என்ன காரியம் பண்ணிட்டடா.வெண்ணெய் திறண்டு வரும் போது தாழி உடைந்த கதையாய்.இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தாள் அவளே மாறி இருப்பாள்.இப்போதே அவளிடம் மாற்றம் வந்து கொண்டுதானே இருந்தது.
புடவையே கட்ட தெரியாது என்றவள் நான் சொன்னதற்காக வாரம் இரண்டு நாட்கள் அவளாகவே புடவை கட்டி கொண்டு போகிறாள்.மீன் எனக்கு பிடிக்கும் என்று ஞாயிறு அவளே மீன் விதவிதமாக சமைக்கிறாள்.கண்ணை பார்த்து பேச மறுக்கிறாள். நண்பன் என்றவள் மற்ற நண்பர்களை போல் ஏன் என்னிடம் பழக முடியவில்லை.இப்படி அவள் யோசிக்க விடாமல் செய்துவிட்டாயடா மடயா என்று தன்னையே நொந்து கொண்டவன் வெகு நேரம் நடந்து கொண்டு நடந்து கால் ஓய்ந்த பிறகே உறங்க ஆரம்பித்தான்.
அறையில் அழுது கொண்டிருந்த கீதாவிற்கோ,அவன் வெளியே சென்றதும் ஒரு வித குற்ற உணர்ச்சி வந்திருந்தது. நீங்கள் சரியாகதான் இருந்தீர்கள் நான்தான் இது போல் உடையணிந்து உங்களை சோதித்து விட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள்.இனி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுதியையும் அத்தானையும் இணைத்துவிட்டு நான் இங்கிருந்து செல்ல வேண்டும்.இல்லையென்றால் உங்கள் லட்டுக்கு துரோகம் செய்துவிடுவேன் என்று விடிய விடிய அழுதாள்.
ஏன் என்றால் உண்மையில் நகுலனின் தொடுகையில் இவளும் தன்னை மறந்து கொண்டுதான் இருந்தாள்.தன் காதலன்.தன்னுள் முதல் காதலை விதைத்தவன் தன்னை தேடி வரும் போது அவளும் நெகிழதான் செய்தாள்.ஆனால் அவனின் லட்டு?அந்த கேள்வியே அவளது கண்ணீருக்கு காரணம் ஆனது.அவன் என்னுடையவன் இல்லை என்று.
காலையில் கண் விழிக்க முடியாமல் கண்கள் இரண்டும் எரிய கையில் சுரீர் என்ற வலியில் முகத்தை சுருக்கி அம்மா என்று சன்னமாக முணகினாள்.ஊசி போட்டு இருக்கிறேன் இனி ஒரு பிரச்சனையும் இல்லை.சாதாரண காய்ச்சல்தான் என்ற குரலில் யாருக்கு என்ன ஆயிற்று என்று யோசித்து கொண்டு கண் விழிக்க முயன்றவள் முடியாமல் மீண்டும் தூங்கி போனாள்.
வெகு நேரம் உறங்கியவள் பிஞ்சு கரம் தலையை வருடுவதை உணர்ந்து சிரமமாக இருந்தாலும் கண்களை திறந்தாள்.
ஹய்யா....... கீதாமா கண்ணு முழிச்சுட்டாங்க என்ற அபியின் சத்தத்தை கேட்டு வேகமாக அவள் அருகில் வந்தான் நகுலன்.
என்னமா எப்படி இருக்க?இப்ப ஒடம்பு பரவால்லையா? நான் பயந்து விட்டேன். நகுலன்.
ம்..நல்லா இருக்கேன் ஏன் என்னாச்சு. கீதா.
உனக்கு காலையில் இருந்து நல்ல காய்ச்சல்.டாக்டர் வந்து ஊசி போட்டும் நீ கண் திறக்காமல் இருக்கவும் நான் ரொம்ப பயந்து விட்டேன்.
ஓ..அப்படியா..காலையில் கையில் சுருக்கென்று குத்திய வலி வந்ததே.அது ஊசிதானா என்று தனக்குள் பேசி கொள்பவள் போல் பேசி கொண்டவள்.வயிற்றின் சங்கடம் உணர்ந்து நகுலனை பார்த்து சுவாதி எங்கே கொஞ்சம் வர சொல்கிறீர்களா?என்னால் எழ முடியவில்லை.
ஏன் கீதா என்னிடம் சொல் நான் செய்கிறேன்.பசிக்கிறதா பூஸ்ட் கலந்து எடுத்து வரவா?
அ..அது எல்லாம் வேண்டாம்.நான் சுவாதியிடம் சொல்கிறேன் நீங்கள் அவளை வர சொல்லுங்கள்.
அவளின் வார்த்தைகளை கேட்ட நகுலனுக்கு கோபம் வந்தது.அந்த நேரத்தில் அதுவும் உனக்கு காய்ச்சல் வந்திருக்கும் போது நான் என்ன செய்து விடுவேன் என்று என்னுடன் தனியாக இருக்க பயப்படுகிறாய்?நான் ஒன்றும் மிருகம் அல்ல என்னிடமே சொல்.சுவாதியை வர சொல் என்று என்னை மேலும் கஷ்ட படுத்தாதே.நேற்று நடந்ததற்குதான் நான் மன்னிப்பு கேட்டு விட்டேனே இன்னும் என்ன....என்று அவன் பேசி கொண்டே போகவும்.
நான் ரெஸ்ட் ரூம் போக வேண்டும். கீதா.
ஓ.... நானே உதவி செய்கிறேன்.அப்படி பார்க்காதே.தப்பாக இல்லை.அண்ணி கொஞ்சம் வேலையாக இருக்கிறார்கள்.நாளை நாகபட்டினம் செல்ல வேண்டும் என்று எல்லாம் தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நிச்சயம் இனி உன் விருப்பம் இன்றி என் சுண்டு விரல் கூட உன் மேல் படாது.இப்போது வா என்று அவளை தூக்க போனான். அப்போதுதான் உணர்ந்தவளாக இரவு தான் அணிந்திருந்த ஆடையின் நினாவு வர இல்லை என்று சொல்வதற்கு முன்பு நகுலன் அவளை தூக்கி இருந்தான்.தான் வேறு ஆடை அணிந்திருப்பதை பார்த்து ஆச்சரியபட்டவள் சுவாதி மாற்றியிருப்பாள் என்று தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டாள்.
அவளையே கவனித்து கொண்டிருந்த நகுலன்.அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு.நான்தான் உனக்கு காலையில் வேறு நைட்டி மாற்றிவிட்டேன் என்றான் தரையை பார்த்து கொண்டே.