(Reading time: 59 - 118 minutes)

என்னங்க உங்க தம்பி இப்படி பட்டுனு போன வச்சிட்டாரு.

சும்மா வச்சிருக்கமாட்டான் உன்னோட பிரண்டு ஏதாவது சொல்லி இருப்பா.ஏற்கனவே நாம ஏத்திவிட்டதுல காண்டாகிதான் போன்பண்ணுனான்.அநேகமா கீதாவும் அந்த மித்ரனபத்தி பேசி இருப்பானு நெனைக்கறேன் இல்லனா பையன் இவ்ளோ காண்டாகமாட்டானே.நீ எதுக்கும் நாளைக்கு உன் பிரண்டுகிட்ட லேசா போட்டு வாங்கு.இப்ப நாம போகலாம் போயி உடனே அமெரிக்கா செல்வதற்கு டிக்கெட் புக்பண்ணுவோம் என்று இருவரும் தங்கள் அறைக்கு சென்றனர்.

எதுக்குங்க இப்ப அமெரிக்காவுக்கு டிக்கெட். சுதி.

என் உடன் பிறப்பு எப்ப வேண்டும் என்றாலும் அமெரிக்கா கிளம்பலாம்.அப்போது டிக்கெட் கிடைக்காமல் அவஸ்தைபட கூடாது இல்லையா?அதற்குதான். அஜூ.

உங்க தம்பி அதுக்குள்ள கிளம்புவாருனு நினைக்கிறீங்க?

அவன் அன்று புலம்பியதை கேட்டதில் நாளையே கிளம்பினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.ஏனென்றால் அவன் கீதுவ அவ்ளோ லவ்பண்றான்.

எப்படியோ இருவரும் சேர்ந்தால் சந்தோஷம்தான் என்று தங்கள் அறைக்கு வந்தவுடன் அஜூ முதல் வேலையாக வேறு ஒருவர் பேரில் டிராவல்ஸ் ஏஜெண்டிடம் சொல்லி டிக்கெட் புக் செய்துவிட்டுதான் நிம்மதியாகினர் இருவரும்.

அமெரிக்காவில் நகுலனின் மெயிலை பார்த்த கீதாவிற்கு முதலில் போனை கட்பண்ணியதற்கு கோபம் இருந்தாலும் நாளை வீடியோ கால் வருவதாக சொல்லவும் காதல் கொண்ட நெஞ்சம் மகிழ்ந்துதான் போனது.அந்த மகிழ்ச்சியுடனே அவளும் படுத்து கொண்டாள்.

அடுத்த நாள் ஆபிஸ்க்கு சென்ற கீதா வேலையில் மூழ்கி போனாள்.மாலை மித்ரனின் நினைவும் நளனின் நினைவும் வரவே வீட்டிற்கு லாராவுடன் கிளம்பும் போது ஐஸ் கீரீம் வாங்கி லாராவிடம் கொடுத்தனுப்பினாள்.தனக்கு இன்று முக்கியமான வேலை இருப்பதால் மித்ரனிடம் மறக்காமல் கொடுக்க சொன்னாள்.அவளும் சிரிப்பினுடே வாங்கி கொண்டாள்.

வேக வேகமாக வீட்டிற்கு வந்த கீதா முதலில் எதுவும் கால் வந்திருக்கிறதா என்று தன் லேப்டாப்பை செக் செய்துவிட்டுதான் முகம் கழுவி வேறு ஆடைக்கு மாறினாள்.தனக்காக காபி செய்து குடித்து கொண்டே எப்போது போன்பண்ணுவான் என்று காத்து கொண்டு இருந்தாள்.

அதிகநேரம் அவளை காக்க வைக்காமல் வீடியோ காலில் வந்தான் நகுலன்.அவனுடன் பேசி கொண்டு இருந்தவள் ஆபிஸிலும் உட்கார்ந்து கொண்டே இருந்தது முதுகு வலியை ஏற்படுத்த பெட்டில் வைத்துவிட்டு படுத்து கொண்டு பேசினாள்.அவ்வளவு நேரம் நன்றாக பேசி கொண்டு இருந்தவன் பேச்சை நிறுத்தவும் என்னாச்சு நகுலன் என்று கேட்க கண்ணை இருக மூடி திறந்தவன் எழுந்து உட்கார்ந்து பேசு என்றான்.

