அதை கேட்ட அபி
“அப்படியா மாமா?? .. இல்லையே!! பவித்ரா நல்லவளாச்சே.. யார் என்ன கேட்டாலும் கொடுத்துடுவாளே.. அப்படி என்ன நான் கொடுத்தது அவ கொடுக்கல?? ... “என்று தாடையில் ஒரு விரலை வைத்து அழகாக யோசித்தாள்.. பின் நினைவு வந்தவளாக,
“ஆ கண்டுபிடிச்சுட்டேன்... நான் வாசல்ல நீங்க கேட்காமலே முத்தம் கொடுத்தேன்... அப்பனா பவித்ரா உங்களுக்கு நீங்க கேட்டும் கிஷ் பண்ணலையா?? “ என்றாள் சந்தேகமாக
அதை கேட்டு கன்னம் சிவந்தது பவித்ராவுக்கு... அவளின் அந்த சிவந்த முகத்தையே இமைக்காமல் பார்த்தான் அவள் அறியாமல்
“இந்த வாலை இன்னும் கொஞ்ச நேரம் பேச விட்டா என் வீட்டு கதை எல்லாம் தெருவுக்கு இழுத்திருவா போல இருக்கே.. “என்று புலம்பினாள் பவித்ரா.. அதற்குள் ஆதியும் சிரித்துகொண்டே
“ஆமா.. அபி குட்டி... எல்லாரும் வீ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கோ?? .. இந்த மாமியார்ங்க அலப்பறை தாங்க முடியல.... எப்படி எல்லாம் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க..
எங்க அம்மாவது பரவாலை.. பக்கத்து வீட்டு மாமி அவர் மாப்பிள்ளை வந்திட்டா அவரை தரையில கூட நடக்க விட மாட்டாங்க.. அப்படி தாங்குவாங்க... அப்படி என்னதான் இருக்கோ இந்த மாப்பிள்ளைங்க கிட்ட...