அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் சுதி சொன்னதை சொன்னவள்.அதனால் அவள் தன்னையும் மறந்து ஒரு நாள் முழுவதும் இங்கயே அமர்ந்திருந்திருக்கிறேன் என்று ஆச்சரியமாக நகுலனிடம் சொல்லி கொண்டு இருந்தாள்.
கீதாவின் முகத்தை ஊன்றி பார்த்து சற்று நேரம் யோசித்தவனுக்கு எல்லாம் புரிந்தது.தங்களை இணைத்து வைக்கதான் அண்ணனும் அண்ணியும் இப்படி ஒரு நாடகம் நடத்தி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான்.
ஹோ அதனால்தான் நான் வந்தவுடன் என்னை பார்த்து அப்படி அழுதாயா.நான் கூட ஏன் டா இங்கயும் தொல்லை செய்ய வந்துவிட்டாயா என்று அழுகிறாய்னு நினைத்தேன்.
நகுல் சொல்வதை கேட்டு அவனை முறைத்தவள்.நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா?உங்கள் போனுக்கு முயற்சி செய்தாலும் போன் சுவிட் ஆப் நான் என்ன வென்று நினைப்பது.நீங்கள் பிளைட் ஏறிய பிறகுதான் சுதி போன் பண்ணியிருப்பாள் என்று நினைக்கிறேன்.அதனால்தான் இப்படி ஒரு நாள் முழுவதும் போனது கூட தெரியாமல் இருந்திருக்கிறேன். என்னை எப்படி பயமுறுத்திவிட்டாள் அவளை என்ன செய்கிறேன் பாருங்கள் என்று போனிடம் சென்றவளை தடுத்து தன் முன் நிறுத்தியவன்.
ஹேய் லட்டு அவங்க ஏன் அப்படி பண்ணுனாங்கனு உனக்கு இன்னும் புரியலயா?
நகுல் நீங்க என்ன......லட்டு என்று வார்த்தைகளை விட்டு விட்டு சொன்னவளை பார்த்தவன்.
லட்டுதான் என்னோட லட்டு நீதான்.ஆனால் நகுல் இல்லை உன்னுடைய நளன் என்று கூறி கண் சிமிட்டினான்.
கீதா ஒன்றும் புரியாமல் முழித்து கொண்டு இருப்பதை பார்த்தவன்.ஹய்யோ தத்தி இன்னும் இவளுக்கு என்னவெல்லாம் சொல்லி தரனுமோ பேபினு சொன்னா மட்டும் கோபம் வரும் என்று வாய்விட்டு புலம்பினான்.
அவனின் புலம்பலை கேட்டவள் அவன் கைகளை தட்டிவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தவள் என்ன நடந்ததுனு முதல்ல சொல்லுங்க ஒண்ணுமே சொல்லாம எனக்கு புரியலனு சொன்னா என்ன அர்த்தம்.
நீ ஒரு லூசுனு அர்த்தம் என்று வாய்க்குள் முனங்கியவன். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை உட்கார்ந்து இருக்கர போஸ் பாரு என்று தனக்குள் பேசி கொண்டவன் அப்போதுதான் போனை கவனித்தான்.வாய்ஸ் மெஸேஜ் அனேகமாக அண்ணியாகதான் இருக்கும் என்று நினைத்து அதை ஆன் செய்தான்.
ஹாய் கீது செல்லம் என்ன பயந்துட்டியா?நீங்க ரெண்டு பேரும் மனம் விட்டு பேசனும்னுதான் நான் இப்படி செஞ்சேன்.என் வாழ்வை சரி செய்ய நீ உன் வாழ்வை பணயம் வைப்பாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.லூசு மாதிரி கண்டதையும் நினைக்காமல் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க காதல்ல ஈகோ இருக்கவே கூடாது.தம்பி இது உங்களுக்கும்தான் ஓகே இது போதும்னு நெனைக்கறேன் இதுக்கு மேல நீங்க பேசுங்க என்று முடிந்திருந்தது.
சுதியின் பேச்சில் இருந்து அவளுக்கு தங்களைபற்றி தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த கீதா நகுலை பார்த்தாள்.
சுதி பேசுவதை கேட்டு கீதுவின் முகத்தில் வந்து போன மாறுதல்களை கவனித்து கொண்டு இருந்தவன் அவள் பார்ப்பதை பார்த்து என்னவென்று கேட்டான்.
நம்ம விஷயம் சுதிக்கு தெரியுமா?
தெரியும்னுதான் நானும் நினைக்கிறேன் இல்லை என்றால் என்னை இப்படி துரத்தி இருக்க மாட்டார்கள்.
துரத்தினார்களா?! புரியவில்லை.
இப்போதே சொல்ல வேண்டுமா?எனக்கு ரொம்ப பசிக்கிது லட்டு.
பசி என்றவுடன் எழுந்தவள் நீங்கள் குளித்து ரிப்ரெஸ் ஆகி வாருங்கள் நான் ஏதாவது செய்து வைக்கிறேன் என்று கிட்ச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.
சப்பாத்தியும் குருமாவும் அவன் வருவதற்குள் செய்தவள் சமைத்ததால் கசகசவென்று இருக்கவே குளிக்கலாம் என்று நினைத்தாள்.நகுல் வெளியில் வந்தால்தான் அந்த அறைக்குள் செல்ல முடியும் என்று காத்திருந்தாள்.நகுலன் வந்ததும் அவனை சாப்பிட சொன்னவள் தான் குளித்துவிட்டு வருவதாக சொல்லி சென்றாள்.
அவள் குளித்து முடித்து வரும் வரை காத்திருந்தவன் அவள் வந்தவுடன் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர்.முதலிலேயே பசிக்கிறது என்றீர்களே சாப்பிட்டு இருக்கலாமே என்றவளை ஒன்றும் சொல்லாமல் பார்த்தான்.அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருவரும் சாப்பிட்டு எழுந்தனர்.நகுல் பிபிசி சேனல் பார்த்து கொண்டிருக்க கீதா சமையலறையை ஒதுங்க வைக்கும் வேலையை கவனித்தாள்.எல்லா வேலையும் முடித்துவிட்டு வந்தவளை நிமிர்ந்து பார்த்த நகுலன் வேலை முடிந்ததா என்று கேட்க தலையை மட்டும் ஆட்டினாள்.
தனக்கு பக்கத்தில் இருந்த இடத்தை காட்டி உட்கார சொன்னான்.அவள் அமர்ந்ததும் எதுக்கு இப்படி அவசரமாக வந்தாய் என்றான் அவளை பார்த்து கொண்டே.
இந்த கேள்விக்கான பதிலைதான் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே. கீது.
என்ன பதில் சொன்னாய் என்று பொறுமையை இழுத்து பிடித்த குரலில் கேட்டான் நகுல்.
வந்த வேலை முடிந்துவிட்டது என்று.... அவள் இழுத்தாள்.