முடியாது எனக்கு முதுகு வலிக்கிது.ஏன் துறையிடம் மரியாதையாக உட்கார்ந்துதான் பேசனுமோ?

சொன்னா எதுவுமே கேட்கமாட்டியாடி?எழுந்து உட்காருடி என்றான் கோபமாக.

இவன் எதுக்கு இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு கோபப்படறான் என்று வீடியோவில் தான் இருந்த இடத்தை பார்த்தவள் அதிர்ந்தாள்.லோ நெக் டீ சர்ட் போட்டு கொண்டு இப்படி படுத்து கொண்டு இவனுடன் வம்பலந்து கொண்டு இருந்திருக்கிறோமே என்று முகம் சிவந்தவள் அதற்கு மேல் அவனிடம் பேச முடியாமல் வெட்கம் தடை போட மித்ரன் வெயிட்பண்ணுவான் பாய். நாளை பேசுகிறேன் என்று நகுலன் பேச இடம் தராமல் லேப்டாப்பை வேகமாக மூடியவள்.தன்னையே தலையில் அடித்து கொண்டாள்.

லூசு,லூசு என்னபண்ணி வச்சிருக்க அவன் உன்னபத்தி என்ன நினைப்பான்.ச்ச..இந்த டி சர்ட்ட போட்டிருக்கவே கூடாது இனி எப்படி அவன் முகத்தை பார்ப்பது என்று புலம்பி கொண்டு இருந்த அதே நேரம் இங்கு நகுலன் கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தான்.

மித்ரன் காத்திருப்பானாம் அதனால மேடம் அப்பறம் பேசறாங்களாம்.இங்க ஒருத்தன் பேசிக்கிட்டு இருக்கேன் என்னைவிட நேத்து பழகுன அவன்தான் முக்கியமா போய்ட்டானா.இத இப்படியே விட முடியாது ஏதாவது பண்ணனும் என்று தனக்குள் பேசி கொண்டு கூண்டு புலியாக அறையை அளந்து கொண்டு இருந்தான்.

அன்று இரவே சுதி கீதாவிற்கு போன் செய்து பேசியதில் அவளும் மித்ரனைபற்றி பேசியதில்தான் நகுலன் கடுப்பானான் என்பதை கண்டு கொண்டவள்.அவனுக்கு ஷாக் டிரீட்மண்ட் கொடுக்க நினைத்தாள்.அதன்படி அஜூவிடம் நான் நகுலனிடம் பேசி முடித்தவுடன் அமெரிக்க டிக்கெட்டை கேன்சல்பண்ண வேண்டும் என்று தயார்படுத்திவிட்டு நகுலன் வந்ததும் அஜூவுக்கு கண் ஜாடை காட்டிவிட்டு பேச ஆரம்பித்தாள்.

இந்த கீதாவிற்கு எவ்வளவு தைரியம் பாருங்க அஜூ. மித்ரன் கூட வெளிய எங்கயோ வர்ரேனு சொல்லியிருக்கா.பாவம் அவளால போகமுடியல போல அதுக்கு இந்த டேவிட் நாளைக்கு உன் வீட்லதான் தங்க போறேன் என்கூட வராததுக்கு அதுதான் உனக்கு பனிஷ்மண்ட்டுனு சொல்லிடானாம் இவளும் ஓ.கே சொல்லிட்டாளாம்.எனக்கு என்னமோ சரியாவே படல.இவ ஈசியா எல்லாரையும் நம்பிடுவா.அதுதான் எனக்கு கவலையா இருக்கு என்று போலியாக பெரு மூச்சு விட்டாள்.ஓரகண்ணால் நகுலனை பார்த்து கொண்டே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.