ஏன் லட்டு என்னை புரிந்து கொள்ளவேமாட்டாயா?என் காதல் உனக்கு புரியவில்லையா இல்லை புரியாதது போல் நடிக்கிறாயா என்று தன் காதலை அவள் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆற்றாமை இருந்தது அவனது குரலில்.
என்ன நீங்க என்னை லவ் பண்ணுணீங்களா?ஆனா..
ஆனா...என்ன ஆனா சொல்லு என்னென்னவோ பேசி என்னை காயபடுத்திவிட்டாய் இன்னும் என்ன சொல்லு.உன்னிடம் நான் நடந்து கொண்டதை வைத்துகூட உன்னால் என் காதலை உணர முடியவில்லையா?இல்லை எல்லோரிடமும் அப்படி நடந்து கொள்ளும் பொறுக்கி என்று என்னை நினைத்தாயா?என்று விரக்தியில் ஆரம்பித்து கோபத்தில் முறைத்தான்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தவன் அவளின் தோளை பிடித்து எழுந்து நிற்க வைத்தவன் சொல்லுடி சொல்லு பொறுக்கி என்று நினைத்தாயா?ஒவ்வொரு முறையும் உன் விருப்பத்திற்கு முக்கியதுவம் கொடுத்து நான் நடந்து கொண்டது அனைத்தும் உனக்கு ஒரு தோழன் செய்வது போலவா இருந்தது.எத்தனை தோழன் முன்பு இதுவரை நீ உன் உடையை மாற்றி இருக்கிறாய் அவன் சொல்லி வாய் மூடும்முன் அவனை அடிக்க கை ஓங்கி இருந்தாள் கீதா.
அவளின் கையை பிடித்து தடுத்தவன்.நான் என்ன தப்பாக கேட்டுவிட்டேன் இப்போது என்னை அடிக்க கை ஓங்குகிறாய்.சொல்வதை கேட்பதற்கே கையை ஓங்குகிறாய் என் முன்னால் மட்டும் எந்த நம்பிக்கையில் உடை மாற்றினாய். அன்றே உன்னை ஏதாவது செஞ்சிருக்கனும் உன் விருப்பத்திற்க்கு மதிப்பு அளித்து அமைதியாக இருந்ததுக்கு நல்ல பரிசு உன் பிரிவு.
எத்தனை நண்பர்களுடன் பழகுகிறாய் என்னுடன் பேசுவதில் கை கொடுப்பதில் உனக்கு ஏன் தயக்கம் இதற்கு பெயர் என்ன என்று யோசிக்கவே இல்லையா நீ?என்று அவளை பிடித்து உளுக்கினான்.அவன் உளுக்கலில் தோள்பட்டை வலி எடுக்க அவனது கைகளை தட்டிவிட்டவள் கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.
என்னை நிம்மதியாக இருக்கவிடாமல் அழ வைத்துவிட்டு நீ ஏன் இப்போது அழுகிறாய் என்று கோபமாக கேட்டான்.
எனக்கு தெரியும் நளன் எனக்கு தெரியும் ஆனால் இது என்னுடைய காதல் மனது தனக்கு சாதகமாக யோசிக்கிறதோ என்று பயந்தேன் நளா.உனக்கு தெரியுமா அன்று என் ஆபிஸ் பொண்ணோட திருமணத்திற்கு சென்றோமே அப்போதே நான் உங்கள் மீதான காதலை உணர்ந்து விட்டேன்.அந்த சந்தோஷத்தில் வரும் போதுதான் நீங்கள் உங்களுடைய விருப்பம்தான் உங்கள் லட்டுவோட விருப்பம் அப்படி இப்படினு சொல்லி என்னை மூட் அவுட் ஆக்குனீங்க.இதுல என்னை இறக்கிவிட்டுட்டு லட்ட பாத்துட்டு வர்றேனு போய்ட்டீங்க எனக்கு எப்படி இருக்கும் அதான் சரி நீங்களாவது உங்க காதலுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இங்கு வந்தேன் என்று அழுகையினூடே சொல்லி முடித்தாள்.
அவள் சொல்வதை கேட்டவன் உனக்கு பொறாமை வந்து நீயே வந்து உனக்கு வேறு காதலன் இல்லை நீதான் என் காதலன் கணவன் என்று சொல்வாய் என்று வெறுப்பேத்ததான் அப்படி செய்தேன் அதுவே எனக்கு வினையாக முடிந்துவிட்டதா?என்று சோகமாக கேட்டான்.
என்ன?என்று புரியாமல் கேட்டவளை பார்த்தவன்.அன்று அவள் முணகியது காதில் விழுந்ததையும் அவளுக்கு பனிஷ்மண்ட் கொடுக்கவே இப்படி செய்தது.அமெரிக்கா செல்ல அனைவரிடமும் பர்மிசன் கேட்ட அன்று அண்ணனிடம் புலம்பி அழுதது.அவளை பிரிய வேண்டுமே என்ற கவலையில் இரவு லேட்டாக வந்தது,ஏர்போர்ட் வந்து யாரும் அறியாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தது கடைசியாக அண்ணன் அண்ணியின் செயலால் அடித்து பிடித்து பிளைட்டை பிடித்து வந்தது என்று அனைத்தையும் சொன்னவன்.
ஐ லவ் யூ லட்டு.ஐ லவ் யூ சோ மச்.நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை.உன்னை எப்போது பார்க்கில் பார்த்தேனோ அப்போது இருந்து உன்னை காதலிக்கிறேன் பிளிஸ் லட்டு நான் செய்த எல்லா தப்புக்கும் சாரி.நான் செய்தது உன்னை ஹர்ட்பண்ணி இருந்தாள் மன்னித்துவிடு.நீ எனக்கு வேணும் லட்டு.
நகுலன் பேசுவதை ஆச்சரியமாக கேட்டு கொண்டு இருந்தவள். அடபாவி இப்பகூட என் மேல இருக்க காதல்ல வரல உன்னோட பொண்டாட்டிய அந்த மித்ரன் தூக்கிட்டு போயிட போறான்னுதான் வந்திருக்க என்று கோபம் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்டாள்.
அவளை நெருங்கி இடையில் கை கொடுத்து இருக்கியவன் அதுவும் ஒரு காரணம் என்றான் நமுட்டு சிரிப்புடன்.
ஒரு காரணம் என்றால் அப்ப இன்னோரு காரணம் என்றவளை அப்படியே தூக்கியவன் நேற்று வீடியோ காலில் ஒரு சீன் பார்த்தேன்.அது நைட் என்னை தூங்கவிடலை அதான் நேர்ல ஒரு டைம் பாக்கலாம்னு என்று சொல்லி கொண்டே பெட்ரூமிற்கு அவளை தூக்கி வந்திருந்தான்.அவன் எதை சொல்கிறான் என்று நொடியில் புரிந்து கொண்ட கீது ச்சீ....என்ன நளா இப்படி பண்ற.
ஹேய் நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலடி. கல்யாணம் ஆகி இவ்வளவு நாளும் பார்த்து கொண்டு மட்டும்தான் இருக்கிறேன் என்றவன் அவளை மேலிருந்து கீழாக கூர்மையாக பார்த்து கொண்டு இருந்தான்.அவனின் பார்வையில் முகம் சிவந்தவள் தட்டுதடுமாறி பேச ஆரம்பித்தாள்.