுந்து அமர்ந்தான்.

ஒரு பெண்ணாக தன்னிடம் அது காதல் கணவனாகவே இருந்தாலும் அத்து மீறிய முதல் தொடுகையால் உடல் முழுவதும் நடுங்கி கொண்டு இருந்தது.தன் இயலாமையால் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அவளின் நிலையை பார்த்த நகுலன் தலையிலேயே அடித்து கொண்டு சாரி..சாரி...கீது.என்று சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லி கொண்டு இருந்தான்.அவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல்.

கீதாவோ நடந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாக அழுது கொண்டே இருக்க.நகுலன் எழுந்து மற்றொரு அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டு தன்னையே திட்டி கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.