“ஆங்க்... இதுக்கெல்லாம் கூடவா நல்ல நாள் பார்ப்பாங்க.. “ என்று வாயை பிளந்தாள் பாரதி
“ஹா ஹா ஹா.. நல்ல நாள் பார்த்தா கூட பரவாயில்லை.. அந்த நாள்ல எந்த நேரத்துல குழந்தை பிறந்தா நல்லா இருக்கும் னு முன்னாடியே ஜோஷியம் பார்த்து, பிறக்காத அந்த குழந்தைக்கு ஒரு கட்டத்தை போட்டு அந்த நேரத்துல தான் குழந்தைய வெளில எடுக்கனும் னு வேற ஆர்டர் போடறாங்க... அதுவும் மில்லி செகன்ட்ஷ் கூட மாறக்கூடாதாம்..
இத போய் நான் எங்க சொல்ல.. எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் இந்த மாதிரியும் சில பேர் இருக்கத்தான் செய்யறாங்க... இதோ இந்த உன் ஜானகி மாமியாரையும் சேர்த்துதான்.. “ என்று ஜானகியை பார்த்து சிரித்தார் சுசிலா..
அதை கேட்டு ஜானகி சுசிலாவை செல்லமாக முறைத்தார்...
“ஹ்ம்ம்ம் அப்படீனா இனிமேல் முகூர்த்த நாள் னா ஐயருங்க எ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ம்ம் சரி டா... நீயே எல்லாம் பொறுப்பா பார்த்துக்கோ.. எந்த குறையும் வரக்கூடாது.. அப்புறம் அங்க நடக்கிறதை எல்லாம் நான் நேரடியா பார்க்கிற மாதிரி ஏற்பாடு செய்... “
“ஹ்ம்ம்ம் நீ நேரா பார்க்கிறதுனா எப்படி செய்யறதுனு தெரியலயே..” என்று முழித்தான் பாரத்
“நம்ம மாம்ஷ் கிட்ட கேளுடா?? “