“அப்புறம் மாம்ஷ்.. எப்படி இவ்வளவு உயரமா வளர்ந்தீங்க??... என்னாலயே உங்கள பார்க்க முடியல கழுத்து வலிக்குது.. “ என்று தன் குறும்பு பேச்சை ஆரம்பிக்க, அருகில் இருந்த அனைவரும் சிரிக்க, தர்மலிங்கமும் சிரித்து கொண்டே
“சரி.. எல்லாரும் வாங்க உள்ள போய் பேசலாம்.. வந்தவங்களை வாசலிலயே நிக்க வச்சுட்டமே.. “ என்று அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார்....
அவர்கள் முன்னே செல்ல ஜானகியும் ஆதியும் பின்னால் சென்றனர்.. வீட்டின் வாயிலை அடைந்ததும்
“கண்ணா.. இது தான் உன் மாமியார் வீடு.. இனிமேல் நீ வாழப்போற வீடு... வலது காலை எடுத்து வச்சு உள்ள போ.. “ என்று மெதுவாக அவன் காதில் சொல்லி கண் சிமிட்டினார்...
“மா... “ என்று செல்லமாக அவரை முறைத்துகொண்டே சிரித்தவாறு வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றான்..
பாரதிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுதான் புரிந்தது...
“சே .. இத எல்லாம் மிஷ் பண்ணிட்டோமே.. அதுவும் அந்த பட்டிக்காடு எப்படி இவர்களையெல்லாம் விட்டு வந்தாள்.. என் அம்மா மேல அவ்வளவு பாசமா?? அவங்க சொன்னாங்கனு கொஞ்சம் கூட யோசிக்காமல் எந்த பொண்ணும் செய்யத் துணியாத காரியத்தை பண்ணி இருக்காளே“ என்று யோசித்து நெகிழ்ந்து போனான்..