அப்பா.இந்த சின்ன வயசுல என்னமா நோட் பண்றான் என்று யோசித்து கொண்டு வந்தவள் நகுல் கதவிற்கு அருகில் நின்று கொண்டு அவளையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவள் வெட்கத்தில் முகம் சிவக்க என்னவென்று கேட்டாள்.
அவளின் வெட்கத்தை ரசித்தாலும் அவளை வம்பிழுக்க எண்ணி ஏன்டி எல்லாரையும் இப்படி மயக்கி வச்சர்ரியே என்ன பொடி அது எங்க எனக்கு கொஞ்சம் காட்டு நானும் பாக்கறேன்.
என்ன பொடி நளா... ஒன்றும் புரியாமல் கேட்டவளை நெருங்கியவன் ம்ம்...சொக்கு பொடி.வந்து ஒரு வாரத்தில் இவன் என்ன உனக்கு பாடி கார்டா மாறிட்டான்.நேத்து நைட் கூட ஏதோ வில்லனிடம் ஹீரோயினை விட்டுட்டு போறமாதிரி எப்படி என்னை முறைத்தான் தெரியுமா? எப்படிதான் உனக்குனு இப்படி பிரண்டு வந்து மாட்றாங்களோ தெரியல என்று சலித்து கொண்டான்.
போங்க நளா.அவன் நல்ல பையன் இந்த ஒரு வாரமும் உங்களை எல்லாம் பிரிந்த கவலை தெரியாமல் என்னுடனே இருந்து என் பொழுதை சந்தோஷமாக மாற்றினான்.இவனை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அபி நியாபகம்தான் வரும் என்று நெகிழந்து போய் கூறியவளை பார்த்தவன்.அச்சசோ என்று வேண்டுமென்றே கத்தினான்.
என்ன நளா?என்ன ஆச்சு?என்று பதறி அருகில் வந்தவளை கைகளில் தூக்கியவன்.நீ அபினு சொன்ன பிறகுதான் எனக்கு நியாபகம் வந்தது என் அண்ணன் சொன்ன அட்வைஸ் என்று விஷம்மாக கூறினான்.
என்ன அட்வைஸ் நளா. கீதா.
அன்னைக்கு வள்ளி அத்தை வீட்டுக்கு நீங்க எல்லாரும் போன அன்று நம் அறையில் உன்னை காணவில்லை என்று அபியுடன் இருக்கிறாயா என்று பார்க்க வந்தேன் அப்போது என்னை பார்த்த அண்ணா நீங்களும் சீக்கிரம் குழந்தை பெற்று கொள்ளுங்கள் அபி மீது இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறீர்கள் என்று கூறினார் என்றவன்.கணவனாக இரவு அவன் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான்.அவளும் சிணுங்கி கொண்டே அவனுக்கு வளைந்து கொடுத்தாள்.
மாலை இருவரும் மித்து வீட்டிற்கு செல்ல லாரா அவர்களை வரவேற்று டின்னர் ரெடி செய்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.நகுல் வந்து இரண்டு வாரம் ஆன நிலையில் சென்னையில் இருக்கும் கம்பெனியில் பிரச்சனை என்றும் அவன் வந்தால்தான் சரி செய்ய முடியும் என்ற நிலையில் மனமே இல்லாமல் இந்தியா கிளம்பினான் நகுலன். இப்போதுதான் வந்ததால் உடனே இந்தியாவிற்கு அனுப்ப முடியாது என்று கீதா ஆபிஸில் சொல்லவும்,அவளது விருப்பத்திற்காகவும் டைம் கிடைக்கும் போது இங்கு வருவதாக சொல்லி சென்றான் நகுலன்.
இப்படியே நாட்கள் மாதங்களாக கீதா கருவுற்றாள்.ஆனால் பக்கத்தில் இருந்து பார்த்து கொள்ள முடியாதபடி அமெரிக்காவில் இருப்பதால் ஆளாளுக்கு மாற்றி மாற்றி வந்து அவளை பார்த்து கொண்டனர்.பத்தாவது மாதம் ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் கீதா.
வீட்டின் முதல் பெண் குழந்தை என்று அனைவரும் மகிழ்ந்தனர்.இதற்கிடையே கீதாவின் குடும்பத்துடன் நன்கு பழகிவிட்ட மித்ரன் கீதாவின் மகளை ஏஞ்சல் என்று அழைத்து பேசுவான்.
கீதாவின் மகள் பெயர் வைக்கும் விழாவிற்கு அவர்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் வந்திருந்தனர்.அந்த விழாவிற்கு வந்த மித்ரனுக்கு அனைத்தும் புதிதாக இருந்தது. கீதாவை நெருங்கி ஆச்சரியமாக இதை கேட்டவன் திடிரென்று கீது டார்லிங் இந்த குட்டி ஏஞ்சல நான் மேரேஜ் பண்ணிகிட்டனா எங்க வீட்லயும் இதே மாதிரி நிறைய பேர் வருவாங்களா என்று கேட்க அவனின் பேச்சை கேட்டு அங்கிருந்த அனைவரும் வெளிநாட்டில் இருந்தாலும் சொந்தத்திற்காக பாசத்திற்காகவும் ஏங்கும் மித்ரனை பார்த்து ஆச்சரியமாகவும் அவனது பேச்சில் அதிர்ச்சியாகவும் பார்த்தனர் இந்த வயதில் எப்படி யோசிக்கிறான் என்று.அங்கிருந்த அனைவருக்கும் மித்ரனை பிடித்து போனது.
கீது வேலைக்குனு வந்துட்டு ஒண்ணோட பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துட்ட போல என்று கிண்டல் செய்தால் சுதி. ஆறு மாத கருவுடன் சற்றே மேடிட்ட வயிற்றுடன் சந்தோஷமாக தன்னை பார்த்து சிரிக்கும் தன் தோழியை பார்த்த கீதாவிற்கு நிறைவாக இருந்தது.அங்கு எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆனது.அவர்களின் சிரிப்பை புரியாமல் பார்த்த மித்து.என்ன டார்லிங் நீங்க ஒண்ணுமே சொல்லல என்று சோகமாக கேட்டான்.
நகுலையும்,மித்ரனையும் சேர்த்து வைக்க இதுதான் சமயம் என்று உணர்ந்த கீதா.எனக்கு ஓகே நீ போய் உன்னோட ஏஞ்சலோட அப்பாகிட்ட கேளு.
வ்வாட்......அவர்கிட்டயா....
நகுலுக்கும் மித்ரனுக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தமாகதான் இன்னும் சென்று கொண்டிருந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தால் முகத்தை திருப்பி கொள்வர்.அதனால்தான் கீதா இப்படி ஒரு ஐடியா செய்து இருவரையும் சேர்த்து வைக்க நினைத்தாள்.