வேணாம்.. இது எதுவும் அவங்களுக்கு தெரிய கூடாது... அவங்களுக்காக இவன பொறுத்து தான் ஆகணும்.. ஆனாலும் அதுக்காக என் தன்மானத்தை விட்டு கொடுக்க முடியாது... பார்க்கலாம் அப்படி என்னதான் செய்திடுவான் னு “ என்று முடிவு செய்தவள் குளியல் அறைக்கு சென்று முகத்தில் நீரை அடித்து கழுவினாள்...
பின் டவலால் அழுந்த துடைத்து தன் மன கஷ்டத்தை உள்ளே அமுக்கினாள்.. பின் புடவையை கட்டி கொண்டு, தலை சீவி, லேசாக பவுடர் போட்டு,நெற்றியில் பொட்டை வைத்து கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள் பயந்தவாறே எங்க அம்மா இந்த கூத்தை எல்லாம் கேட்டிருப்பாங்களோ என்று..
ஆனால் நல்ல வேளையாக பார்வதி பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்தார்... அவர் அறையில் இல்லை என தெரியவும் நிம்மதி மூச்சு விட்டாள்..
ப ... கிளப்பினான்... அந்த சிறுவர்கள் வெளியில் கையை நீட்டி பார்வதிக்கு டாட்டா காட்ட அவருக்கு இன்னும் மனம் நிறைந்து இருந்தது.. இப்படி எல்லாருடன் இயல்பா இருக்கிறாரே தன் மப்பிள்ளை.. என்று..
அதே பூரிப்புடன் வீட்டிற்கு உள்ளே சென்றார்... அங்கு பவித்ரா தயாராகி ஹாலில் அமர்ந்து இருந்தாள்...
This story is now available on Chillzee KiMo.
...