இரண்டு மூன்று முறை நன்றாக சோப்பு போட்டு தேய்த்த பின்னரே அந்த கீரிமின் பிசுபிசுப்பு போனது.ஹப்பாடா என்று நிமிர்ந்தவள் வந்த அவசரத்தில் மாற்றுடை எடுக்காமல் வந்தது அப்போதுதான் உரைத்தது.ச்ச்ச்ச.....என்ன முட்டாள் தனம் என்று தன்னை நொந்து கொண்டவள்.
சரி எப்படியும் அஜூ வருவதற்குள் வேறு உடை மாற்றிவிடலாம் என்று அங்கிருந்த டவலை எடுத்து உடலில் சுத்தி கொண்டு வெளியே வந்தாள்.அப்போதுதான் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் அர்ஜூன்.
சுவாதியை பார்த்த அர்ஜூன் மூச்சு விடவும் மறந்தவனாக வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.அவனின் வாய்தான் ஒன்றும் பேசாமல் இருந்தது.அவனது கண்கள் சுவாதியின் கலைந்திருந்த தலை கழுத்தில் தான் கட்டிய மாங்கல்யம்.அதற்கும் கீழ் அதிக இடைவெளியில் இருந்த டவலை எதிரியை பார்ப்பது போல் பார்த்தான்.முழங்கால் வரை இல்லாமல் அதற்கு மேலே முடிந்து போயிருந்தது டவல்.வாழை தண்டு போன்று வழ வழ வென்றிருந்த காலில் சரியாக துவட்டாததால் நீர் துளி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து அவனை வெறுப்பேற்றி கொண்டு இருந்தது.
ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து நிற்க முதலில் சுதாரித்த சுவாதி அவனது பார்வையில் முகம் சிவக்க தன் கைகளால் மேல் பக்கம் மறைத்து மீண்டும் பாத்ரூம் பக்கம் செல்ல திரும்பியவள்.அர்ஜூனின் கைகளில் சிக்கினாள்.என்ன மேடம் எங்க ஓட பாக்குறீங்க?
அ..அஜூ...அது வந்து...... சுதி.
அது வந்து...... அஜூ.
அஜூ பிளீஸ் அஜூ என்னை விடுங்கள் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. சுதி.
ஒரு மாதிரினா.எது மாதிரி என்று கேட்டு கொண்டே தன் இரு கைகளையும் அவளது இடையில் வைத்து நகர முடியாதபடி பிடித்து கொண்டவன் அவள் தோள் வளைவில் முகம் புதைத்து அங்கிருந்த நீரை தன் உதட்டால் துடைத்து கொண்டு இருந்தான் அர்ஜூன்.
அவனின் எதிர்பாராத வரவினாலும் திடீர் தாக்குதலிலும் தடுமாறியவள் அவனின் கைகளும் உதடும் எல்லையை மீறி கொண்டு இருப்பதை உணர்ந்தாள்.அவனது செல்ல சேட்டைகளை பொறுக்க முடியாமல் கீழ் உதட்டில் தன் பற்களை அழுந்த பதித்து தன்னுள் மொட்டுவிடும் தன் பெண்மையின் தவிப்பை உணர துவங்கினாள்.
அஜூ முதலில் நாம் இருவரும் பேச வேண்டும் பிறகு........
பேசியது எல்லாம் போதும் இத்தனை வருடங்கள் ஏங்க வைத்த உனக்கு சரியான தண்டனை தராமல் விடமாட்டேன்.அபி கூட பாரு அப்பாக்கு நல்லது செய்யனும்னு வள்ளி அத்தைக்கூட போய்ட்டான் நோ தியரி ஒன்லி பிராக்டிக்கல் என்று அவளின் துண்டில் கைவைத்தவனை தடுத்தவள்.பிளீஸ் அஜூ அந்த லைட் மட்டுமாவது என்று தடுமாற ஓகே என்று ஒத்து கொண்டவன் லைட்டை அணைத்து விட்டு விடி விளக்கை போட்டான்.
அஜூ பிளீஸ் என்றவளின் இதழை தன் இதழ் கொண்டு மூடியவன்.சற்று நேரம் கழித்தே மூச்சு விட அவளை விடுவித்தான். வது குட்டி உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா உனக்கு முழுதாக ஒரு முறை உடை மாற்றியதே நான்தான்.பிறகு எதற்கு இப்படி பண்ணுகிறாய்.உனக்கு சந்தேகம் இருந்தாள் உனக்கு எங்கு எங்கு மச்சம் இருக்கிறது என்று சொல்லவா?
ச்சீ... போங்க அஜூ நீங்க ரொம்ப மோசம்.என்னுடன் பேசவே டைம் இல்லாதவர் போல் டெய்லி லேட்டா வருவீங்க,என்னோட முகத்த பாத்து கூட பேசாம இருந்தீங்க,உங்களுக்கு என் மேல் கோபம்னு நெனச்சு நா எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?
நீங்க என்னனா இப்ப கூலா வந்து நோ பேச்சுனு சொல்றீங்க என்று குறைபட்டு கொண்டாவள்.இப்போது மட்டும் என்னை என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்.இப்பவும் எனக்கு நேரம் இல்லை ஒரு முக்கியமான வேலை இருக்கு என்று சொன்ன அர்ஜூனை என்ன வேலை என்று அவள் நிமிர்ந்து பார்க்க.குறும்பான அவனது பார்வையே அது என்ன வேலை என்பதை அவளுக்கு தெளிவுபடுத்தியது.
நோ..நோ.. அஜூ நான் பேசனும். சுவாதி.
உன்ன பேச விட்டாதானே என்று சொன்னவன் அதற்கு மேல் அவளை பேசவிடாமல் அவனது முக்கிய வேலையை பார்க்க ஆரம்பித்தான்.சீண்டல்களுடனும்,சுவாதியின் சிணுங்களுடனும் அங்கு இல்லறம் என்னும் நல்லறம் அரங்கேறியது.
காலையில் கண் விழித்த சுவாதி தான் இருக்கும் நிலை அறிந்து முகம் சிவந்து போனவள்.எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி முகத்தில் பரவி இருக்க சிறு குழந்தையாக தூங்கும் கணவனின் கன்னம் தொட்டு ஐ லவ் யூ அஜூ என்று மென்மையாக நெற்றியில் முத்தம் இட்டாள்.மீண்டும் அவள் எழ முடியாத படி இருக்கி கொண்டான் அவளது கணவன்.
நீங்கள் தூங்கவில்லையா என்று கேட்டவளை பார்த்து கண் சிமிட்டி சிரித்தவன் நீ எழுந்திரிக்கும் போதே எழுந்துவிட்டேன் நீ என்ன செய்கிறாய் என்று பார்க்க படுத்திருந்தேன் என்று சொல்லி சிரித்தவன் கைகளை மேலும் அவள் இடையில் இறுக்கினான். அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்பதை உணர்ந்தவள் அபி வந்துடுவான் அஜூ என்னை விடுங்கள் என்று குரல் குழைய சொல்ல மகனின் பெயரை கேட்டதும் துள்ளி எழுந்த கணவனை பார்த்து சிரித்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்துவிட்டாள்.