இதுவே நாங்க மாமியார் வீட்டுக்கு போனா, மாமியாருங்க எங்களை இப்படியா கவனிச்சுக்கிறாங்க?? ஏதோ வேண்டாதவ வந்திட்ட மாதிரி இல்லை பண்ணுவாங்க... எல்லாம் நேரம்.. இது எப்பதான் மாறுமோ?? எப்படியோ எனக்கு அந்த தொல்லை இல்ல“ என்று மனதுக்குள் புலம்பியவாறு நடந்தாள்
தன் அறைக்கு சென்றவள் , குளியலறைக்கு சென்று அவனுக்கு நீரை பிடித்து வைத்து
“போய் குளிச்சுட்டு வாங்க.. “என்று முறைத்தாள்..
அவனும் விசில் அடித்தபடியே அவளை பார்த்து மர்மமாக சிரித்தபடியே குளிக்க சென்ற ஐந்தாவது நிமிடம் பவித்ராவை அழைத்தான்..
ஹாலில் தன் அம்மாவுடன் கதை பேசிக்கொண்டிருந்த பவித்ராவும் எழுந்து குளியல் அறைக்கு அருகில் வந்து என்ன வேணும் என்றாள் சிடுசிடுப்புடன்..
“சோப் ஐ காணோம் பேபி.. _” என்றான் சிரிப்பை அடக்கியவாறு
“உள்ள தா
...
This story is now available on Chillzee KiMo.
...
்டும் அழைத்தான்..
அதை கண்ட பார்வதி
“பவி.. மாப்பிள்ளை குளிக்கிற வரைக்கும் நீ அங்கயே இருந்து எல்லா ஹெல்ப் ம் பண்ணிட்டு வா.. சும்மா சும்மா கூப்பிட்டுகிட்டு இருக்கார் பார்.. “ என்று நமட்டு சிரிப்பை சிரித்தார்...
அதை கேட்டு அசடு வழிந்தாள் பவித்ரா.. அவன் மீண்டும் அழைக்கவும்